Monday, August 10, 2015

இந்தியாவுக்கும் நேபாளத்திற்கும் மேற்கே உள்ள பகுதியில் பெரிய பூகம்பம் மீண்டும் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகமாக இருக்கிறது என விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர்.


ஏப்ரல் மாதத்தில் நிகழ்ந்த நிலநடுக்கத்தின்போது, பூமிக்கடியில் உருவாகியிருந்த அழுத்தம் முழுமையாக வெளியேறவில்லையென விஞ்ஞானிகள் கருதுகின்றனர்.
கடந்த ஏப்ரல் மாதம் நேபாளத்தில் மிகப் பெரிய நிலநடுக்கம் ஏற்பட்டிருந்தாலும், கண்டத் தட்டு நகர்வினால் பூமிக்கடியில் ஏற்பட்டிருந்த அழுத்தம் முழுமையாக வெளியாகவில்லையென்றும், அந்த அழுத்தத்தின் ஒரு பகுதி மேற்கு நோக்கித் தள்ளப்பட்டிருப்பதாகவும் அவர்கள் கூறியுள்ளனர்.
அதாவது நேபாளத்தின் பொகாராவுக்கு மேற்கேயும் தில்லிக்கு வடக்கேயும் அமைந்துள்ள பகுதியில் இந்த அழுத்தம் தற்போது ஏற்பட்டுள்ளது.
இது குறித்த தகவல்கள் நேச்சர் ஜியோ சயின்ஸ் மற்றும் சயின்ஸ் சஞ்சிகைகளில் வெளியிடப்பட்டுள்ளன.
மேற்கு நேபாளத்திலும் வட இந்தியாவிலும் பெரும் எண்ணிக்கையில் மக்கள் வசிப்பதால், இங்கு பூகம்பம் வந்தால் அது பேரழிவை ஏற்படுத்தும் அபாயம் இருக்கிறது எனக் கூறுகிறார் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் ஷான் ஃபிலிப்.
இந்தியக் கண்டத் தகடானது, யூரேசிய கண்டத் தகடோடு மோதுவதால் இந்த பூகம்பம் ஏற்பட்டது. இப்போதும் அந்தப் பகுதியில் நிலமானது வருடத்திற்கு 2 சென்டிமீட்டர் என்ற அளவில் நகர்ந்துகொண்டேயிருக்கிறது.
இந்த நகர்வின் காரணமாக பிரதான இமாலய கண்டப் பிளவில் பெரும் அழுத்தம் ஏற்படுகிறது. இந்த கண்டப் பிளவானது நேபாளத்தின் தலைநகர் காட்மாண்டுவுக்கு மிக அருகில் அமைந்திருக்கிறது.
இந்தியக் கண்டத் தகடும் யூரேசியக் கண்டத்தகடும் தற்போது மிக நெருக்கமாக, நகரமுடியாதவகையில் இருக்கின்றன. இதனால், இந்தத் தகடுகளின் அடியில் ஏற்பட்டிருக்கும் அழுத்தம் வெளியேற ஒரு நிலநடுக்கம் தேவைப்படுகிறது.
ஏப்ரல் மாதத்தில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில், இம்மாதிரி உருவான அழுத்ததில் ஒருபகுதியே வெளியேறியிருப்பதாக ஆய்வாளர்கள் கருதுகின்றனர். முழு அழுத்தமும் வெளியேறியிருந்தால், அது மிகப்பெரிய நிலநடுக்கமாக இருந்திருக்கும்.
ஆகவே இந்தப் பகுதியில் ஒரு பெரும் நிலநடுக்கம் எதிர்காலத்தில் நிச்சயம் ஏற்படும் என ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.
1505ல் இதே போல ஒரு மிகப்பெரிய நிலநடுக்கம் ஏற்பட்டது. இப்போது மீண்டும் ஒரு நிலநடுக்கம் ஏற்படுமானால், அந்த நிலநடுக்கம் 8.5 ரிக்டார் அளவுக்கு இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால், இந்த நிலநடுக்கம் எப்போது ஏற்படும் என்பதை இப்போது சொல்ல முடியாது.
அதனால், பெரும் நிலநடுக்கங்களைத் தாக்குப்பிடிக்கக்கூடிய வகையில் சிறிய கட்டடங்களை கட்டுவது பள்ளிக் குழந்தைகளுக்கு நிலநடுக்கம் குறித்து பயிற்சியளிப்பது ஆகியவற்றின் மூலம் சேதத்தை குறைக்கலாம் என்கிறார்கள் நிபுணர்கள்.
ஏப்ரல் மாதத்தில் நேபாளத்தில் ஏற்பட்ட 7.8 ரிக்டார் அளவிலான பூகம்பத்தால் 9 ஆயிரம் பேர் உயிரிழந்தனர். பல ஆயிரம் பேர் காயமடைந்ததோடு, இருப்பிடங்களையும் இழந்தனர்.

இந்த காணொளியை கட்டாயம் பாருங்கள்.

எதிர்கால சந்ததியினரின் நன்மை கருதி இந்த காணொளியை பார்த்து செயல்பாடுகளை முன்னெடுங்கள்.

Sunday, August 9, 2015

வீதி விபத்தை குறைக்கும் சாம்சுங்கின் புதிய முயற்சி.

தொழினுட்ப உலகில் கண் இமைக்கும் நேரத்தில் உலகத்தின் எங்கோர் மூலையில் ஒவ்வொரு கண்டுப் பிடிப்புகள் நிகழ்ந்து கொண்டிருக்கின்றன. அவை தினமும் காதை எட்டிய வண்ணமும் உள்ளன. இவ்வாறான தொழினுட்ப உலகில் போக்குவரத்து துறை என்பது முக்கிய ஒன்றாக காணப்படுகின்ற போதும் இதில் பாரிய பிரச்சினையாக வீதி விபத்துக்கள் பரிணமித்துள்ளன.
அண்மைகாலமாக இலங்கையிலேயே வீதி விபத்துக்கள் சடுதியாக அதிகரித்துள்ளன. இதே போன்றே உலகத்திலும் பாரிய பிரச்சினையாக காணப்படுகின்றது.
இந்நிலையில் இப்பிரச்சினைக்கு தீர்வாகவும் ஏனைய நிறுவனங்களுக்கு ஆலோசனை வழங்கும் வகையிலும் கொரியாவின் மிகப்பெரிய தொழில்நுட்ப நிறுவனமான சம்சுங் புதிய படைப்பொன்றை உருவாக்கியுள்ளது. அதாவது 'பாதுகாப்பு டிரக்" என்ற பெயரில் வாகனமொன்றை உருவாக்கியுள்ளது சம்சுங் நிறுவனம். 
அதாவது குறித்த டிரக் வாகனத்தில் பின்புறத்தில் பாரியதொரு வண்ணமயமான திரை காணப்படுகின்றது. அந்த திரையில் குறித்த டிரக் வாகனத்துக்கு முன்பாக வரும் வாகனங்கள் தெரியும். இதனால் டிரக் வண்டிக்கு பின்னால் வருகின்ற வாகனங்கள் இலகுவாக குறித்த வாகனத்தை கடந்த செல்ல கூடியதாக உள்ளது. இந்த நிறுவனத்தின் புதிய முயற்சியானது உலக மக்களிடம் மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது.
காரணம் வீதியில் செல்லும் பாரிய டிரக் வண்டிகளை சிரிய ரக வாகனங்களை கடந்த செல்ல முற்படும் போதும் எதிரே வருகின்ற வாகனங்கள் தெரியாமல் இருப்பதனால் விபத்துக்களை சந்திக்கின்றன.
மேலும் சம்சுங் நிறுவனம் அண்மையில் ஆர்ஜன்டீனாவில் மேற்கொண்ட ஆய்வில் ஒரு மணித் தியாலத்துக்கு ஒருவர் வீதி விபத்தினால் உயிரிழக்கின்றனர். இதில் 80 வீதமான விபத்துக்கள் வாகனத்தை முந்திச் செல்லும் போது ஏற்படும் விபத்துக்கள் என தெரியவந்துள்ளது.
குறித்த தொழிட்னுட்ப வண்டியானது மிகப்பெரிய விளம்பர நிறுவனமான லியோ பேர்னட் மற்றும் இன்ஜ்மெடிகா தொழினுட்ப குழுவுடன் இணைந்து சம்சுங் நிறுவனம் தயாரிக்கப்பட்டுள்ளது.

Thursday, August 6, 2015

சாப்பிட அடம் பிடிக்கும் குழந்தைகளை சாப்பிட வைக்க வழிகள்

குழந்தைகளுக்கு ஒரே சமயத்தில் எல்லாவற்றையும் சாப்பிடக் கொடுக்காதீர்கள். குறிப்பிட்ட முறையான இடைவெளிகளில், கொஞ்சம் கொஞ்சமாக உணவு கொடுங்கள். குழந்தைக்கு திகட்டாமல் இருக்கும். குழந்தை சாப்பிடக்கூடிய அளவுக்கு மேல் ஒருபோதும் வைத்துத் திணிக்காதீர்கள். 

