Tuesday, June 23, 2015

முருங்கை இலையின் மற்றும் மரம் ஆகியவற்றின் மருத்துவ குணங்கள்.

  முருங்கை இலை தற்பொபழுதைய ஆய்வொன்றின் முடிவின்படி 93% நுரையீரல் புற்று நோய் கலங்களை அழிக்கவல்லது.பச்சை கீரைகள் எல்லாமே சத்துக்கள் நிறைந்தவைகள் என்றாலும் அவற்றிற்கெல்லாம் மகுடமாய் திகழ்வது முருங்கை கீரை என்றால் மிகையாகாது...

உலகிலேயே அதிக சத்துக்கள் நிறைந்ததும், உடலின் முழு ஆரோக்கியத்தையும் சமன் படுத்தக்கூடியதும், அனைத்து வியாதிகளையும் குணப்படுத்தும் அருமருந்தாகவும் விளங்க கூடிய முருங்கை மரத்தின் அனைத்து பாகங்களும் நமக்கு கிடைத்த வரம்...

முருங்கை இலைகளில் இரும்பு, புரதம், தாமிரம், கொழுப்பு, தாதுக்கள், கார்போஹைட்ரேட்கள், கால்சியம், பாஸ்பரஸ், வைட்டமின் சி, வைட்மின் பி காம்ப்ளக்ஸ், சுண்ணாம்புச் சத்து ஆகியவை இருக்கின்றன.

இந்த இலைகளை நெய்யில் வதக்கி சாப்பிட்டால் இரத்த சோகை வராமல் தடுக்கலாம். உடல் அழகும் ,பலமும் , தெம்பும் கிடைக்கும். பல் கெட்டிப் படும். தோல் வியாதிகள் நீங்கும்.

முருங்கை இலை சாறு இரத்தசுத்தி செய்வதுடன் , எலும்புகளையும் வலுப்படுத்தும். கர்ப்பப் பையை வலுப்படுத்தும். தாய்ப்பால் சுரப்பதை அதிகப்படுத்தும் . முருங்கை இலைச்சாற்றுடன் எலுமிச்சை சாறு கலந்து தடவ முகப்பருக்கள் மறையும்.

ஆஸ்துமா, மார்சளி, சைனஸ் போன்ற சுவாசக் கோளாறுகளுக்கு முருங்கை இலை ரசம் அல்லது சூப் மிகவும் நல்ல பலன் தரும். மஞ்சள் காமாலையை குணப்படுத்தும்.. தலைவலி, இடுப்பு வலி ,வாத மூட்டு வலி, உடல் வலி, பித்தம், கை கால் அசதி யாவும் நீங்கும். உஷ்ணம் சம்பந்த பட்ட நோய்கள் நீங்கும். சொறி சிரங்கு, பித்த மயக்கம், கண் நோய், சொரிய மாந்தம் முதலியவை நீங்கும். இருமல், குரல் கம்மல், தொண்டை தொடர்பான நோய்களை நீக்குவதிலும் முருங்கை முக்கிய பங்கு வகிக்கிறது. மலச்சிக்கலை போக்கும். மெலிந்த தேகம் உள்ளவர்கள் வாரம் இருமுறை முருங்கைக் கீரை உண்டு வந்தால் உடல் தேறும்.

முருங்கை இலை இரத்த விருத்திக்கும்,விந்து விருத்திக்கும் சிறந்தது. முருங்கைப் பூ செக்ஸ் பலவீனத்தைப் போக்கும். ஆண்,பெண் இருபாலரின் மலட்டுத் தன்மையை அகற்றும். முருங்கைப் பூவை நாற்பது நாட்கள் உணவில் கலந்து சாப்பிட்டு வந்தால் தாது விருத்தி சீராகி, இல்லற வாழ்க்கையில் உண்டான இடைஞ்சல்கள் எல்லாம் மருந்து மாத்திரைகளும், பக்கவிளைவுகளும் இல்லாமல் பூரண குணமாகும்.

முருங்கைப் பட்டை, உலோகச் சத்துக்கள் நிறைந்தது. உணவில் கலந்த விஷத்துக்கும் நரம்புக் கோளாறுக்கும் இது நல்ல மருந்து.

முருங்கை விதையில் இருந்து தயாரிக்கப்படும் எண்ணையால் வாயுப்பிடிப்பு, மூட்டுவலி குணமாகும்.

கடுமையான இரத்த சீதபேதி, வயிற்றுப் புண், தலைவலி, வாய்ப்புண் ஆகிய வியாதிகளுக்கெல்லாம் முருங்கைக் காய் கை கண்ட மருந்து. முருக்கைகாய் இருதயத்தை வலுப்படுத்துவதுடன், இருதய நோய்களை போக்கி, இரத்தவிருத்தி, தாது விருத்தி செய்யும்.

முருங்கை வேரில் இருந்து எடுக்கப்படும் சாறு காசநோய், கீழ்வாயு, முதுகுவலியை குணமாக்கும்.

இலை, பூ, மரப்பட்டை, வேர் என மொத்த பாகமுமே மனித குலத்தை நோயிலிருந்து மீட்க பயன்படும் முருங்கை.... நமக்கு கிடைத்த வரம் என்று சொல்வது சாலப்பொருந்தும்.

வை பை சார்ஜ் விரைவில்


'வை-பை' இணையதளம் வழியாக செல்போனை 'சார்ஜ்' செய்யும் புதிய தொழில்நுட்பத்தை உருவாக்கும் முயற்சியில் வாஷிங்டன் பல்கலைக்கழக விஞ்ஞானிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

30 அடி தூரம் வரையில் காற்றலை வழியாக வயர்கள் ஏதுமின்றி 'வை-பை' இணையதளம் மூலம் செல்போன்களை 'சார்ஜ்' செய்யும்   ‘power over WiFi’  என்ற நவீன தொழில்நுட்பத்தை இவர்கள் ஆராய்ந்து வருகின்றனர்.

