Monday, July 27, 2015

பல் வலி விரைவாக குணமடைய எளிய மருந்து.

பல் வலி வந்தால் தாங்கிக்கொள்ளவே முடியாது. அதற்கு சித்தர்கள், மனித குலம் தழைக்க வேண்டிய பல அரிய மருத்துவ முறைகளை நமக்கு விட்டுச் சென்றிருக்கின்றனர்,  ஏதோ ஏட்டில் படித்தோம் நூலாசிரியரின் உரையை அப்படியே கொடுத்தோம் என்றில்லாமல் ஆய்வு செய்து வெளியீட படுகின்றது .

பல் வலிக்கு பத்தே நிமிடத்தில் தீர்வு

இன்றும் பலரும் பல்வலியால் ( Pain Killer ) மாத்திரைகளை பயன்படுத்துவதை பார்த்திருப்போம். ஆங்கில மருந்தைவிட வேகமாக நிவாரணம் அளிக்க இயற்கை மருந்தைப் பற்றி சொல்கிறோம்.

எந்தப் பல்லில் வலி இருக்கிறதோ அந்தப்பகுதியில் வாயினுள் சர்க்கரை (இலங்கை தமிழர்கள் சீனி என்று பயன்படுத்துவார்கள் )வைத்துவிட்டு, 18 மிளகு- ஐ நன்றாக அரைத்து (அல்லது பொடி செய்து) கால் டம்ளர் தண்ணீரில் விட்டு காய்ச்ச வேண்டும். காய்ச்சிய நீரை சிறிது நேரம் ஆற வைத்து விரல் சூடு தாங்கும் அளவிற்கு வந்ததும், வெளியே வலி இருக்கும் கண்ணத்தின் பகுதியில் இந்த நீரால் நன்றாக தேய்க்க வேண்டும். இதனை செய்து பத்தே நிமிடத்தில் பல் வலி இருந்த இடமே தெரியாமல் மறைந்து விடும். இது கை கண்ட மருந்து. பயன் பெறுங்கள். நண்பர்களிடமும் சொல்லி பயன் பெற வையுங்கள்.

சித்த மருந்தை சோதிப்பவர்கள் கூட இதை பயன்படுத்தி பார்த்து தாங்கள் அடைந்த பலனை மறக்காமல் தெரியப்படுத்துங்கள்.

Wednesday, July 22, 2015

இரண்டே மாதத்தில் கருத்தரிக்க அற்புத எளிய மருத்துவ முறை.

ஆண் பெண்களுக்கு மலட்டுத் தன்மை இருந்தாலும், ஆண்களுக்கு குழந்தையை உற்பத்தி செய்யக் கூடிய உயிர் அணுக்கள் குறைவு பட்டிருந்தாலும் இம்முறையை பயன்படுத்தினால் நிச்சயம் பலன் உண்டு.

வாழை மரத்தின் அடித் தண்டை அறுத்து அதில் குழி செய்து, அதில் கொஞ்சம் நவச்சாரம் பொடி போட்டு அதை நன்றாகப் பாதுகாப்புடன் மூடி, காலையில் வாழைத் தண்டில் ஊறிய நீரை எடுத்து ஆண் பெண் இரு பாலரும் வெறும் வயிற்றில் தொடர்ந்து சுமார் 2 மாதங்கள் குடித்து வந்தால் நிச்சயமாக குழந்தைச் செல்வம் உண்டாகும்.

பக்க விளைவு இல்லாமல் சுலபமாக எளிய வகையில் கருவை கலைக்கும் வழிகள்
சிலர் வாழ்க்கையில் நல்ல முன்னேற்றம் அடைந்து, ஒரு நல்ல நிலைக்கு வந்த பின்னர் குழந்தைப் பெற்றுக் கொள்ளலாம் என்ற எண்ணத்துடன் இருப்பார்கள். இருப்பினும் ஆசையின் காரணமாக எதிர்பாராதவிதமாக சிலர் கருத்தரித்துவிடுகிறார்கள். அப்படி எதிர்பாராத நேரத்தில் கருத்தரிக்கும் போது, அக்கருவை சிலர் கலைக்க முற்படுவார்கள். அப்படி கருவை கலைக்க நினைக்கும் போது, எந்த ஒரு பக்கவிளைவும் இல்லாமல், எதிர்காலத்தில் கருத்தரிக்க நினைக்கும் போது எந்த ஒரு பிரச்சனையையும் ஏற்படுத்தாதவாறு சரியான முறையைக் கையாள வேண்டும். இல்லாவிட்டால், அது விபரீதமாகிவிடும்.

வெல்லம்:

வெல்லம் உடலின் வெப்பத்தை தூண்டும் பொருள். இதிலும் வைட்டமின் சி அதிகம் உள்ளது. ஆகவே, இதனை உணவில் அதிகம் சேர்த்தாலும் கரு அழிந்துவிடும்.

பட்டை:

வைட்டமின் சி அதிகம் நிறைந்துள்ள உணவுப் பொருட்களில் ஒன்று தான் பட்டை. இந்த பட்டை கூட கருச்சிதைவை ஏற்படுத்தும். ஆகவே கரு வேண்டாம் என்பவர்கள், உணவில் பட்டையை அதிகம் சேர்த்து வரலாம்.