சாப்பிட்டுக் கொண்டிருக்கும்போது குழந்தைகளை அவசரப்படுத்தவே கூடாது. உணவு உண்ணும் நேரம் அவர்களுக்குச் சந்தோஷமான நேரமாக இருக்க வேண்டும் என்பதை மனதில் கொள்ளுங்கள். இரண்டு வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு ஊட்டவே கூடாது. மற்றவர்களோடு அமர்ந்து, அவர்களாகவே சாப்பிட விடவேண்டும். சாப்பாட்டை மேலே, கீழே இறைத்தாலும், குழந்தைகள் வயிறு நிறைய சாப்பிடுவார்கள். பழங்கள், காய்கறிகள், முழு பயறு வகைகள், பருப்பு வகைகளில் நார்ச்சத்து அதிகம் உள்ளது. 

குழந்தைகளுக்கு மலச்சிக்கல் வராமல் இவை தடுக்கும். ஒரு நாளைக்கு ஒரு லிட்டர் தண்ணீராவது குழந்தைகளை அருந்த வையுங்கள். வெறும் தண்ணீராகக் குடிக்க அவர்களுக்குப் பிடிக்கவில்லை என்றால், பழச்சாறாகவோ, பானகமாகவோ, மோராகவோ, மில்க் ஷேக்குகளாகவோ, இளநீராகவோ கொடுக்கலாம். ‘காய்கறிகளை சாப்பிடவே மாட்டேன் என்று அலறும் குழந்தைகளுக்கு காய்களை அப்படியே கொடுக்காமல், சாண்ட்விச்சுகளாகவோ, காய் நூடுல்ஸாகவோ, ஃப்ரைட் ரைஸாகவோ கொடுங்கள். 

பட்டாணியை வேக வைத்து மசித்தோ, கேரட், பீட்ரூட் போன்றவற்றைத் துருவி தூவியோ, உங்கள் அயிட்டங்களை கலர்ஃபுல்லாக பரிமாறுங்கள். அப்புறம் பாருங்கள், சந்தோஷமாகச் சாப்பிடுவார்கள். ஒரே பழத்தை முழுதாகக் கொடுப்பதைவிட, பல பழங்களை சிறுசிறு துண்டுகளாக நறுக்கி, பால், தேன் கலந்து சாலட்டாகவோ, மில்க் ஷேக்குகளாகவோ கொடுத்தால் வைட்டமின், மினரல், நார்ச்சத்து எல்லாம் ஒரே உணவில் அவர்களுக்குக் கிடைக்கும்.

குழந்தைகளை வெளியே அழைத்துச் செல்லும்போது செயற்கையான மணம், நிறம் சேர்க்கப்பட்ட தின்பண்டங்களை வாங்கித் தராதீர்கள். காபி, டீ, குளிர் பானங்கள் போன்றவை குழந்தைகளின் முழு சிஸ்டத்தையே குலைக்கக் கூடியவை. தவிர்த்து விடுங்களேன்! எந்த உணவிலும் முடிந்தவரை சர்க்கரையை தவிர்த்துவிட்டு, பனை வெல்லம், நாட்டு சர்க்கரை, கருப்பட்டி போன்றவற்றைச் சேர்த்துக் கொடுத்துப் பழக்குங்கள். 

அவ்வளவும் இரும்புச்சத்து! உடல்நிலை சரியில்லாத குழந்தைகளுக்கு, நீர்க்க இருக்கும் சூப் அல்லது ரசம் பிசைந்த சாதம், வேகவைத்த காய் என சீக்கிரம் செரிக்கும் உணவுகளைக் கொடுங்கள். காரம், மசாலா வேண்டாம். தண்ணீர் நிறையக் கொடுக்கலாம். அப்போது தான் மாத்திரை, மருந்தினால் உடலில் படிந்த நச்சுக்கள் வெளியேறும். 

பிடிவாதம் பிடிக்கும் குழந்தைகளை சமாளிக்க தாய்க்கு அறிவுரை

‘குழந்தைகள் பிடிவாதம் பிடிக்கிற விஷயத்தில், பெற்றவர்கள்தான் முதல் குற்றவாளிகள்! பெற்றோர் தங்கள் குழந்தையின் மீது உள்ள பாசத்தை வெளிப்படுத்தத்தான், இப்படி அவர்கள் கேட்பதையெல்லாம் வாங்கிக் கொடுக்கிறார்கள். 

உண்மையில், குழந்தையின் மீது பாசமும் அக்கறையும் இருக்கிறவர்கள், இப்படி நடந்து கொள்ளக் கூடாது.. ‘‘குழந்தைக்கு ‘நோ’ என்கிற வார்த்தையை அழுத்தம் திருத்தமாகச் சொல்லாத வரையில், பெற்றோரின் எந்தக் கஷ்டமுமே குழந்தைக்குத் தெரியாது. அதோடு, ‘நமக்குச் செய்யவேண்டியது பெற்றவர்களான இவர்களின் கடமை.. செய்கிறார்கள்’ என்று ‘டேக்கன் ஃபார் கிரான்டட்’ ஆக.. அதாவது.. தனக்கு சாதகமாகத்தான் குழந்தை எடுத்துக் கொள்ளுமே தவிர, ‘நம் மேல் எத்தனை பிரியம் இவர்களுக்கு’ என்றெல்லாம் நினைக்கவே நினைக்காது. 

எந்தக் குழந்தைக்கு கேட்டதெல்லாம் மிக எளிதாகக் கிடைத்து விடுகிறதோ.. அந்தக் குழந்தை, மனதைரியம் குறைந்ததாகவும், தோல்வியை தாங்கிக் கொள்கிற சக்தி இல்லாததாகவும்தான் வளருகிறது. இப்படிப்பட்ட குழந்தைகள்தான், தான் நினைத்த ஏதோ சிறு ஒரு விஷயத்தை அடைய முடியாவிட்டால்கூட மனம் உடைந்துபோய் வாழ்வில் நிம்மதியையும் சந்தோஷத்தையும் இழக்கத் தொடங்கி விடுகிறார்கள். ‘பொதுவாக, பிடிவாதம் பிடிப்பது குழந்தையின் இயல்புதான். 

ஏதோ ஒரு பொருளுக் காகவோ, என்றைக்கோ ஒருநாளோ பிடிவாதம் பிடிக்கிற குழந்தையை நினைத்து, பெற்றோர் பயப்படத் தேவையில்லை. அந்தப் பழக்கம் குழந்தை வளர வளர சரியாகிவிடும். ஆனால், குழந்தை எதற்கெடுத்தாலும் பிடிவாதம் பிடிக்கும்போதுதான் அது திருத்தப்பட வேண்டிய பிரச்சனையாகிறது. குழந்தைக்கு சாப்பிட, நடக்க கற்றுத் தருவதைப் போலவே, தோல்விகளை சந்திக்கவும் கற்றுக் கொடுங்கள். உதா ரணமாக, குழந்தை சாக்லெட் கேட்டால், அன்பாக, ‘நாளைக்கு வாங்கித் தர்றேன்..’ என்று சொல்லுங்கள். 

குழந்தை ‘இப்பவே வேணும்..’ என்று அழுதாலும், ‘நாளைதான்’ என்று தெளிவாகச் சொல்லுங்கள். உங்களிடம் உறுதியில்லாவிட்டால், அதன் பிடிவாதம் அதிகரிக்கவே செய்யும். குழந்தை கேட்பதற்கு, வீட்டில் உள்ள அனைவருமே ஒரே பதிலை சொல்ல வேண்டும். ‘அப்பா தர மாட்டேங்கறாரா? நான் வாங்கித் தர்றேன்டீ என் செல்லம்’ என்று சொன்னால், குழந்தைக்குக் குளிர் விட்டு விடும். குழந்தை அழுது, புரண்டு, ஆர்ப் பாட்டம் செய்தால், எரிச்சலோ கோபமோ கொள்ளக் கூடாது. பரிதாபப்படவும் கூடாது. 

அதை கண்டுகொள்ளாமல் இருக்க வேண்டும். தன்னை யாரும் கவனிக்க வில்லை என்பது தெரிந்ததும், குழந்தை அழுகையை நிறுத்திவிட்டு, இயல்பாகி விடும். குழந்தை உங்களிடம் கேட்கிற பொருள் அதற்குத் தேவையா.. இல்லையா.. என்பதை முடிவு செய்யவேண்டியது குழந்தை அல்ல.. நீங்கள்தான்! சேட்டை செய்கிற உங்கள் குழந்தையை, இதே விஷமத்தை பக்கத்து வீட்டுக் குழந்தை செய்தால், எப்படி உணர்வீர்களோ, அதே கண்ணோட்டத்தோடு பாருங்கள். அப்போதுதான் உங்களால் சரியான முடிவை எடுக்க முடியும். 

உடல் பருமனை குறைக்க எ‌ளிய வ‌ழிகள் .