இந்த தொழில்நுட்பமானது வழக்கமாக வை-பை ரூட்டர்களில் இருந்து அனுப்பப்படும் ரேடியோ அலைவரிசை சக்தியை, பயன்பாட்டுக்கான நேரடி மின்சாரமாக மாற்றுவதன் மூலம் செல்போனுக்கு சார்ஜை ஏற்றுகிறது.

ஆனால், தற்போதுள்ள வை-பை தொழில்நுட்பத்தைக் காட்டிலும் இதற்கு சற்று மேம்படுத்தப்பட்ட ஹார்டுவேர் தேவை.

ஒரு ரூட்டரிலிருந்து எவ்வளவு மின்சாரத்தை 'அவுட் புட்' ஆக எடுக்க முடியும் என்பதைக் கண்டறிய புதிய மென்பொருள் ஒன்றும் உருவாக்கப்பட்டு ஆராய்ச்சி நடந்து வருகிறது.

இந்த தொழில்நுட்பத்தை ஏற்கனவே காமிராவில் 17 அடி தூரத்தில் இருந்து ஆராய்ச்சியாளர்கள் சோதனை செய்து பார்த்துள்ளனர். இதில், அதிகபட்சமாக 28 அடி தூரத்தில் டெம்பரேச்சர் சென்சார்கள் பேட்டரியை சார்ஜ் செய்வது உறுதியாகியுள்ளது.

அதேநேரத்தில், சார்ஜ் ஏறும்போது வை-பை இணையதள வேகத்திலும் எவ்விதத் தடங்கலும் ஏற்படவில்லை. இதையடுத்து, ஆராய்ச்சியாளர்கள் வெகு விரைவில் இந்தத் தொழில்நுட்பத்தை அன்றாடப் பயன்பாட்டுக்குக் கொண்டு வர முயற்சி செய்துவருகிறார்கள்.

Thursday, June 18, 2015

வீட்டில் பயன்படுத்தும் வைபையை பாதுகாப்பது எப்படி

வைபை வசதி மூலம் வயர் இல்லாமல் கணினி, லாப்டாப் மற்றும் மொபைல்களில் இன்டெர்நெட் பயன்படுத்த முடியும். இது பலருக்கும் வசதியாக இருப்பதால் இன்று அனைவரும் வைபை பயன்படுத்த ஆரம்பித்துவிட்டனர். சிலர் அஜாக்கிரதையாக இருப்பதால் வைபை பல பிரச்சனைகளுக்கு வழிவகுக்கின்றது.

Wednesday, June 17, 2015

டூத் பேஸ்ட் இல்லாமல் பல் துலக்கும் தூரிகை அறிமுகம் - ஜப்பான்

காலையிலேயே அரை தூக்கத்துல எழுந்து, பேஸ்ட் வைக்காமலேயே வெறும் பிரஷ் எடுத்து பல்லு விலக்கி, எத்தனை முறை, நம்மில் எத்தனை பேரு பல்ப் வாங்கி அசிங்கப்பட்டு இருப்போம். இனிமே அப்பிடி அசிங்கப்படவே வேணாம்ப்பா, ஏன்னா... இனிமே பேஸ்ட் தேவைப்படாது, மிசோக்கா டூத்-பிரஷ் மட்டும் போதும்.

மிசோக்கா - ஒரு நானோடெக் டூத் பிரஷ், இது பேஸ்ட் இல்லாமலேயே பற்களை சுத்தம் செய்யும். இந்த பிரஷின் முட்கள் தண்ணீரில் அசையக்கூடிய நானோஐஸ்டு மினரல் ஐயன்ஸ் மூலம் பூசப்பட்டுள்ளது.

நானோஐஸ்டு மினரல் ஐயன்ஸ் பற்க்களின் இடையே கடந்து செல்லும் அதனால், இதற்கு பற்களின் அழுக்குகளை சுத்தம் செய்து வெண்மையாக்க, டூத்-பேஸ்ட் தேவையே இல்லை. பிரஷை ஒரு கிளாஸ் தண்ணீரில் மூழ்கி எடுத்து, பல் துலக்கிவிட்டு, பின் மறுபடியும் பிரஷை தண்ணீரில் மூழ்கி எடுத்துவிட்டு, வாய் கொப்பளித்தால் போதும், பிரஷிங் ஓவர்..!

மாதத்திற்க்கு ஒருமுறை இந்த பிரஷை மாற்றிக்கொள்ள வேண்டும். இதுநாள் வரை பேஸ்ட்டை மறந்தது போல, பிரஷை மாற்றுவதையும் நாம் மறந்து விடக்கூடாது என்றுதான், இதற்கு மிசோக்கா என்று பெயர் வைத்துள்ளனர், அதாவது மாதத்தின் கடைசி நாள் என்று அர்த்தம். ஜப்பான் மூளை ஜப்பான் மூளைதான்ய்யா..!

உலர் திராட்சையில் உள்ள மகத்தான பயன்கள்.


செடியில் இருந்து பசுமையாக பறித்த பழங்களை உண்பதில் உள்ள சத்துக்களைப் போல உலர் பழங்களை உண்பதிலும் அதிக சுவையும், சத்துக்களும் காணப்படுகின்றன.

நாம் உணவில் சுவைக்காக சேர்த்துக் கொள்ளும் உலர் திராட்சையானது கிஸ்மிஸ்பழம் என்று அழைக்கப்படுகிறது. உலர் திராட்சை பழத்தில் உடலுக்கு வலிமை தரும் சத்துக்கள் நிறைந்துள்ளன.

