Friday, June 5, 2015

மருத்துவ பயன்மிகுந்த காளான்

காளான்கள், பொதுவாக மழைக்காலத்தில் விளை நிலத்திலும், கள்ளி வேலிக்கு அருகிலும், மக்கிய மரம் குப்பைகளிலிருந்து கூட்டம், கூட்டமாக வளர்ந்து காணப்படும். இந்தப் பகுதிகளில் இயற்கையாகவே காளான் வித்துகள் வளர்ந்து, காளான்களாக வெளியே தோன்றும். இந்த வகைக் காளான்களை, அரிசிக் காளான் என்று கிராமப் பகுதிகளில் அழைப்பதுண்டு. இத்தகைய காளான்களை குழம்பு வைத்துச் சாப்பிடலாம். இவை குளிர் காலங்களில் மட்டுமே கிடைக்கும்.

அறிவியலில் ஏற்பட்டுள்ள முன்னேற்றங்களால், தற்போது உணவுக் காளான்களை செயற்கை முறையில் வீடுகள், குடில்கள், ஆய்வுக் கூடங்கள், ஆராய்ச்சி மையங்கள் உள்ளிட்ட இடங்களில் அதிகளவில் உற்பத்தி செய்து, ஒரு தொழிலாக மேற்கொண்டு, குறைந்த காலத்தில் அதிக லாபம் பெறுகிறார்கள்.
குளிர்ப் பகுதிகளில் வெண் மொட்டுக் காளானும், வெப்பப் பகுதியில் சிப்பிக் காளான், பால் காளான், நெல் வைக்கோல் காளானும் அதிக அளவில் வளர்க்கப்படுகின்றன. இந்தக் காளான்களை பக்குவப்படுத்தி பல்வேறு விதமான உணவு வகைகளாகத் தயாரித்து உண்ணலாம். அவை, நமது உடலுக்கு சக்தியைத் தருவதோடு புரதம், வைட்டமின்கள், தாதுப்பொருள்களை அளிக்கிறது.
காளான், சர்க்கரை நோய்க்கு ஒரு சிறந்த மருந்தாகப் பயன்படுத்தப்படுகிறது. இதில், கொழுப்புச் சத்து மிக, மிகக் குறைவு. எனவே, தற்போதுள்ள தட்ப, வெட்ப சூழ்நிலையின் காரணமாக, அனைவருமே காளானை உள்கொண்டால், நோயின்றி நீண்ட நாள் வாழலாம்.
மருந்துகளாகப் பயன்படும் காளான்கள்: அகாரிகஸ் கேம்பஸ் டிரிஸ், பிளாமுளினா வேலுடி பெஸ், லெண்டினஸ் எடோடஸ், கார்ட்டினெல்லெஸ் ஷிட்டேக், கோப்பரைனஸ் கொமேட்டஸ், கல்வேஷியா ஜெய்ஜான்டியா, போரியோலஸ் வெர்சிகலர்ஸ், பாலிபோரஸ் உள்ளிட்ட காளான் இனங்கள், மருந்துகள் தயாரிக்க பயன்படுத்தப்படுகின்றன.
மருத்துவக் குணங்கள்: பாக்டீரியா நோய்கள், பூஞ்சாண நோய்கள், புற்று நோய்கள், இன்புளுயன்ஸô காய்ச்சல், சுரப்பிகளின் வீக்கம், நரம்புக் கோளாறு, காக்காய் வலிப்பு, மூளை நோய், வலிமை குறைவு, தாம்பத்திய உறவுக்கு, முதுமை குறைவு, காய்ச்சல், நீரிழிவு நோய், எய்ட்ஸ், பேதி, பித்த சுரப்பி கோளாறு நோய்கள், குடல் கோளாறு, காது வலி, மஞ்சள் காமாலை, மூட்டு வலி, நீர்க்கோர்த்தல் உள்ளிட்ட நோய்களைக் காளான் கட்டுப்படுத்துகிறது.
காளான் வளர்ப்பின் பயன்கள்: வேளாண்மையைச் சார்ந்த ஒரு துணைத் தொழில். இது சுவைமிக்க, மணம் மிகுந்த உணவுப் பொருள். புரதம் மற்றும் நார்ச் சத்து நிறைந்த, மாவுச் சத்து மற்றும் கொழுப்புச் சத்து குறைந்த ஒரு மருந்துப் பொருள்.
பண்ணைக் கழிவுகளை பணமாக்க உதவும். குறைந்த பரப்பளவில், குறைந்த முதலீட்டில் நிறைந்த நிகர லாபம் தரும் தொழில். பயிர் சாகுபடி செய்யாத காலங்களில் வருவாயை ஈட்டித் தரும் ஒரு தொழில். சிறந்த எருப்பொருள், மகளிருக்கு ஏற்ற சுய தொழில் மற்றும் நோயாளிகளுக்கு உகந்த உன்னத உணவுப் பொருளாகப் பயன்படுகிறது.