இன்றைய காலகட்டத்தில் ஆண்கள், பெண்கள் என இருபாலருக்கும் பெரும் பிரச்சனையாக இருப்பது உடல் பருமன் அல்லது ஊளைச் சதை உடம்பு.
இதற்கு ஆண்களுக்கு முக்கியக் காரணமாக அமைவது பணியிடத்தில் ஒரே இடத்தில் அமர்ந்து வேலை செய்வது, வீட்டுச் சாப்பாடு இல்லாமல் கண்ட இடங்களில் கண்டவற்றை வாங்கிச் சாப்பிடுவதால் கொழுப்பு அதிகரிப்பது போன்றவையாகும்.
பெண்களைப் பொறுத்தவரை உடல் உழைப்பு குறைந்து போனது மட்டுமின்றி, போதுமான சத்தான உணவு இல்லாததும் ஒரு காரணமாக இருக்கிறது. இதுதவிர, அதிக நேரம் தொலைக்காட்சி முன்பு அமர்வது, பகலில் அதிக நேரம் தூங்குவது போன்றவையும் காரணமாக உள்ளது.
இதுபோன்றவர்களுக்கு எளிய வழியில் உடல் பருமனைக் குறைப்பது எப்படி என்பதை இப்போது பார்ப்போம்.
சாதாரணமாகத் தண்ணீர் குடிப்பதற்குப் பதிலாக சோம்பு கலந்த த‌ண்‌ணீரைப் பருகி வந்தால் உடம்பில் உள்ள ஊளைச் சதை குறைந்து உடல் வடிவம் அழகு பெறும்.
சாப்பிடும் உணவில் பூண்டு, வெங்காயம் அதிகமாகச் சேர்த்து வந்தால் உடலில் உள்ள தேவையற்றக் கொழுப்புகளைக் குறைத்து உடலிற்கு புத்துணர்ச்சி தரும்.
பப்பாளிக்காயைச் சமைத்து உண்டு வந்தால் உடல் மெலியும். இதுதவிர, மந்தாரை வேரை நீர்விட்டு பாதியாக காய்ச்சி தொடர்ந்து அருந்தி வந்தாலும் பருத்த உடல் மெலியும்.
அமுக்கிராவேர் பெருஞ்சீரகம் பாலில் காய்ச்சி குடித்து வந்தால் உடல் எடை குறையும். சுரைக்காய் வாரத்திற்கு 2 தடவை சாப்பிட்டு வந்தால் வயிற்றுச் சதை குறையும்.
மேலும் சதை போடுவதைத் தடுக்க வேண்டுமென்றால், தேநீரில் எலுமிச்சம் பழச்சாறு கலந்து காலையில் குடித்துவர வேண்டும். இதுதவிர, வாழைத்தண்டு சாறு, அருகம்புல் சாறு இவற்றில் ஏதாவது ஒன்றை தொடர்ந்து பருகி வந்தாலும் சதை போடுவதைத் தடுக்கலாம்.
இது எ‌ல்லாவ‌ற்‌றி‌ற்கு‌ம் மேலாக காலை‌யி‌ல் அரை ம‌ணி நேர‌ம் நடைப‌யி‌ற்‌சி மே‌ற்கொ‌ண்டா‌ல் கொழு‌ப்பு‌ம் கரையு‌ம், உட‌‌ல் எடையு‌ம் குறையு‌ம், பு‌த்துண‌ர்வாகவு‌ம் இரு‌க்கு‌ம்.
1)எப்போதும் நமது எண்ணங்கள் பாசிட்டிவாக இருந்தால்தான் எந்த வெற்றியையும் அடைய முடியும்.அது இந்த உடல் மெலிவதற்கும் பொருந்தும்.உடல் மெலிய வேண்டும் என்று உடற்பயிற்சி,டயட்டிங் இருக்க ஆரம்பித்து விட்டால், இனி உடல் எடை குறையும்,இப்போது கொஞ்சம் குறைந்து விட்டது என்று நீங்களே மனதில் நினைத்துக் கொள்ளுங்கள்.இதுதான் உங்களை மேலும் முயற்சி செய்ய வைக்கும்.என்ன் இது 2 வாரமாகியும் உடல் எடை குறைய வில்லையே என்று பாதியில் விட்டு விடாதீர்கள்.அப்புறம் மேலும் எடை கூட வாய்ப்பு அதிகம்.
2) எக்காரணம் கொண்டும் சாப்பிட்ட பிறகு உடல் பயிற்சி செய்யாதீர்கள்.சாப்பிடும் முன்பு செய்வதுதான் சரி.
3)குளிர்ந்த தண்ணீர் குடிப்பதை விட சூடான தண்ணீர் குடிப்பது உடல் எடை குறைக்க உதவும்.
4) 3 வேளையாக சாப்பிடாமல் 3 மணி நேர இடைவெளியில் 6 தடவையாக சாப்பிடுங்கள்.அதனால் எப்போதும் சாப்பிடும் ஒரு வேளை உணவை(அதே அளவை) இரண்டாக பிரித்து 2 வேளையாக சாப்பிடுங்கள்.இதுதான் இன்று மிகவும் அதிகமான பேர் பின்பற்றும் டயட்டிங் முறை.எல்லோருடைய மெட்டபாலிசமும் ஒரே மாதிரி இருக்காது.இப்படி பிரித்து சாப்பிடுவதால் உடம்பில் கொழுப்பு தங்க வாய்ப்பு இல்லாமல் எளிதில் உணவு ஜீரணமாகிவிடும்.அதனால்தான் மருத்துவர்கள் சர்க்கரை நோயாளிகளை சிறிய உணவாக உண்ண சொல்லுகிறார்கள்.எப்போதும் சாப்பிடும் தட்டைவிட சிறிய தட்டில் சாப்பிடுங்கள்.அப்போதுதான் நாம் நிறைய சாப்பிடுகிறோம் என்ற எண்ணம் வரும்.மெதுவாக,நன்றாக மென்று சாப்பிடுங்கள்.இதனால் உணவு எடுத்துக் கொள்ளும் அளவும் குறையும்.
5)சாப்பாட்டில் அடிக்கடி கொள்ளு சேர்த்துக் கொள்வது உடல் எடையை குறைக்கும்.கொள்ளு ரசம்,கொள்ளு சுண்டல் போன்றவை செய்து சாப்பிடலாம்.அதை விட ராத்திரி ஒரு கைப்பிடி கொள்ளு எடுத்து தண்ணீரில் ஊற வைத்து காலையில் எழுந்தவுடன் முதலில் அதை சாப்பிட்டு விடுங்கள்.இது நிச்சயம் எடையை குறைக்கும்.
6)என்ன சாப்பிட்டாலும் அதிலிருந்து எவ்வளவு எனர்ஜி கிடைக்கிறது என்று பாருங்கள்.இது வெளிநாட்டில் வசிப்பவர்களுக்கு எளிது.அதிகம் கிலோ ஜூல்ஸ் உள்ள பதார்த்தங்களை எளிதாக தவிர்த்து விடலாம்.இதில் முக்கியமாக தவிர்க்க வேண்டியவை Sweets.எடை கூட இது முதற் காரணம்.Equal போன்ற கலோரி குறைந்த Sweetener ஐ உபயோகியுங்கள்.
7) டயட் என்றால் பட்டினி கிடப்பதில்லை.அதேபோல் சுவை குறைந்த உணவை சாப்பிட வேண்டும் என்பதும் இல்லை.இப்படி செய்ய ஆரம்பித்தால் வெறுப்புதான் வரும்.எதையும் மனதிற்கு பிடித்து செய்ய வேண்டும்.ஒரு வேளை கூட பட்டினி கிடக்காதீர்கள்.அப்புறம் உங்களையும் அறியாமல் அடுத்த வேளை அதிகம் சாப்பிட்டு விடுவீர்கள்.மீண்டும் உணவு கொழுப்பாக உடலில் தங்கிவிடும்.காலை உணவு எடுத்துக் கொள்வது மிகவும் அவசியம்.
8)ஆவியில் வேக வைத்த உணவு,நீர் காய்கறிகள் என்று திட்டமிட்டு சமையுங்கள்.வாரம் ஒரு முறை பொரித்த உணவு,ஸ்வீட்ஸ் என்றுகூட சாப்பிடலாம்.முக்கியமாக டயட் இருந்தாலும் நம் உடலுக்கு தேவையான அத்தனை சத்துக்களும் தொடர்ந்து கிடைக்குமாறு பார்த்துக் கொளுங்கள்.புரோட்டீன்,கார்போஹைடிரேட்,நல்ல கொழுப்பு,கால்ஷியம்,இரும்புச் சத்து முதலியவை நம் உடலுக்கு கண்டிப்பாக தேவை.இதன் அளவு குறைந்தால் முடி கொட்டுதல்,ரத்த சோகை,எலும்பு தேய்மானம் முதலியவை ஏற்படும்.பருப்பு,கீரை,அவித்த முட்டை,சாதம்,பால் முதலியவை சேர்த்துக் கொள்ளுங்கள்.சமைக்கும் முறையில் அதிகம் கொழுப்பு சேர்ந்து விடாமல் செய்து சாப்பிடுங்கள்.
டயட்டில் ஒன்று சொல்வார்கள்.வெள்ளையாக இருப்பவற்றை, குறைந்த அளவு சேர்த்துக் கொள்ளவேண்டும் என்று.ஜீனி,உப்பு,சாதம்,பால்,தயிர் போன்றவை தான் இப்படி அளவை குறைக்க வேண்டிய பொருட்கள்.நிறைய பேர் Full Cream milk, Skim Milk க்கு உள்ள வேறுபாட்டை அறியாமல் இருக்கிறார்கள்.Skim milk தண்ணீரை போன்று இருப்பதால் பலரும் அதை Diluted Full Cream milk அதாவது தண்ணீர் சேர்க்கப்பட்ட பால் என்று நினைத்து விடுகிறார்கள்.அதனால் அதை வாங்கி உபயோகப்படுத்துவதும் இல்லை.Skim milk என்பது கொழுப்பு நீக்கப்பட்ட பால்.ஆனால் பாலில் உள்ள அத்தனை சத்துக்களும் அப்படியேதான் இருக்கும்.எனவே உடல் எடை குறைய skim milk உபயோகிக்கலாம்.சத்துப் பற்றாக்குறை ஏற்படாது.
9)வாரம் ஒரு முறையாவது ஓட்ஸ்,பார்லி சேர்த்துக் கொள்ளுங்கள்.ஓட்ஸ் உடம்பில் உள்ள கொழுப்பையும்,பார்லி உடம்பில் அதிகம் உள்ள நீரையும் குறைக்கும்.ஆனால் பார்லியை அதிகம் முக்கியமாக கருவுற்றிருக்கும் பெண்கள் உபயோகப்படுத்த வேண்டாம்.இது நீரின் அளவை குறைத்து சிசேரியனில் கொண்டு விட்டுவிடும்.சிலர் கால்,கை வீக்கம் கர்ப்ப காலத்தில் ஏற்படும்போது அதிகம் பார்லியை உட்கொண்டுவிடுவதால் இப்படி நேர்ந்துவிடுகிறது.இதற்கு மாற்றாக வெந்தயக்கஞ்சி செய்து சாப்பிடலாம்(கர்ப்பிணிகள்).
10)உங்களது லைப்ஸ்டைலுக்கு ஏற்றார்போல் உடல் பயிற்சியை அமைத்துக் கொள்ளுங்கள்.உங்களால் பிட்னெஸ் செண்டருக்கு தொடர்ந்து சென்று பயிற்சி செய்ய முடியும் என்றால் மட்டுமே அதில் சேருங்கள்.குழந்தை வைத்திருப்பவர்கள்,குழந்தையை ப்ராமில் வைத்து தள்ளிக் கொண்டு வாக்கிங் போகலாம்.அவர்களுக்கு வேடிக்கை காண்பிக்க வெளியில் அழைத்து சென்றது போலிருக்கும்.வாக்கிங் செய்வது மிகவும் அவசியம்.உடம்பில் ஒரு குறிப்பிட்ட பகுதியை மட்டும் குறைக்க நினைக்காதீர்கள்.வாக்கிங்,ஜாகிங் இப்படி வெளியே செல்லும் எந்த பயிற்சியும் செய்ய முடியாதவர்கள் வீட்டிலேயே உடல் பயிற்சி செய்யலாம்.ஒழுங்காக கற்றுக் கொண்டு அல்லது புக்கில் படித்து புரிந்து,அதற்கென உள்ள வீடியோக்களை வாங்கிப் பார்த்து வீட்டினுள்ளேயே செய்யலாம்.