ஆவாரம் பூ தரும் அற்புத நன்மைகள்

''ஆவாரை பூத்திருக்க சாவாரைக் கண்டதுண்டோ’ என தமிழில் ஒரு சொலவடை உண்டு. சாலையோரங்களில் உதிர்ந்துகிடக்கும் ஆவாரம்பூவில் பல மருத்துவக் குணங்கள் நிரம்பியுள்ளன. அழகுக்காக பல கிரீம்கள் பயன்படுத்தும் தேவையினைக் குறைத்து எளிய அழகூட்டியாக இயற்கையிலேயே அமைந்திருக்கிறது. அழகு விஷயத்தில் ஆவாரம்பூவின் மகிமையை விளக்குகிறார் கோவை ஆர்.வி.எஸ் மருத்துவமனையின் சித்த மருத்துவர், ஜூலியட்  ரூபி.
''ஆவாரம்பூ, உடலுக்குக் குளிர்ச்சி. அந்தக் காலத்தில் நீண்ட தூரம் பயணம் மேற்கொள்பவர்கள், உடலின் வெப்பத்தைக் குறைக்க ஆவாரம்பூ இலைகளைத் துணியில் கட்டி, தலையில்வைத்துக்கொண்டு செல்வார்கள். இதனால் உடல் அதன் வெப்பச் சமநிலையை இழக்காமல் சக்தியைத் தக்கவைத்துக்கொள்வதோடு, உடலுக்குக் குளிர்ச்சியையும் தரும். சருமத்தைப் பொன் நிறமாக மாற்றக்கூடிய ஆற்றலும்கொண்டது.  
பாசிப்பருப்பு, கடலைப்பருப்பு, ரோஜா மொட்டு, வெட்டி வேர், கோரைக் கிழங்கு, விளாமிச்சி வேர், கஸ்தூரி மஞ்சள், ஆவாரம்பூ இதழ்கள் இவற்றைச் சம அளவில் எடுத்து, சிறிதளவு வசம்பு சேர்த்து அரைத்துக்கொள்ளவும். சோப்புக்குப் பதில் இந்த நலங்கு மாவை, தினமும் தேய்த்துக் குளிப்பதன் மூலம் சருமம், பொன் நிறமாக மாறும். சருமம் சுத்தமடைந்து, தேமல், கரும்புள்ளிகள் மறையும். பளபளப்பைத் தந்து ஆரோக்கியமாகவைத்திருக்கும். தொடர்ந்து ஆவாரம்பூவைப் பயன்படுத்திவந்தால் சுருக்கங்களைக் குறைத்து, பளிச் சருமத்தைப் பெறலாம்.
இந்த மாவை மாஸ்க் போலப் பூசி, 15 நிமிடங்கள் கழித்துக் கழுவினால் நல்ல பொலிவையும் குறைந்த செலவில் ஃபேஷியல் செய்த பலனையும் உடனடியாகப் பெற முடியும். மேலும், பார்லரில் செய்யப்படும் ஸ்க்ரப்பிங், ஷைனிங் போன்றவையும் இதிலுள்ள துகள்கள் மூலம் இயற்கையாகவே கிடைத்துவிடுவதால், வேறு எந்த அழகு சிகிச்சையுமே முகத்துக்கும், உடலுக்கும் தேவை இல்லை.
கருத்த கார்மேகக் கூந்தலை விரும்புபவர்கள், தலா 200 கிராம் ஆவாரம்பூ, வெந்தயத்துடன் ஒரு கிலோ பயத்தம்பருப்பைச் சேர்த்து அரைத்து வைத்துக்கொள்ளலாம். தலையில் எண்ணெயை நன்றாகச் சூடுபரக்கத் தேய்த்து, இந்த பவுடரை தண்ணீரில் கரைத்துக் குளிக்கலாம். வாரம் இருமுறை தொடர்ந்து கடைப்பிடித்தால், தலைக்குக் குளிர்ச்சியைத் தந்து கூந்தல் நன்றாக வளர ஆரம்பிக்கும். பொடுகு, பேன் தொல்லையும் நீங்கும். தலைக்கு டை அடிப்பதால் நெற்றியிலும், கன்னத்திலும் சிலருக்கு, கருமை படர்ந்து இருக்கும். இதைப் போக்க, 200  கிராம் ஆவாரம்பூவை அரைத்து, சாறு எடுக்க வேண்டும். இதை அடுப்பில் வைத்துச் சடசடவென ஓசை வந்தவுடன் இறக்கி, இதனுடன் 200 கிராம் ஆலிவ் அல்லது பாதாம் எண்ணெயைக் கலந்து முகத்தில் தினமும் தேய்த்துக் குளித்தால் சுருக்கம், கருமை, தேமல் மறைந்து முகம் பிரகாசமாக ஜொலிக்கும்' என்றார்.
இனி, ஆவாரம்பூவைப் பார்த்தால் விடுவோமா?
ஆரோக்கியம் காக்கும் ஆவாரை!
பட்டைகளை உலர்த்திப் பொடியாக்கி நீரில் கலந்து பூசி வர நீண்ட நாள் புண்கள் ஆறும்.  இந்தப் பொடியைத் தண்ணீரில் கலந்து, நான்கில் ஒரு பங்காகத் தண்ணீர் குறையும் வரை வற்றவைக்க வேண்டும். இந்தக் கஷாயத்துக்கு 'ஆவிரைக்குடிநீர்’ என்று பெயர். தினமும் இரண்டு வேளை 30 மி.லி அளவுக்குக் குடித்து வந்தால் சர்க்கரை, கட்டுக்குள் இருக்கும். பக்கவிளைவுகளும் குறையும்.
பெண்களுக்கு வெள்ளைப்படுதல், உஷ்ணம் ஆகியவற்றுக்கு சிறந்த நிவாரணி.
மல்லிகைப்பூ, ஆவாரம்பூ, சிறுகம்பிழை ஆகியவற்றைச் சேர்த்து கஷாயமாக தயாரித்து பருகிவந்தால் சிறுநீரகக்கற்கள் கரையும்.  இதன் பிசினை 10 கிராம் அளவுக்கு எடுத்து தினமும் நீரில் கலந்து பருகி வந்தால் சிறுநீர் கழிக்கும்போது ஏற்படும் எரிச்சல் குணமடையும்.


Monday, June 15, 2015

ஃபிலே ஆய்வுக்கலன்

வால்நட்சத்திரம் ஒன்றின்மீது இறங்கிய முதலாவது ஆய்வுக்கலனான ஃபைலே, 7 மாதகால உறக்க நிலைக்குப் பின்னர் இப்போது மீண்டும் பூமியுடன் தொடர்பை ஏற்படுத்திக்கொண்டுள்ளது.
ஃபிலே ஆய்வுக்கலன் நல்லமுறையில் இயங்குவதாகவும் அடுத்த நடவடிக்கைகளைத் தொடங்கத் தயாராக உள்ளதாகவும் ஐரோப்பிய விண்வெளி ஆய்வுமையம் கூறுகின்றது.

Thursday, June 11, 2015

நுளம்புத் தொல்லையில் இருந்து பாதுகாக்கும் இயற்கை வழிமுறை .(செய்முறை வீடியோ இணைப்பு )

இன்றைக்கு பல வீடுகளிலும் நுளம்புதொல்லையால் அவதியுறும் மக்கள் மிக அதிகம்.இரசாயன பதார்த்தம் சார்ந்த நுளம்பு கொல்லிகளால் பக்க விளைவுகள் மிக அதிகமாக காணப்படுகிறது.இதனை நிவர்த்திக்கும் பொருட்டு ஒரு எளிய முறையிலான நுளம்பு கட்டுப்படுத்தும் முறை இங்கு விபரிக்கப்படுகின்றது.நீங்களும் இம்முறையை முயற்சி செய்து பயன்பெறுங்கள்.

Tuesday, June 9, 2015

மின்சாரம் இல்லாமல் பயன்படுத்தும் சலவை இயந்திரம் கண்டுபிடிப்பு.(வீடியோ இணைப்பு )


நம்மில் பலருக்கு துணி துவைப்பதென்பது உலக மகாயுத்தம் நடத்துவதற்க்கு சமம். குவியல் குவியலாய் கிடக்கும் அழுக்கு துணிகளை துவைக்கும் ஒவ்வொருவரும், இனிமே சேர்த்து வைக்காம தினம் கொஞ்சம் கொஞ்சமா எல்லா துணியையும் துவைச்சிடனும் என்று வாராவாரம் சபதம் போடுவதும், அதை நிறைவேற்ற முடியாமல் போவதும் வழக்கமாகிவிட்ட ஒன்று.

Monday, June 8, 2015

பேட்டரி வாழ்நாளை 800% அதிகமாக்கும் புதிய கருவி

அமெரிக்காவை சேர்ந்த நிறுவனம் ஒன்று கழற்ற கூடிய மின்கல வகைகளின் வாழ் நாளை 800% அதிகரிக்கும் கருவியை கண்டுபிடித்துள்ளனர்.
0.1 எம்எம் தட்டையாக இருக்கும் இந்த கருவிக்கு பேட்டிரைஸர் என பெயர் வைத்துள்ளனர்.

றேடியோ கதிர்களிலிருந்து குறிப்பிட்ட அளவு மின்சக்தியை தாமாகவே பெற்றுக்கொள்வற்கான புதிய தொழில்நுட்பம்

ஸ்மார்ட் கைப்பேசிகளிலிருந்து வெளியேறும் றேடியோ கதிர்களிலிருந்து (Radio Waves) அவை குறிப்பிட்ட அளவு மின்சக்தியை தாமாகவே பெற்றுக்கொள்வற்கான புதிய தொழில்நுட்பமொன்றை அமெரிக்காவின் ஓஹியோ ஸ்டேட் பல்கலைக்கழகத்தினை சேர்ந்தவர்களால் உருவாக்கப்பட்டுள்ளது.

கர்ப்பப்பை பிரச்சனைகளுக்கு தீர்வு தரும் கற்றாழை

பெண்கள் பெரிதும் பாதிக்கப்படுவது கர்ப்பப்பை தொடர்பான பிரச்னைகளால்தான். சீரற்ற மாதவிலக்கு, அடிவயிற்றில் வலி, கர்ப்பப்பையில் கட்டி, தொற்று, கர்ப்பப்பைப் புற்றுநோய் என அவர்களின் வாழ்க்கைத்தரத்தையே குறைக்கும் அளவுக்குக் கர்ப்பப்பைப் பிரச்சனைகளும் அதிகரித்துள்ளன. 

இஞ்சியும் பாலும் சேர்ந்து தரும் நன்மைகள்.


ஒரு நபர் ஒரு வேளை குடிக்கக்கூடிய அளவுக்கு இஞ்சிப்பால் செய்யறது எப்படி?
ஆள்காட்டி விரல் பருமனில் சிறிது துண்டு இஞ்சியை எடுத்துத் தோலைச் சீவிக்கணும். தோல் சீவிய இஞ்சித்துண்டை நல்லா நசுக்கிட்டு, பிறகு முக்கால் குவளை தண்ணீர் எடுத்து அதில் நசுக்கிய இஞ்சியை போட்டு நல்லா கொதிக்க விடணும். தண்ணீரில் சாரம் முழுவதும் இறங்கி விடும். பிறகு வடிகட்டி சாரை எடுத்துக் கொள்ளணும்.
அப்புறம் அரைக் குவளை காய்ச்சிய பால் எடுத்துக்கொண்டு அத்துடன் வடிக்கட்டிய சாரத்தை கலந்து கொள்ளணும். அத்துடன் தேவையான அளவில் தேன் அல்லது பணங்கற்கண்டு அல்லது சர்க்கரை இனிப்புச் சுவைக்காக சேர்த்துக்கணும். அவ்வளவுதான். இஞ்சிப்பால் தயார். இந்த இஞ்சிப் பாலை காலையில வெறும் வயிற்றில் குடிக்கனும்.