11)அதிக எண்ணெய்,மட்டன்(மாதம் ஒரு முறையோ,வாரம் ஒரு முறையோ கொழுப்பில்லாத கறியாக சாப்பிடலாம்),ஸ்நாக்ஸ்(சிப்ஸ்) போன்ற கலோரி அதிகமுள்ள பொருட்களை தவிர்த்து விடுங்கள்.டீ குடிப்பது உடலில் கொழுப்பை சேர விடாது.அதுவும் க்ரீன் டீ மிகவும் நல்லது.பாலை சேர்க்காமல் அல்லது ஸ்கிம் மில்க்கை சேர்த்து குடிக்கலாம்.
12)சில வகை உணவுகள் செரிப்பதற்கு அதிக எனர்ஜியை எடுத்துக் கொள்ளும்.உதாரணமாக ஆப்பிள்,Broccoli போன்றவை செரிக்க அதிக எனர்ஜி தேவைப்படும்.அப்படி அதிக எனர்ஜி தேவைப்படும்போது நமது உடலில் உள்ள கொழுப்பிலிருந்து சக்தி எடுத்துக் கொள்ளும்.எப்படியிருந்தாலும் மேற்கண்ட பொருட்களை சாப்பிடும்போது உடலில் கொழுப்பு சேர்வதில்லை.
13)Pepsi,Coke போன்ற பானங்களை குடித்தே ஆக வேண்டும் என்றால் Sugar Free அல்லது Diet பானங்களை பருகலாம்.Milo,Horlicks போன்றவை எடையை கூட்டவே செய்யும்.சாலட் சாப்பிட்டாலும் அதில் மயோனைஸ்,சாலட் டிரஸ்சிங் சேர்க்காமல் எலுமிச்சை,மிளகுத்தூள் சேர்த்து சாப்பிடலாம்.Baked Beans,Tuna can,Crackers போன்றவற்றை சிறிய உணவாக எடுத்துக் கொள்ளலாம்.இதன் மூலம் புரோட்டீன் போன்ற சத்துக்கள் கிடைத்துவிடும்.முடிந்தவரை வீட்டில் சமைத்து சாப்பிடுங்கள்.வெளியில் சாப்பிடுவதுகூட எடை ஏற ஒரு காரணம்.முக்கியமாக பிட்ஸா,சிக்கன் ஃபிரை போன்ற அயிட்டங்கள் நிச்சயம் எடையை கூட்டிவிடும்.
14)Exercise,Diet இல்லாமல் எடையை குறைப்பது அவ்வளவு எளிதல்ல.Diet என்ற வார்த்தையை உபயோகப்படுத்தாமல் ஹெல்தியாக சாப்பிடுகிறோம் என்று நினையுங்கள்.நிச்சயம் சரியான டயட்டும்,உடற்பயிற்சியும் எடையை குறைக்கும்.பரம்பரை காரணமாக சிலர் குண்டாக இருப்பார்கள்.அவர்களும் முயன்றால் எடையை நிச்சயம் குறைக்கலாம்.உடல் நலம் பாதிக்கப்பட்டவர்கள்,மருத்துவர்கள் ஆலோசனை கேட்டு உடற்பயிற்சி செய்யலாம்.
உடல் பருமனைக் குறைக்க செய்ய வேண்டியவை. . .
* எளிதான உடற்பயிற்சி, நடைப்பயிற்சி மேற்கொள்ள வேண்டும்
* தினமும் 2-லிருந்து 3 லிட்டர் வரை தண்ணீர் குடிக்க வேண்டும்
* பட்டினிக் கிடத்தல் கூடாது
* அதிக நொறுக்குத் தீனிகள் கூடாது ௦
* உருளைக்கிழங்கு, சேனைக் கிழங்கு போன்ற கிழங்கு வகைகளை உட்கொள்ளுதலைத் தவிர்க்கவும்
* இனிப்புகள், சர்க்கரை வகைகளை இயன்றவரை தவிர்க்க வேண்டும்.
* எண்ணெயில் வறுத்த மற்றும் பொரித்த உணவுகளைத் தவிர்த்து வேகவைத்த உணவுகளுக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்.
* முட்டையின் மஞ்சள் கருவைத் தவிர்த்து வெள்ளைப் பகுதிகளை மட்டுமே உட்கொள்ள வேண்டும்
* கூல் ட்ரிங்ஸ்சுக்கு ‘தடா’ விதிக்க வேண்டும்.
* தினமும் பழங்கள் உட்கொள்ளலாம் ( 2-லிருந்து 4 வரை)
* இரவு உணவுடன் அவரை, பீன்ஸ், கேரட், கோஸ், காலி ஃப்ளவர், முருங்கைக்காய், புடலங்காய், சுரைக்காய், பரங்கி, வாழைத்தண்டு, வெள்ளரிக்காய் இவற்றில் ஏதேனும் ஒன்றை தினமும் 200 கிராம் அளவு சேர்த்துக்கொள்ளுங்கள்.
* 2 அல்லது 3 நாட்களுக்கு ஒருமுறை கீரை, தட்டைப் பயறு, பச்சைப் பயறு போன்ற பயறு வகைகளை உணவில் சேர்த்துக் கொள்வது அவசியம்.
* கைக்குத்தல் அவல், முழு கோதுமை, கோதுமை ரவை, கேழ்வரகு, கம்பு போன்ற தானியங்களையும் அவ்வப்போது உட்கொள்ள வேண்டும்.
* கொழுப்புச் சத்து அதிகம் உள்ள உணவுப் பொருட்களை தவிர்த்தல் மிக நன்று. பாலில் கூட குறைந்த கொழுப்புச் சத்து உள்ள ‘டோன்டு மில்க்’ வகைகளையே பயன்படுத்துங்கள்.
* அசைவம் விரும்புபவர்கள் தந்தூரி வகைகளையே உட்கொள்வீர். சைனீஸ், இந்தியன் வகை குழம்புகள் வேண்டாம்.
தமது எடையை அடிக்கடி பார்த்து அதற்குத் தகுந்தவாரி உணவுப் பழக்கங்களை வைத்துக் கொள்ள வேண்டும். மனிதர்களுக்கு இருக்க வேண்டிய சராசரி எடை விபரம் அட்டவணையில் கொடுக்கப்பட்டுள்ளது.
உணவுப் பழக்கத்தை சரிவிகிதமாக்கி உண்டுவாழ்வதால் உடல் பருமன் குறையும்.
நான் சொல்வதை கேளுங்கள். லாஜிக் பேசாதீர்கள்.
வெறுமனே நான் சொல்வதை ஒரு அடிமைப் போல் கேளுங்கள்.
இரண்டு விசயத்துக்கு கவனம் கொடுங்கள். 
ஒன்று உணவு, மற்றொன்று உடல்பயிற்சி.
உணவு. . .
காலையில் கண்டிப்பாகப் பசியாறுங்கள்.
அதன்பின் மதியம்வரை வாயில் எதுவும் வைக்காதீர்கள்.
மதியம் நல்ல சாப்பாடு. பாதி சோறு, கோழி அல்லது மீன் என்று நல்ல சத்தான சாப்பாடு சாப்பிடுங்கள்.
அதன்பின் இரவு வரை வாயில் எதுவும் வைக்காதிர்கள்.
இரவு உணவாக, சப்பாத்தி, ரொட்டி என்று சிம்பெலாக சாப்பிடுங்கள்.
அதன் பிறகு எதுவும் வேண்டாம்.
இந்த சாப்பாடுகளைத் தவிர வேறு எதுவும் சாப்பிடாமல் இருக்கணும்.
அடுத்து, குடிக்கும் பானம்.
வெறும் ஆறிய தண்ணீர்தான்.
ஆறிய தண்ணீரைத் தவிர வேறு எதுவும் குடிக்ககாமல் இருக்கணும்.
தேநீர், காப்பி, என்று சூடான பானம் முதல், ஆரஞ்சு, பெப்சி, கோலா போன்ற குளிர் பானம் வரை நோ….நோ…நோ…
உடற்பயிற்சி. . .
உடற்பயிற்சி என்று தனியாக செய்வது கஷ்டம்தான். அதனால், தனியாக உடற்பயிற்சி என்று எதுவும் செய்யாவிட்டால் பரவாயில்லை.
அன்றாடம் நடைப் பயிற்சி செய்யுங்கள். 
வேண்டுமென்றே, அன்றாடம் நடந்து போங்கள்.
விருப்பப்பட்டு அன்றாடம் நடந்து போங்கள்.
மார்க்கெட் போகனுமா?
காரை ஒரு 100 அல்லது 200 மீட்டர் தூரத்தில் பார்க் பண்ணி நடந்து போங்கள்.
வேறு எங்காவது போகனுமா?
கடையின் வாசலில் கார் பார்க் பண்ண இடமிருந்தாலும், அதை பயன்படுத்தாதிர்கள்.
தூரமாக பார்க் பண்ணி நடந்து செல்லுங்கள்.
படி ஏறும் வேலையே இல்லாவிட்டாலும், சும்மா ஏறி போங்கள்.
படி ஏற விரும்புங்கள்.
குப்பை போடணுமா?
வயிறு அழுந்த குனிந்து குப்பை போடுங்கள்.
வீடு கூட்டணுமா?
வயிறு அழுந்த குனிந்து கூட்டுங்கள்.
மெனக்கெட்டு,
அக்கறை எடுத்து,
மிகவும் முக்கியமாக விருப்பப்பட்டு,
வீட்டு வேலைகளை அன்றாடம் செய்யுங்கள்.
மேலே சொல்லப்பட்டவை அனைத்தும் மிகவும் சுலபமான வழிமுறைகள்.
எந்த செலவும் இல்லை.
ஒரு மாதம் செய்து பாருங்கள்.
உடல் எடை வித்தியாசம் தெரியும்.
ஆனால், யாரும் செய்ய மாட்டீர்கள் என்று தெரியும்.
காரணம், அவை சவால் இல்லை.
பெருமைப் பட எதுவும் இல்லை.
காசு செலவு இல்லை.
மாறாக,
சுய கட்டுப்பாடு அவசியம்.
வாயை கட்டணும்.
மெனெக்கெட்டு நடக்கணும்.
இதெல்லாம் ரொம்ப கஷ்டம்.
உடல் எடை குறைக்க மருந்து விற்பவர்கள் எதையும் விற்பார்கள். அவர்கள், பழைய கால மருத்துவம், நவீன மருத்துவம் என்ற பெயரில் எதையாவது நம் தலையில் கட்டுவார்கள். முடிந்தால், மலத்தை பாடம் பண்ணி, இது இயற்கை வைத்தியம் என்று சொல்லி நம்மை ஏமாற்றுவார்கள். எல்லாம் ஒரே பிசினஸ் மயம்தான்.
இவர்கள் ஒரு பக்கம் என்றால், உடல் எடை குறைக்க விரும்பும் நபர்கள், பாடம் செய்யப்பட்ட மலத்தையும் கூட மருந்தாக எடுக்க தயார் ஆகிவிடுவார்கள். இவர்களுக்கு எப்படியாவது எடை குறைந்தால் சரி. எதை சாப்பிடுகிறோம் என்று கவலையில்லை.
மருந்து சாப்பிட்டால் உடல் எடை குறையும் என்றால், உலகில் ஒரு பணக்கார குண்டு நபர்களை கூட நாம் பார்க்க இயலாது. எல்லாரும் அதிக பணம் கொடுத்து, விலையுயர்ந்த மருந்து சாப்பிட்டு, சிலிம்மாகத்தான் இருப்பார்கள். ஆனால் நடைமுறையில் அப்படி எதுவும் இல்லை.

Monday, August 3, 2015

சிறுநீரகக் கற்கள் உருவாவதை எப்படி தெரிந்துகொள்வது?

ஒரு­வ­ருக்கு சிறு­நீ­ர­கத்தில் கல் ஏற்­பட்­டு­விட்டால், கீழ் வயிற்றில் அதீ­த­மான வயிற்­று­வலி ஏற்­படும். முதுகுப் பகு­தியில், சிறு­நீ­ரக மண்­ட­லத்தில் வலி அதி­க­மாக இருக்கும். சிறுநீர் கழிக்­கும்­போது எரிச்சல், ரத்தம் கலந்து வருதல் ஆகிய பிரச்சி­னைகள் இருக்கும். சிறு­நீ­ரகக் கல் இருப்­பதைக் கண்­ட­றிய அல்ட்ரா சவுண்ட் ஸ்கேன், எக்ஸ்ரே பரி­சோ­த­னைகள் போது­மா­னவை.

இதற்கு என்­னதான் சிகிச்சை?
சிறு­நீ­ர­கத்தில், சிறுநீர்ப் பையில், சிறு­நீ­ரகக் குழாயில் எங்கே கல் உள்­ளது என்று கண்­ட­றிந்­து­விட்டால், என்ன மாதி­ரி­யான சிகிச்சை அளிக்­கலாம் என்­பதை முடிவு செய்­து­வி­டலாம். சுமார் 5 மி.மீ. வரை அள­வுள்ள கற்­களை, மருந்து, மாத்­தி­ரைகள் மூல­மா­கவே கரைத்­து­வி­டலாம். பெரிய கற்­க­ளுக்கு வேறு மாதி­ரி­யான சிகிச்­சைகள் உள்­ளன.
வெளியில் இருந்து ஒலி அலைகள் மூலம் கல் உடைக்கும் முறை: (Extracorporeal shock wave lithotripsy) 
இந்த முறையில் வெளியில் இருந்து அல்ட்ரா சவுண்ட் செலுத்­தப்­பட்டு கல் உடைக்­கப்­படும். 1 முதல் 1.5 செ.மீ. வரை அள­வுள்ள கற்­களை இந்த முறையில் அகற்­றலாம். ஆனால், கல் உடைக்­கப்­ப­டும்­போது அதன் சித­றல்கள் வேறு எங்­கேனும் சிக்­கிக்­கொள்ளும் ஆபத்து இதில் உண்டு.
துளை மூலம் சிறு­நீ­ர­கத்தில் கல் அகற்றும் அறுவைச் சிகிச்சை: (Percutaneous Nephro Lithotripsy)
ஒரு­கா­லத்தில் பெரிய சிறு­நீ­ரகக் கற்­களை அகற்ற திறந்த அறுவைச் சிகிச்சை செய்­யப்­பட்­டது. இதற்கு மாற்­றாக வந்­தது தான் இந்த முறை. முதுகில் சிறிய துளை போட்டு, 1.2 செ.மீ. அள­வுக்கு மேல் உள்ள கற்­களை வெளியே எடுக்கும் முறை இது.
பிறப்பு உறுப்பு வழியே கற்­களை அகற்றும் முறை (Retrograde intrarenal surgery):
எந்த அறுவைச் சிகிச்­சையும் இன்றி, பிறப்பு உறுப்பு வழி­யாக குழாய் போன்ற கரு­வியைச் செலுத்தி லேசர் கற்­றைகள் மூலம் கற்­களை உடைத்து வெளியே எடுக்கும் முறை இது. மெல்­லிய டெலஸ்கோப் துணை­யுடன் சிறு­நீ­ர­கத்தின் உள் அமைப்பைக் கணி­னியில் பார்த்­துக்­கொண்டே செய்­யப்­படும் சிகிச்சை இது என்­பதால், துல்­லி­ய­மான சிகிச்சை உத்­த­ர­வாதம். நோயா­ளிக்குத் துளி ரத்தச் சேதம்­கூட இந்த முறையில் ஏற்­ப­டாது என்­பது கூடுதல் நன்மை.
சிறு­நீ­ரகக் கற்கள் வராமல் இருக்க என்ன செய்ய வேண்டும்?
தினமும் குறைந்­தது இரண்­டரை முதல் மூன்று லிட்டர் தண்ணீர் குடிக்க வேண்டும். அதிக நீர்ச் சத்து நிறைந்த காய்­கறி, பழங்­களைச் சாப்­பிட வேண்டும். கல்­சியம் ஆக்­சலேட், கல்­சியம் பாஸ்பேட் ஆகிய உப்­புக்­கள்தான் சிறு­நீ­ரகக் கற்கள் உரு­வாக முக்­கியக் கார­ணங்கள். எனவே, இவை உரு­வாக அதிக வாய்ப்­புள்ள மாட்­டி­றைச்சி மற்றும் ஆட்­டி­றைச்­சியைக் கூடு­மா­ன­வரை தவிர்க்­கலாம்.
சிறு­நீ­ரகக் கல் வந்­து­விட்டால், என்ன செய்ய வேண்டும்?
உணவில் உப்பைக் குறைக்க வேண்டும். பழச்­சாறு, இளநீர், வாழைத்­தண்டு சாறு அதிகம் சேர்த்­துக்­கொள்ள வேண்டும். வாழைத்­தண்டு சாறில் நார்ச் சத்தும் அதிக அளவில் உட­லுக்குத் தேவை­யான தாது உப்­புக்­களும் உள்­ளன. இவை சிறுநீர் கழிப்பைத் தூண்டும். இதனால், சிறிய சிறிய கற்கள் எல்லாம் வெளியே தள்­ளப்­படும். எலு­மிச்சை, ஆரஞ்சு போன்ற சிட்ரிக் அமிலப் பழங்­களின் ஜூஸ் குடிப்­பதன் மூலம், அது சிறு­நீரில் அமிலத் தன்­மையைக் குறைத்து கல் உரு­வா­வதைத் தடுக்கும். ஒரு­வ­ருக்கு ஒரு முறை சிறுநீரகக் கற்களை அகற்றிவிட்டாலும் அடுத்த ஐந்து வருடங்களில் திரும்ப வருவதற்கு 50 சதவிகித வாய்ப்பு உண்டு. அதனால், அவர்கள் கூடுதல் எச்சரிக்கையோடு இருத்தல் நலம்!