Sunday, June 7, 2015

பூமியின் சுழற்சி வேகம் குறைவதால் ஜூன் மாதத்தில் ஒரு வினாடி அதிகம்

பூமியின் சுழற்சி வேகம் குறைவதால் இந்த ஆண்டு ஜூன் மாதம் ஒரு வினாடி நீண்டதாக இருக்கும் என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
டிஸ்கவர் இதழில் வெளிவந்துள்ள செய்தியின்படி ஒருங்கிணைக்கப்பட்ட உலக நேரமானது ஜூன் 30 ஆம் திகதி நள்ளிரவு 00:00:00 என்று மாறுவதற்கு பதிலாக 23:59:60 இருக்கும் என கூறப்பட்டுள்ளது.
பூமியின் சுழற்சியானது வழக்கத்தை விட ஒரு வினாடி குறைவதால் இது ஏற்படுகிறது. இதனால் பூமியில் உள்ள கடிகாரங்களில் நேரத்தை மாற்றி அமைக்கவேண்டும்.
கூடுதல் வினாடி அல்லது லீப் வினாடி முறையானது முதன் முதலில் 1976 இல் தொடங்கப்பட்டது. அன்று முதல் இதுவரை 26 முறை இது போல் நிகழ்ந்துள்ளது.

தானாக பற்றி எரியும் மனித உடல்கள்.

உயிருள்ள மனிதர்கள் சில வேளைகளில் எந்தவொரு தீ மூட்டியும் இல்லாமல் தானாக தீ பற்றி எரிந்து சாம்பலாகி விடுவதாக நம்பப்படும் நிகழ்வு Spontaneous Human Combustion என்று அழைக்கப்படுகிறது.
இந்த வினோத நிகழ்வு வரலாற்றில் கடந்த 300 ஆண்டுகளில் சுமார் 200 முறை நிகழ்ந்துள்ளதாக கூறப்பட்டாலும், அவற்றில் பெரும்பாலானவை செவிவழிச் செய்திகளாகவே இருந்துள்ளன.
வியட்னாம் போரில் பணிபுரிந்த போர் வீரர் Frank Baker என்பவர் வாழ்விலும் அத்தகைய சம்பவம் ஒன்று நிகழ்ந்துள்ளது.

Fixstars நிறுவனத்தினால் 6TB கொள்ளளவுடைய SSD கார்ட் அறிமுகம்

தற்போது டிஜிட்டல் சாதனங்களில் தரவுகளை சேமிப்பதற்கு (Solid State Disk) SSD கார்ட்களே அதிகளவில் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.
இந்நிலையில் தற்போது Fixstars நிறுவனம் 6TB கொள்ளளவினை உடையதும், 2.5 அங்குல அளவுடையதுமான SSD கார்ட்டினை உருவாக்கி அறிமுகம் செய்துள்ளது.

தாவரபசையினைப் பயன்படுத்திஅதிநவீன மின்கலம் உருவாக்கம்

தாவரங்களில் உள்ள குளிர்மை தன்மையான பசையினைப் பயன்படுத்தி அதிநவீன மின்கலத்தினை ஆராய்ச்சியாளர்கள் வடிவமைத்துள்ளனர்.
இம் மின்கலமானது கூடியஅளவு மின்சக்தியினை சேமித்து வைக்கக்கூடியதாக இருப்பதுடன் மென்மையானதாகவும், பாரம் குறைந்ததாகவும் காணப்படுகின்றது.
இது தவிர மீள்தன்மை (Elastic), வலிமை மிகுந்ததாகவும் இருக்கின்றது.

புதிய அப்பிளிகேஷன் அறிமுகம் : ஒரே நேரத்தில் 200 பேருக்கு அழைப்பினை ஏற்படுத்தலாம்

ஒரே நேரத்தில் 200 பேருக்கு அழைப்பினை ஏற்படுத்தக் கூடிய அப்பிளிகேசன் ஒன்றினை லைன் நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது.
மொபைல் சாதனங்களுக்கான தொடர்பாடல் அப்பிளிகேஷனை உருவாக்கும் லைன் நிறுவனம் முற்றிலும் இலவசமாக தரவிறக்கம் செய்து நிறுவிக் கொள்ளக் கூடியதாக இருக்கும் Popcorn Buzz எனும் இந்த அப்பிளிக்கேஷனை உருவாக்கியுள்ளது.

Saturday, June 6, 2015

ஆய்வுத் தகவல் : ஐந்து வருடங்களுக்குள் நாம் இறந்துவிடுவோமா


ஐந்து வருடங்களுக்குள் நாம் இறந்துவிடுவோமா என்பதை கணித்துக்கூறும் சுவீடன் இணையத்தளம்.
நாங்கள் ஐந்து வருடங்களுக்குள் இறந்து விடுவீர்களா என்பதை இணையத்தளம் ஒன்றில் கேட்கப்படும் கேள்விக்கு பதிலளிப்பதன் மூலம் தெரிந்துகொள்ளலாம்.
இதற்காக சுவீடன் விஞ்ஞானிகள் உருவாக்கிய வலைத்தளத்தில் ஆண்களுக்கு 11 கேள்விகளும், பெண்களுக்கு 13 கேள்விகளும் கேட்கப்படுகின்றன.

உடலில் ஏற்படும் சூட்டை வெறும் 2 நிமிடத்தில் போக்கும் எளிய வழி

வெயில் கால நிவாரணம் 
தற்போது நிலவி வரும் பருவ மாற்றத்தால் நம்மில் பலருக்கு உடலில் அதிக உஷ்ணம்(வெப்பம்) ஏற்படுகிறது, இது முக்கியமாக அதிக நேரம் வெளியில் பயணங்கள் மேற்கொள்வோருக்கும், அதிக நேரம் நாற்காலி, சோபா மீது உட்கார்ந்திருப்பதாலும் ஏற்படுகிறது, இதனால் நம் தலை முடி முதல் கால் வரை உள்ள அனைத்தும் ஆரோக்கியத்தை இழக்கிறது,
இதனால் ஏற்படும் நோய்கள் முக்கியமாக முகப்பரு, தோல் வியாதிகள், தலை முடி உதிர்தல், வாயிற்று வலி, உடல் எடை குறைதல் போன்ற எரிச்சலூட்டும் நிகழ்வுகள் நிகழ்கிறது, இதனை சரி செய்ய நம் சித்த பெருமைக்க அன்றைய காலகட்டத்திலேயே ஒரு எளிய மற்றும் ரகசியமான வழியை உங்களுக்காக கொடுக்கிறோம்.