சிறுநீரக கற்கள் உள்ளவர்களுக்கான பொதுவான உணவு முறைகள்

அதிகம் எடுத்துக் கொள்ள வேண்டிய உணவுகள்
இளநீர்
இதில் பொட்டாசியமும், மெக்னீஷியமும் அதிகம் உள்ளன. இவை சிறுநீரகக் கற்களின் முன்னோடிகளான படிகங்களைக் கரைத்து படிய விடாமல் தடுக்க வல்லவை.

காரட், பாகற்காய்
இவற்றில் சிறுநீரகக் கற்களின் படிகங்களை தடுக்கும் பல வித தாது உப்புக்கள் உள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது.

பழங்கள், பழச் சாறுகள்
வாழைப்பழம், எலுமிச்சை,
இவற்றில் விட்டமின் B6 சத்தும், சிட்ரேட்(Citrate) சத்தும் அதிகம் உள்ளன. இவை சிறுநீரகக் கற்களின் ஒரு முக்கிய அங்கமான ஆக்சலேட்(Oxalate) என்ற இரசாயனத்துடன் சேர்த்து அதைச் சிதைத்து படிய விடாமல் தடுத்து சிறுநீரகக் கற்கள் உருவாகாமல் தடுக்க வல்லவை.

பைனாப்பிள் சாறு
இதில் சிறுநீரக கற்களின் கருவாக இருக்கும் ஃபைப்ரின் (Fibrin) எனப்படும் சத்தை சிதைக்கும் நொதிகள் (Enzymes) உள்ளன.

கொள்
இதில் உள்ள சில நீர்ப் பொருட்கள் சிறுநீரகக் கற்கள் உருவாவதை தடுக்கும் திறன் கொண்டவை.

நார்ச்சத்து உள்ள உணவுகள்
பாதாம் பருப்பு, பார்லி ஓட்ஸ் போன்றவற்றில் சிறுநீரக கற்கள் வராமல் தடுக்கும் பலவித சத்துகள் உள்ளன. பொதுவாக சில காய்கறிகள், பழங்களைத் தவிர தினமும் உணவில் நார்சத்து உள்ள காய்கறிகள், பழங்கள், முழு தானியங்களை அதிகமாக சேர்த்துக் கொள்வது உடல் ஆரோக்யத்திற்கு நல்லது. கற்கள் வருவதையும் தடுக்கும்.

உப்பு
உணவில் உப்பையும் பெருமளவு குறைத்துக் கொள்வது சிறுநீரில் கால்சியம் சத்து வெளியாவதை தடுத்து சிறுநீரகக் கற்கள் வரும் வாய்ப்பை குறைப்பதாக இப்போது கண்டறியப்பட்டுள்ளது.

தவிர்க்க வேண்டிய உணவுப் பொருட்கள்.
காய்கறிகள்
தக்காளி விதைகள் (விதை நீக்கப்பட்ட தக்காளி சேர்த்துக் கொள்ளலாம்) பாலக் கீரை, பசலைக் கீரை இவற்றில் ஆக்சலேட் சத்து அதிகம் உள்ளது.
கத்திரிக்காய், காளான், காலிஃப்ளவர் இவற்றில் சிறுநீரக கற்களின் மற்றொரு அங்கமான யூரிக் அமிலம்(Uric Acid) அதிகம் உள்ளது. பரங்கிக்காய் இதில் யூரிக் அமிலமும் அதன் மூலப் பொருளான ப்யூரின்களும் (Purines) அதிகம் உள்ளன. இந்தக் காய்கறிகளைத் தவிர்க்கவும்
.
பழங்கள்
சப்போட்டா, திராட்சை இவற்றில் ஆக்சலேட் அதிகம்.

எள்
இதில் அதிக ஆக்சலேட் உள்ளது. அதிக எடுத்துக் கொள்வதை தவிர்க்கவும்.

அசைவ உணவுகள்
ஆட்டிறைச்சி(Mutton), மாட்டிறைச்சி (Beef), கோழிக் கறி (Chicken), முட்டை (Egg), மீன் (Fish) இவை அனைத்திலும் ப்யூரின்களும், யூரிக் அமிலமும் அதிகம். யூரிக் அமில வகைக் கற்கள் உள்ளவர்கள் தவிர்க்க வேண்டும்.

முந்திரிப்பருப்பு
இதில் அதிக ஆக்சலேட் உள்ளது. சிறுநீரகக் கற்கள் பெரும்பாலும் கால்சியம் மற்றும் ஆக்சலேட் கலந்தவை ஆகும். தவிர்க்கவும்.

சாக்லேட், சாக்லேட் கலந்த தின்பண்டங்கள், காபி, டீ ஆகியவற்றிலும் ஆக்சலேட் உள்ளது.
தினமும் 12 டம்ளர் நீர் அருந்தவும். கடினத் தன்மை உள்ள நீராய் இருந்தால் காய்ச்சி வடிகட்டி குடிக்கவும்.
ஒவ்வொரு வகை கற்களுக்கும் சில சிறப்பு உணவு முறைகள்
கால்சியம் மற்றும் ஆக்சலேட் கலந்த வகை கற்கள்
தினமும் 12 டம்ளர் நீர் அருந்தவும். அதிக கால்சியம் உள்ள பால், பால் பொருட்கள் மற்றும் வேர்க்கடலை, ஆக்சலேட் அதிகம் உள்ள சாக்லேட், கோலா கலந்த பானங்கள் மேற்கூறிய மற்ற உணவுகளை குறைத்துக் கொள்ளவும். வயிறு அல்சருக்கு சில சமயம் எடுத்துக் கொள்ளும் ஜெலுசில் போன்ற கால்சியம் கலந்த ஆன்டாசிட் மருந்துகளைத் தவிர்க்கவும். உணவில் உப்பையும் குறைத்துக் கொள்ளவும்.

யூரிக் அமில வகை கற்கள்
தினமும் 12 டம்ளர் நீர் அருந்தவும். ப்யூரின்கள் அதிகம் உள்ள மட்டன், சிக்கன், முட்டை, மீன், பால் போன்ற உணவு வகைகளைத் தவிர்க்கவும்.

ஸ்ட்ரூவைட் வகை கற்கள்
இந்த வகை கற்கள் சிறுநீரகங்களில் கிருமி தாக்கத்தால் வருகின்றன. மருத்துவர் பரிந்துரைக்கும் கிருமிக் கொல்லி மருந்துகள் (ஆன்டிபையாடிக்ஸ் - Antibiotics) மருந்துகளை தவராமல் எடுத்துக் கொள்ளவும் தினம் குறைந்தது 12 டம்ளர் நீர் அருந்தவும்.

சிஸ்டின் வகைக் கற்கள்
இவை மிக அபூர்வமானவை. மீன் உணவை தவிர்க்கவும். தினமும் 12 டம்ளர் நீர் அருந்தவும்.

சிறுநீரக கல்லையும் கரைக்கும் ஹோமியோபதி மருத்துவம்

மனிதனை அச்சுறுத்தும் நோய்களில் மிகப் பழமையானவைகளில் ஒன்று சிறுநீரகக்கல், கி.மு. 600 லேயே இந்நோய் கண்டறியப்பட்டுள்ளதாக அறிய முடிகிறது. சில நூற்றாண்டுகளுக்கு முன்பு சிறுநீரக கல்லுக்கு இந்திய மூலிகைகளை மருந்தாக பயன்படுத்தி வெற்றி பெற்றிருக்கிறார்கள் அமெரிக்க மருத்துவர்கள். தொழில் வளர்ச்சியில் தன்னிறைவு கண்ட நாடுகளில் சிறுநீரக கல் நோயால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை ஏராளம், மக்கள் தொகை எண்ணிக்கையில் 12 % பேர்களுக்கு சிறுநீரகக்கல் பெரும் பிரச்சனையாக உள்ளது. பொதுவாக ஆண்டுக்கு 30 லட்சம் நபர்கள் பாதிப்புக்குள்ளாவதில் 5 லட்சம் பேர்களுக்கு கல் வெளியேறுவதில் சிக்கல் ஏற்பட்டு பெரும் சிரமத்திற்கு உள்ளாகிறார்கள். வியர்வை சிந்தி உழைக்கும் உழைப்பாளிகள் முதல் சின்னக் குழந்தைகளையும் சிறுநீரகக்கல் விட்டு வைப்பதில்லை. பெண்களை விட ஆண்கள் இந்நோயினால் அதிகம் பாதிக்கப்படுகிறார்கள். சிறுநீரகத்தில் கற்கள் தோன்றுவதால் சிறுநீரகம் செயலிழந்து போகும் என்றும், தங்கள் வாழ்க்கையை முடிந்து விட்டதாகவும் மன முடைந்து விடுகின்றனர்.