Friday, June 5, 2015

அமெரிக்க அரசாங்க தகவல்களில் நுழைந்த ஹக்கர்கள்

அமெரிக்க அரசாங்க தகவல்களில் நுழைந்த ஹக்கர்கள்
அமெரிக்க அரசாங்க பாதுகாப்பு தரவுகளில் அத்துமீறி நுழைந்த கணினி ஹக்கர்கள் தொடர்பில் சீன ஹக்கர்களை குற்றஞ்சாட்டியமை பொறுப்பற்றது என்று சீனா கூறியுள்ளது.
சைபர் தாக்குதல் எனப்படும், கணினி வலையமைப்பில் அத்துமீறி நுழைவது குறித்து முழுமையான புலன்விசாரணை நடத்தாது, ஒருவர் மீது சுட்டுவிரலை நீட்டி குற்றஞ்சாட்டுவது விஞ்ஞானத்துக்கு முரணானது என்று சீன வெளியுறவு அமைச்சு கூறியுள்ளது.

தேன் தலைவலியை போக்கும் மருத்துவ குணமுடையது.

கண் திறந்து பார்க்க முடியாத அளவிற்கு சில நேரங்களில் தலைவலி உயிர் போகும். தலைவலிக்கான காரணத்தை கண்டறிவது என்பது அப்போதைக்கு இயலாத காரியம்.
உடனடியாக என்ன நிவாரணம் கிடைக்கும் என்பதையே மனது தேடும். தலைவலிக்கு தேன் சிறந்த நிவாரணம் தரும் மருந்து என்று ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர். மேலும் வீட்டில் உள்ள இயற்கையான பொருட்களின் மூலமும் எளிதில் தலைவலியை போக்கலாம் என்றும் அவர்கள் கூறியுள்ளனர்.

மருத்துவ பயன்மிகுந்த காளான்

காளான்கள், பொதுவாக மழைக்காலத்தில் விளை நிலத்திலும், கள்ளி வேலிக்கு அருகிலும், மக்கிய மரம் குப்பைகளிலிருந்து கூட்டம், கூட்டமாக வளர்ந்து காணப்படும். இந்தப் பகுதிகளில் இயற்கையாகவே காளான் வித்துகள் வளர்ந்து, காளான்களாக வெளியே தோன்றும். இந்த வகைக் காளான்களை, அரிசிக் காளான் என்று கிராமப் பகுதிகளில் அழைப்பதுண்டு. இத்தகைய காளான்களை குழம்பு வைத்துச் சாப்பிடலாம். இவை குளிர் காலங்களில் மட்டுமே கிடைக்கும்.

நிலையான வருமானத்திற்கு காளான் வளர்ப்பு (Training video)

செய்யும் தொழிலே தெய்வம் என்பார்கள். நாம் முன்னேற வேண்டுமானால் உலகில் பல வழிகள் இருக்கிறது. பல தொழில்கள் இருக்கிறது. அதிலும்  சுயமாக முன்னேற நினைப்பவர்களுக்கு உதவுபவை சிறுதொழில்கள். அதிக முதலீடு இல்லாமல், விரைவில் தொழில் தொடங்க இத்தகைய சிறுதொழில்களே மிகவும் சிறந்தவையாக இருக்கிறது. பாருங்கள்! சிறுதொழில் செய்து இப்போது நாட்டில் பலரும் பெரிய தொழிலதிபர்களாக வலம் வந்து கொண்டிருக்கிறார்கள்.

பிரபஞ்ச ரகசிய கண்ணோட்டம்


(How to grow a plant, The age of earth, Future world-Discovery channel, அறிவியலின் வரலாறு, The origin of life - A.I. Oparin ஆகியவற்றில் இருந்து தொகுத்தவை.)
நாம் வாழும் இந்தப் பூமியினை விண்வெளியில் இருந்து பார்த்தோ மெனில் அழகிய வேலைப்பாடமைந்த மிகப் பெரிய பந்து போலக் காட்சியளிக்கிறது. இரவு நேரத்தில் வானத்தைப் பார்க்கும் போது கண்ணில் தெரியும் நட்சத்திரங்களில் அடங்கியுள்ள மர்மங்கள் பற்றிய ஒரு விரிவான தொடர்தான் இந்தப் பிரபஞ்ச ரகசியம்.

செய்தி: வேகமாக பரவும் மெர்ஸ் வைரஸ்

சவுதிஅரேபியா நாட்டில் சுற்றுலா சென்றுவிட்டு கடந்த 20 ஆம் தேதி தென் கொரியா திரும்பிய 60 வயது நபரை மெர்ஸ் நோய் தாக்கி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அவர் மூலம் அந்நாட்டில் உள்ள பல்வேறு நபர்களுக்கும் இந்நோய் பரவியுள்ளது. இதில் ஒரு ஆண், ஒரு பெண் ஆகிய 2 பேர் உயிரிழந்துள்ளதுடன், 35 பேரை இந்நோய் நேரிடையாக தாக்கியுள்ளது.

Thursday, June 4, 2015

பிரபஞ்சத்தின் ரகசியத்தை அறியும் முயற்சியில் விஞ்ஞானிகள்

 விஞ்ஞான கண்டுபிடிப்பின் புதிய யுகத்துக்குள் தாம் இன்று நுழைந்ததாக விஞ்ஞானிகள் நம்புகிறார்கள்.
கடந்த 27 மாதங்களில் முதல் தடவையாக லார்ஜ் ஹட்ரன் கொலைடர் (Large Hadron Collider) ஆய்வுகூடம் தனது முழுச்சக்தியுடன் இயங்கத்தொடங்கியுள்ளது.