சிறுநீரகக்கல் (Calculus)

போக்குவரத்து வாகனம் சாலை வசதி இல்லாத காலத்தில் தூரப் பயணம் மேற்கொள்பவர்கள். பை நிறைய கற்களை கொண்டு சென்று குறிப்பிட்ட தூரத்திற்கு ஒன்றாக போட்டுக் கொண்டே செல்வார்கள். திரும்பி வரும்போது கற்களை எடுத்துக் கொண்டு வருவார்கள். எத்தனை கல் செலவானது என்பதை பொறுத்து பயண தூரத்தை கணக்கிட்டுக் கொள்வார்கள். இம்முறைக்கு Calculus என்று பெயர். சிறுநீரகத்தில் கல்லுக்கும் Calculus என்று பெயர் வைத்து விட்டார்கள்.

காரணம் இயந்திரமயமாகிப் போன வாழ்க்கை முறையில் தவறான உணவுப்பழக்கமும், பிறவியிலேயே மரபணுக்களில் காணப்படும் சில குறைபாடுகளாலும், உடலுக்கு சத்து தேவை என்று தாமாகவே சத்து மாத்திரைகளை வாங்கி உட்கொள்வதாலும், எல்லா வகையான மதுபானங்களையும், அருந்துவதாலும், இறைச்சி மற்றும் முட்டைக்கோசு, தக்காளி, காலிஃப்ளவர், வெள்ளரி, சப்போட்டா, போன்ற காய்கறி பழங்களை அதிகளவு உண்பதாலும் தாகத்தின் போதும் கடுமையான உடற்பயிற்சிக்கு பின்பும் நீர் அருந்தாமையாலும், சிறுநீரகப் பையில் அடிக்கடி தொற்று ஏற்படுவதாலும் சிறுநீரிலும், இரத்தத்திலும், சுண்ணாம்புச்சத்து அதிகமிருக்க கூடிய நிலையிலும், சிறுநீர் கழிக்க வேண்டுமென்ற உணர்வு ஏற்பட்டவுடன் சிறுநீரை அடக்கி வைப்பதாலும் கற்கள் தோன்றுகின்றன.

மீண்டும் மீண்டும் கல் உருவாவதற்கான காரணங்கள்

வளர்சிதை மாற்றக் கோளாறுகள் காரணமாகவும், தைராய்டு சுரப்பிக்கு அருகில் உள்ள அனியச் சுரப்பிகள், பாரார்த்தார் மோன் என்ற சுரப்பினை அதிகமாக சுரப்பதால் இரத்தத்தில் சுண்ணாம்புச்சத்து அதிகரிப்பதாலும் சிறுநீரகத்தில் கல் மீண்டும் மீண்டும் உருவாகின்றது.

சிறுநீரகங்களின் அமைவிடம்

முதுகுப்புறம் விலா எலும்புக்கு சற்று கீழே பக்கத்திற்கு ஒன்றாக அவரை விதை வடிவில் வலது, இடது, என இரண்டு சிறுநீரகங்கள் இருக்கும். ஒரு சிறுநீரகத்தின் சராசரி அளவு 4 1/2 அங்குலம் நீளமும் 2 1/4 அங்குலம் சுற்றளவும் இருக்கும். (தோராயமாக ஒரு மனிதனின் மூடிய கையளவு) கிட்டத்தட்ட இருதயமும் இதே அளவில் தான் இருக்கும்) இரண்டு சிறுநீரகங்களும் நேர்கோட்டில் அமைந்திருப்பதில்லை. இடது புறத்தை விட வலதுபுறம் சற்று கீழிறங்கி இருக்கும். இரண்டு சிறுநீரகங்களிலிருந்தும் பக்கத்திற்கு ஒன்றாக சிறுநீர் இறங்கும் குழாய் (Ureter) சிறுநீர் பையோடு (Urinary Bladder) இணைகிறது சிறுநீர்பையில் வந்து சேரும் சிறுநீர் புறவழிப்பாதை (Urethra) மூலம் வெளியேறுகிறது.

சிறுநீரகக்கற்களின் உற்பத்தி

நாம் உட்கொள்ளும் உணவிலுள்ள கற்களே சிறுநீரகத்தில் தங்கி விடுகிறது என்று பலர் தவறாக கருதிக் கொண்டுள்ளனர். ஆனால் உண்மை என்ன வென்றால் நாம் உணவு மூலம் உட்கொள்ளுகிற கற்கள் இரைப்பை, சிறுகுடல், பெருங்குடல், ஆகியபகுதிகளை கடந்து மலத்துடன் சேர்ந்து வெளியேறுகிறது. பின் எவ்வாறு சிறுநீரகத்தில் கற்கள் தோன்றுகிறது என்றால் நமது உடலிலுள்ள இரத்தத்தை நாள் தோறும் ஒவ்வொரு நிமிடமும் சுத்தம் செய்து வடிகட்டி உடலுக்கு வேண்டாத பொருட்களை கழிவாக, சிறுநீராக பிரிக்கும் போது சிறுநீரில் கரைந்திருக்கும் தாதுப் பொருட்கள் படிந்து படிகங்களாக வளர்ந்து கற்களாக உருமாறுகின்றன.

கற்களின் வகைகள்

கால்சியம் ஆக்சாலேட் 75 % பேர்களுக்கு ஏற்படுகிறது. கால்சியம் பாஸ்பேட் 15 % பேர்களுக்கு ஏற்படுகிறது. யூர்க் அசிட் 8 % பேர்களுக்கு ஏற்படுகிறது

கால்சியம் வகை கல்

இரத்தத்தில் கால்சியம் வகை அதிகரிப்பதாலும் ஹைபர் பாரா தைராய்டு அதிக செயல்பாடு காரணமாகவும், உடலில் ஏற்படும் வளர்சிதை மாற்றம் கோளாறுகள் காரணமாகவும், சிறுகுடலில் அதிகப்படியான கோளாறுகள் அடிக்கடி ஏற்பட்டால் அல்லது சிறுநீரகத்தில் கோளாறு ஏற்பட்டாலும் சிறுநீரில் கால்சியம் வெளியேறும் வாய்ப்பு உள்ளது. இவைகளினால் தான் கால்சியம் வகை கற்கள் உருவாகிறது. இவ்வகை கற்கள் சொரசொரப்பாக, கரடு முரடாக கடினத் தன்மையுடையதாக கருநிறத்தில் இருக்கும். உணவில் விலங்கு புரதம், பால் பொருள்கள், பாலிலிருந்து தயாரித்த பொருட்கள் உணவில் தவிர்க்க வேண்டும். இயற்கையான உணவு, பழங்கள், காய்கறிகள் மூலம் கிடைக்கும் புரதம் தேவை. அவற்றை ஒதுக்க வேண்டியதில்லை

கால்சியம் பாஸ்பேட் வகை கற்கள்

இது பெரும்பாலும் குழந்தைகள் மற்றும் பெண்களிடம் உருவாகும், அடிக்கடி சிறுநீர் பாதையில் தொற்று ஏற்படுகிறவர்களுக்கு இக்கல் உருவாகும், பெரிய வடிவத்தில் கல் வளரும் வாய்ப்பு உள்ளது. எனவே இக்கல் மொத்த சிறுநீர் பாதையையும் அடைக்கும் வாய்ப்பு உள்ளது. சாம்பல் கலரில் அழுக்கு படிந்த வெள்ளைநிறம் கொண்ட இக்கல்லை அழுத்தினால் மென்மையாக இருக்கும்.

யூரிக் ஆசிட் வகை கற்கள்

சிறுநீரில் அதிகளவு யூரிக் ஆசிட் வெளியேறுவதால் மூட்டுவாத வலிகள், கால் பெருவிரல் வாதம் வலி ஏற்படும். இந்நோயாளிக்கு கல் மஞ்சள் நிறமாக இருக்கும். கல்லை அழுத்தினால் ஓரளவு கடினத் தன்மையுடன் கூடிய மென்மையுடன் காணப்படும். கடுமையான நோய்வாய்ப்பட்ட காலத்தில், கடுமையான உடற்பயிற்சி செய்துவிட்டு நீர் தேவையான அளவு அருந்தாததால் இவ்வகையான கல் உருவாகும். இவர்களுக்கு சிறுநீர் அடர்த்தியாக மாறும். பலகற்கள் ஒரேநேரத்தில் உருவாகும். இவர்கள் உணவில் இறைச்சி, தக்காளி, ஆப்பிள், காலிஃ ப்ளவர், உருளைக்கிழங்கு, ஆரஞ்சு, எலுமிச்சை தவிர்க்க வேண்டும். கால்சியம் வகைகற்கள் உள்ளவர்கள் இவைகளை உணவில் சேர்த்துக் கொள்ளலாம்.