Wednesday, June 3, 2015

இயற்கையின் தயாரிப்பு மனிதன் - அரிய புகைப்படங்கள்

ஸ்வீடன் நாட்டை சேர்ந்த Lennart Nilsson 12 ஆண்டுகள் கடின உழைப்பால் எடுத்த கருவறைப்  புகைப்படங்கள்.

1.

உங்களுக்கு கோபம் அதிகமா வருமா?

உடல் நலம் ஆரோக்கியமாக இருக்க வேண்டுமெனில், அதற்கு நிறைய செயல்களை கடைபிடிப்பதோடு, ஒருசிலவற்றையும் அடக்கி வாழக் கற்றுக் கொள்ள வேண்டும். ஒருவர் எதை அடக்க தெரிகிறானோ, இல்லையோ, கோபத்தை அடக்க தெரிந்திருக்க வேண்டும். ஏனெனில் கோபத்தால், ஒருவரது நட்பு எப்படி முறிய வாய்ப்புள்ளதோ, அதேப்போல் உடலில் உள்ள உயிரும் சில சமயங்களில் முறிய வாய்ப்புள்ளது. கோபம் என்பது எந்த நேரத்திலும் வரும்.

முதுமையை விரட்டும் அற்புத மருந்து

தேவை:
– 10 பூண்டு பற்கள்
– 10 எலுமிச்சை பழச்சாறு
– 1 கிலோ ஆர்கானிக் தேன்

செய்முறை:
பூண்டை பொடியாக நறுக்கி தேன் மற்றும் எலுமிச்சை பழச்சாறுடன் நன்றாக கலக்கவும். இதை ஒரு சுத்தமான கண்ணாடி ஜாடியில் மாற்றி 8-10 நாட்கள் ஊறவிடவும்.

முடி வளர சித்த மருத்துவம்

வேப்பிலை ஒரு கைப்பிடி எடுத்து நீரில் வேகவைத்து ஒரு நாள் கழித்து வேக வைத்த நீரைக் கொண்டு தலை கழுவி வந்தால் முடி கொட்டுவது நின்று விடும்.

கடுக்காய், தான்றிக்காய், நெல்லிக்காய் பொடிகளை கலந்து இரவில் தண்ணீரில் காய்ச்சி ஊறவைத்து காலையில் எலுமிச்சை பழச்சாறு கலந்து கலக்கி தலையில் தேய்த்து குளித்து வர முடி உதிர்வது நிற்கும்.

இயற்கை மருத்துவக் குறிப்புகள் மற்றும் பயன்கள்

1. சோற்றுக் கற்றாழையைச் சித்த மருத்துவத்தில் ‘குமரி’ என அழைப்பர். காய கல்பத்தில் அதுவும் ஒரு மூலிகையாகச் சேர்க்கப்படுகின்றது. அதன் நடுப்பகுதியைப் பிளந்து அதன் கசப்பான சாற்றை எடுத
்துச் சற்றே அலசிப் பின் மோரில் கலந்து தினம்தோறும் உண்டு வந்தால், அல்சர் போன்ற நோய்கள் குணமாகும். மேலும் உடலில் இளமைத் தன்மை அதிகரிக்கும்.

Tuesday, June 2, 2015

இயற்கை வேளாண்மை ஆராய்ச்சி உண்மைகள்

இயற்கை வேளாண்மை பற்றிய சந்தேகங்களுக்கு பதில் சொல்லும் வகையில் இந்தியாவில் வெளி வந்துள்ள ஆராய்ச்சி புத்தகத்தை பார்த்தோம்.
இப்போது உலகத்திலேயே மிகவும் புகழ் பெற்ற  University  of California Berkeley பல்கலைகழகத்தில் ஆய்வு மேற்கொண்ட ஆராய்ச்சியில் தெளிவாக வந்துள்ள முடிவுகள்:

கொய்யாக் கனியினால் கிடைக்கும் மருத்துவ நன்மைகள்.

கொய்யாக்  கனியின் சுவையை அறியாதவர்கள் யாரும் இருக்க முடியாது.
கொய்யா வீட்டுத் தோட்டங்களிலும் வயல் வரப்புகளிலும் வளர்க்கப் படும் மரவகையாகும்.  இது இந்தியா, இலங்கை, மியான்மர் நாடுகளில் அதிகம் வளர்க்கப்படுகிறது.
இதற்கு ஜாம்பலா, கோவா, பலாம்பர் என்ற பெயர்களும் உண்டு.
இதன் கிளைகள்  வழுவழுவென்று காணப்படும்.  இலைகள் தடித்து காணப்படும்.  கொய்யாக்கனி அதிக மருத்துவக் குணம் கொண்டது.

வண்ணத்துப்பூச்சியின் வானவில் ரகசியம்

விதவிதமான வண்ணத்துப் பூச்சிகளின் சிறகுகள் மிளிர்வதை நாம் கண்டு  வியந்திருக் கின்றோம். அதனை துரத்தி பிடித்திருக்கின்றோம். ஆனால், அதன் சிறகுகளின் நிறம் பற்றிய ரகசியம் அறிய சிந்தனையை செலுத் தியதில்லை. அமெரிக்காவின் யேல் பல்கலைக் கழகத்தின் ஆராய்ச்சியாளர்கள் வினோத் குமார், சாரநாதன் தலைமையில் மேற் கொண்ட ஆராய்ச்சியில் அத்தகைய மிளிர்வுக்கு காரணம் நிறமிகள் அல்ல, செல்களின் அமைப்புதான் என்று கண்டறிந்துள்ளனர்.