கல் தோன்றும் இடமும் அறிகுறியும்

சிறுநீரகம் சிறுநீரகத்திலிருந்து சிறுநீர் இறங்கி வரும் குழாய்கள் சிறுநீர்ப்பை இந்த மூன்று இடங்களில் எங்கு வேண்டுமானாலும் கல் உருவாகலாம். சிறுநீரகத்தின் அடிபாகத்தில் கல் இருந்தால் பொதுவாக வலி தோன்றாது. சிறுநீர் இறங்கும் குழாய் நுழைவாயிலில் கல் வந்து நிற்கும் போது கடும் வலியையும் ஆழமான முதுகு வலியையும் ஏற்படுத்தும், கல் நகரத்துவங்கும்போது கல் வடிவத்தை பொறுத்தும் நகரும் வேகத்தை பொறுத்தும் வலி அதிகரிக்கும். சிறுநீர் இறங்கும் குழாயின் மேல் பாகத்தில்கல் சிக்கிக் கொண்டு மீண்டும் நகர்ந்து கல் கீழிறங்கி வர முடியாத நிலையில் இருக்கும்போது வலி முதுகிலிருந்து முன்பக்கமும் சேர்ந்து வரும் அப்போது வயிற்றுப்புண்ணோ, (அல்சரோ) என்று தவறுதலாக நோயை அனுமானிக்க நேரிடும்.

வலதுபுற சிறுநீர் இறங்கு குழாயின் நடுபாகத்தில் கல் மாட்டிக் கொண்டு கீழிறங்கி வரமுடியாத, நிலையில் வயிறுவலி, பிறப்புறுப்பின் மேட்டுப்பாகம் வரை பரவும். இப்போது குடல் வால் அழற்சியாக இருக்குமோ என நோயை தவறாக கருத நேரிடும். இத்தகைய சந்தேகங்களுக்கு X-Ray, Scan பரிசோதனைகள் மூலம் விடை காண முடியும். சிறுநீர் இறங்கும் குழாயின் கீழ்பாகத்தில் கல் சிக்கிக் கொண்டால் அப்போது வலி தொடையிடுக்கு, விதைப்பகுதி, பெண்களுக்கு பிறப்புறுப்பில் கூட வலி ஏற்படும்.

சிறுநீர் இறங்கும் குழாயில் கல் சிக்கிக் கொள்ளும் நேரங்களில் கடுமையான கிருமித் தொற்று ஏற்படும். இதனால் நீர்கடுப்பு நீர் சொட்டு சொட்டாக போதல் எரிச்சல் போன்றவை ஏற்படும். கல் சிறுநீர் பையில் வந்து விழுந்து விட்டால் கல் இங்குமங்கும் உருண்டு வட்ட வடிவமாக அல்லது முட்டை உருவில் மாறும். இங்கிருந்து சிறுநீர் புறவழியாக கல் அதிகாலை வெளியேறும் போது வலிக்கும் இந்நிலையில் தண்ணீர் நிறைய குடிக்க வேண்டும்.

ஹோமியோபதி சிகிச்சை

கல் வடிவம் கல் உருவாகியுள்ள இடம் ஆகிய நிலைகளுக்கு தகுந்தாற்போல சிகிச்சை அமைகிறது. ஹோமியோபதி மருந்து தேர்வு நபருக்கு நபர் மாறுபடும் கல் உருவாகியுள்ள இடத்தை பொறுத்தும், வலியின் தன்மையை பொறுத்தும் நோயுள்ள போது நோயாளியின் மனநிலையை பொருத்தும் மருந்து தேர்வு செய்து சிகிச்சையளிக்கப்படுவதால் கல் கரைந்து வெளியேறுகிறது. குறிப்பாக ஹோமியோபதி மருத்துவ முறையில் கல் மீண்டும் மீண்டும் உருவாகாமல் தடுக்க பெருமளவு வாய்ப்புள்ளது.

சிறுநீரகக் கல்லை கரைக்கவும், வெளியேற்றவும் உதவும் சில முக்கிய ஹோமியோபதி மருந்துகள்

பெர்பெரிஸ் வல்காரிஸ் Q : சிறுநீரகம், சிறுநீர் இறங்கும் குழாய், சிறுநீர்ப்பை ஆகிய இடங்களில் உள்ள கல்லை கரைக்கும், வலியை குறைக்கும், குத்தும் வலி, சிறுநீரகப் பகுதியில் தோன்றும் வலி உடலில் பல பாகங்களுக்கு பரவும், குறிப்பாக கால் கெண்டை சதை வரை பரவும். முதுகுப்புறம் தோன்றும் வலி அழுத்தினால், குனிந்தால், நிமிர்ந்தால் அதிகரிக்கும் (இம்மருந்து பித்தப்பையில் உள்ள கல்லையும் கரைக்கும் என்பது நினைவில் கொள்ளத்தக்கது)

ஹைட்ரேன்ஜியா Q : இருசிறு நீரகங்களில் தோன்றும் கற்களை கரைக்கவும் வெளியேற்றவும் பயன்படும்.

சரசபரில்லா Q : கல்கரைய உதவும் மருந்துகளில் முக்கியமானது. சிறுநீர் இறங்கி வரும் குழாயில் கல் சிக்கிக் கொண்ட நிலையில் உதவும்

ஓசிமம் கானம் Q : வலது புற சிறுநீரக கற்களுக்கு நல்ல மருந்து சிறுநீர் இறங்கும் குழாயில் கல் சிக்கிக் கொண்ட நிலையில் வலி, பிறப்புறப்பு வரை, விதைப்பகுதி வரை பரவி நோயாளி வலி தாங்க முடியாமல் புரளுவார். புலம்புவார். (இதே குறிக்கு பாகம் 6, 30 என்ற மருந்தும் பயன்படும்)

கோக்கஸ் காக்டி Q : இது ஒரு நல்ல வலி நிவாரணி, இடது சிறுநீரகத்திலிருந்து சிறுநீர்பை வரை வலி பரவுதல், சிறுநீரில் ரத்தம், யூரிக் அசிட் செங்கல் தூசி போன்ற படிகம், சிறுநீரக பகுதியிலும், அடி முதுகு, தொடையிடுக்குகளில் வலி, அதனால் சிறுநீர் கழிக்க சிரமம்.

கல்கேரியா கார் 30 : சிறுநீரகம், சிறுநீர்ப்பை ஆகிய இடங்களில் இருக்கும் கல்லை எளிதாக வெளியேற்ற உதவும்.

டயஸ்கோரியா Q : சிறுநீர்ப்பையில் உள்ள கல்லை கரைக்கும், வலிகள், கை, கால், விரல்கள் வரை பரவும்.

காந்தாரீஸ் 30 : சிறுநீர் கழிக்கும் முன்பு, கழிக்கும் போதும், கழித்தபிறகும் கடுமையான எரிச்சல்.

மெக்பாஸ் 30 , 200 : அஜீரணத்திற்காக அடிக்கடி உட்கொள்ளும் ஆங்கில மாத்திரைகளால் தோன்றும் சிறுநீரககல், சிகிச்சையின் போது தாய்த்திரவம்) தந்து வலி குறைந்தவுடன் அதே மருந்தின் வீரியப்படுத்திய மருந்து கொடுத்தால் விரைவில் குணப்படுத்தலாம்.

த்லாப்சி Q : பெண்களுக்கு கர்ப்பப்பை கோளாறுகளுடன் தோன்றும் யூரிக் அசிட் வகைக்கல்லை கரைக்க பயன்படும்.

கல்கேரியா ரெனாலிஸ் 200 : மீண்டும், மீண்டும் கல் உருவாதைத் தவிர்ப்பதற்கு இம் மருந்து பயன்படும்.

தைராய்டினம் 1 M : மீண்டும், மீண்டும், கல் உருவாவதற்கு (வாரம் 1 டோஸ்வீதம் தைராய்டு பிரச்சனைதான் காரணம் என்று பரிசோதனையில் தெரிந்தால். இரண்டு மாதங்கள்)

லைகோபோடியம் Q, 6 : முதுகுவலி, சிறுநீரில் சிவந்த மணல்கள், வலதுபுறம் வலி, சிறுநீர் கழிக்கும் முன்பு முதுகுவலி அதிகமிருக்கும். கழித்தால் வலி குறையும். 6 வது வீரியத்தில் ஒரு மணிக்கொரு டோஸ் வீதம் ஆறு டோஸ் நிவாரணமில்லை என்றால் 200 வது வீரியத்தில் 2 மணி நேரத்திற்கு ஒரு டோஸ் வீதம் 3 டோஸ் இடையில் பெர்பெரீஸ் வல்காரிஸ் தண்ணீரில் கலந்து கொடுத்து வந்தால் நல்ல பலன் காணலாம்.

சிறுநீரகக் கல் 7 M.M. க்கு கீழ் இருந்தால் லைகோபோடியம் 1 M. (அ) 10 M கொடுத்தால் சில மணி நேரங்களில் கல் வெளியேறி அதிசயம் நிகழ்த்தும், இம்மருந்தே அம்மனிதருக்கு 100 % பொருந்தும் மருந்து (உடல்வாகு மருந்து) என்றால் லைகோபோடியம், இங வீரியம் கல் மீண்டும் உருவாகுவதை தடுக்கும். சிறுநீரக கல் 10 M.M. இருந்தால் லைகோபோடியம் Q,30 ஆகிய வீரியம் பயன்படும். 
(நன்றி : மாற்று மருத்துவம் ஜனவரி 2009)