புற்றுநோய்க்கு புதிய மருந்து; 60 சதவீதம் பேருக்கு குணம் தெரிந்தது

புற்றுநோய்க்கு புதிய மருந்து நம்பிக்கையளிப்பதாக கூறப்படுகிறது
புற்றுநோய்க்கு புதிய மருந்து நம்பிக்கையளிப்பதாக கூறப்படுகிறது
புற்றுநோயை குணப்படுத்த கொடுக்கப்படும் இரண்டு வெவ்வேமருந்துகளை ஒன்றாக சேர்த்துக் கொடுத்தபோது, மெலனோமா எனப்படும் முற்றிய தோல்புற்றுநோய் வகையினால் பாதிக்கப்பட்டவர்களில் 60 சதவீதமானோரின் புற்றுநோய்க் கட்டிகள் சுருங்கிவிட்டதாக பிரிட்டனில் நடத்தப்பட்டுள்ள ஆய்வொன்று கண்டறிந்துள்ளது.

இயற்கை முறையில் மூட்டு வலிக்கான நிரந்தர தீர்வுகள்

மூட்டு வலி வரக் காரணம் மூட்டு தேய்மானமே. இந்தப் பிரச்சினை இல்லாத இடமே உலகத்தில் இல்லை எனலாம். மூட்டுத் தேய்மானம் இரண்டு வகைப்படும்: 
1. மூட்டழற்சி(osteo arthritis):இது பெரும்பாலும் வயதானவர்களுக்கே வரும் இது பொதுவாக இடுப்பு மூட்டு, கால் மூட்டு, தோள்பட்டை, கழுத்து போன்ற பகுதிகளில் ஏற்படும். 

Monday, June 1, 2015

விண்வெளி மாபெரும் வெடிப்பு பற்றிய ஆய்வு

நாம் வாழ்கின்ற விண்வெளி, ஆயிரத்து 400 கோடி ஆண்டுகளுக்கு முன் நிகழ்ந்த ஒரு மாபெரும் வெடிப்பால் உருவானது. இப்போது மிகவும் புகழ்பெற்று பரவி வரும் The Bid Bang Theory எனும் அமெரிக்க தொலைக்காட்சி தொடரின் பாடலில் இதை தெரிவிக்கின்றது. இந்த மாபெரும் வெடிப்பு நிகழ்வதற்கு முன், விண் வெளி ஒரு தனித்தன்மையான வடிவத்தில் நிலவியது. அந்த மாபெரும் வெடிப்பு பின்பு, விண்வெளி மிக விரைவாகநம்ப முடியாத வேகத்தில் அதிகரித்த வளர்ந்து, தற்போதைய வடிவமாக மாறியது.

ஒரு லிட்டர் நீரில் தயாரிக்கப்படும் விளக்குகள்

8வது உலகின் எதிர்கால எரியாற்றல் உச்சி மாநாடு( World Future Energy Summit)ஐக்கிய அரபு எமிரேட்ஸில் நடைபெற்றது. ஒன்று லிட்டர் (liter) ஒளி எனும் அறிவியல் தொழில் நுட்பச் சாதனை காரணமாக, பிலிப்பைன்ஸ் சேர்ந்த டியாஸ் என்பவர், இந்த உச்சி மாநாட்டில் அபுதாபி எதிர்கால எரியாற்றல் விருதைப் பெற்றுள்ளார். 

5ஜி தொழில் நுட்பத்தின் எதிர்காலம்

ஸ்பெயினின் பார்சிலோனா நகரில் நடைபெற்ற உலகச் செல்லிட செய்தித்தொடர்பு மாநாட்டில் பல கண்காட்சி திடல்களில் 5ஜி என்ற மிகப் பெரிய வாசகம் காணப்பட்டது. 5ஆவது தலைமுறை இணையக் காலம் இன்னும் வரவில்லை என்றபோதிலும், இது தொடர்பாக தொழில் நுட்பத்தின் ஆராய்ச்சியும் வரையறையின் உருவாக்கமும், வரலாற்றில் தவிர்க்க முடியாத போக்காக மாறியுள்ளது. 
தற்போது, 4ஜி என அழைக்கப்படும் 4ஆவது தலைமுறை இணையம், உலகில் முழுமையாக பரவல் செய்யப்படாமல் உள்ளது.

சீன மருத்துவம் பற்றிய ஒரு சிறு தொகுப்பு

பல நூற்றாண்டுகளாக படிப்படியாக கொள்கை முறையிலும் நடைமுறையிலும் உருவெடுத்துள்ள சீன மருத்துவத்தில் அக்குபங்ச்சர்மூலிகை மருந்துசீங்கு பத்திய மருந்து ஆகியவை ஆகியவை முக்கியமான அம்சங்களாகும்.



ரோபோ சிறுத்தையை உருவாக்கி அமெரிக்க நிபுணர்கள் சாதனை (watch video)

பாய்ந்து செல்லும் ரோபோ சிறுத்தையை அமெரிக்க நிபுணர்கள் உருவாக்கி சாதனை படைத்துள்ளனர்.பலவிதமான ரோபோக்கள் உருவாக்கப்பட்டு வருகின்றன இந்த நிலையில் அமெரிக்காவின் மகா சூலுட்ஸ் தொழில்நுட்ப ஆராய்ச்சி மையத்தை சேர்ந்த நிபுணர்கள் பாய்ந்து செல்லும் ரோபோ சிறுத்தையை தயாரித்துள்ளனர்.

எளிதான முறையில் நமது உடலின் நச்சுகளை வெளியேற்றும் சித்தர்களின் மருத்துவமுறை(சீன மருத்துவம்)


நமது பாதங்கள் சக்திவாய்ந்தவை. உடல் உள்ளுறுப்புகளின் நரம்புகள் நமது பாதத்தில் முடிகின்றது. சீன மருத்துவத்தில் இதை மெரிடியன் என்று சொல்லுவார்கள். இந்த மெரிடியன்கள் நமது உள்ளுறுப்புகளின் பாதையாக செயல்படுகிறது. சிலர் இதை மறுப்பதுண்டு. ஆனால் சீன மருத்துவத்தை கற்றவர்களும், அறிந்தவர்களும் மெரிடியனும் நமது நரம்பு மண்டலங்களும் ஓன்றோடு ஒன்று சம்பந்தபட்டவை என்பதை அறிவார்கள்.