அன்னாசி :

கர்ப்பிணிகள் அன்னாசிப் பழத்தை சாப்பிடக்கூடாது என்று சொல்வார்கள். ஏனெனில், அன்னாசிப் பழத்தை சாப்பிட்டால் கருச்சிதைவு ஏற்படும்.

பப்பாளி :

பப்பாளியில் வைட்டமின் சி வளமாக நிறைந்திருப்பதால், இதனை சாப்பிட்டால் கரு கலைந்துவிடும். இதன் விதையை சாப்பிட்டால், நான்கே வாரங்களில் கரு கலைந்துவிடும்.

எள்:

எள்ளானது கருப்பையை சுருக்கும் தன்மை கொண்டவை. அதனால் தான் கர்ப்பிணிகளை எள் சாப்பிட வேண்டாம் என்று சொல்வார்கள். மேலும் இதில் வைட்டமின் சி சத்தும் வளமாக உள்ளது.

கரும்பு:

கரும்பு வைட்டமின் சி மட்டுமின்றி, உடலின் வெப்பத்தை அதிகரிக்கும் தன்மை கொண்டவை. எனவே இதனை உட்கொண்டால், கருப்பையானது சுருங்கி, கருவானது கலைந்துவிடும்.

வேர்க்கடலை:

வேர்க்கடலை சாப்பிட்டால், கரு கலையும் என்பதை பெரும்பாலானோருக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை. இதனை தினமும் ஒரு கையளவு பச்சையாக சாப்பிட்டு வந்தால், கரு கலைந்துவிடும்

குறிப்பு: வைட்டமின் சி எடுத்துக் கொள்ளும் போது, தினமும் 6,000 மி.கி அளவுக்கு மேல் எடுக்கக்கூடாது.

Friday, July 10, 2015

கடலுக்கடியில் மிக அதிக வெப்பம் - நாசா விஞ்ஞானிகள்

கடலுக்கடியில் 300 முதல் 1000 அடி ஆழத்தில் மிக அதிக வெப்பம் மறைந்திருப்பதாக நாசா விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

இந்த வெப்பத்தின் அளவு எதிர்பார்த்ததை விட அதிகம் என அவர்கள் கருதுகின்றனர்.

கடலின் வெப்ப நிலை தற்போதுள்ளதை விட மிக அதிக அளவில் உயர்ந்திருக்கும் என்பதும் விஞ்ஞானிகளின் கருத்தாகும்.

உண்மையில், இந்த வெப்பத்தையும், பூமி வெப்பமயமாதலையும், பசுபிக் மற்றும் இந்தியப் பெருங்கடல்களில் வீசும் சக்தி வாய்ந்த காற்று தடுப்பதாகவும் விஞ்ஞானிகள் குறிப்பிட்டுள்ளனர்.

தற்போது அளவிடப்பட்டுள்ள உலக வெப்பமயமாதலின் வேகமும் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக அவர்கள் நம்புகின்றனர்.

கடந்த 15 ஆண்டுகளில் பூமியின் தரைப்பரப்பு வெப்பநிலையானது 0.05 டிகிரி சென்டிகிரேட் ஆக உயர்ந்துள்ளது.

கடலுக்கும், பூமிக்கும் இடையிலான வெப்பநிலை மாற்றத்திற்கான காரணம் குறித்த ஆய்வுகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன

சிறந்த வீட்டு வைத்திய முறைகள்

உடல்நலக் கோளாறுகளுக்கு தீர்வளிக்கும் இதோ சில மருத்துவ குறிப்புகள்,
வாயுத்தொல்லை
* வாயுவினால் உண்டாகும் வயிற்று வலிக்கு பெருங்கயத்தை நெய்யில் போட்டு பொரித்து சாப்பிடவும்.
* வாயுத்தொல்லை தீர கொய்யாபழம் சிறந்த மருந்து.
* இஞ்சி, சுக்கு, கடுக்காய் சாப்பிட வாயுபிடிப்பு பறந்துபோகும்.
* வாயுத்தொல்லை தீர புதினா துவையல் அதிகமாக சாப்பிடலாம்.
தொடர் விக்கல்
* நெல்லிக்காய் இடித்து சாறு பிழிந்து, தேன் சேர்த்து சாப்பிட்டால் தொடர் விக்கல் தீரும்.

Wednesday, July 8, 2015

ஆண்களின் எந்த வயது விந்தணு கருத்தரித்தலுக்கு உகந்தது!

ஆண்களின் இளம்வயது விந்தணுக்களில் மரபுவழி நோய்க்கூறுகள் பெருமளவு இருக்காது என்பதால் 18 வயதில் விந்தணுக்களை சேமித்து உறைநிலையில் பாதுகாத்து, அதன்மூலம் பிற்காலத்தில் ஆரோக்கியமான பிள்ளைகள் பெறலாம் என்கிற யோசனையால் மருத்துவ உலகில் சர்ச்சை

ஆண்களின் இளம்பருவ விந்தணுக்களில் மரபுவழி நோய்க்கூறுகள் பெருமளவு இருக்காது என்பதால் ஆண்களின் இளவயது விந்தணுக்களை சேமித்து உறைநிலையில் பாதுகாத்து, அதைப் பயன்படுத்தி பிற்காலத்தில் ஆரோக்கியமான பிள்ளைகள் பெறலாம் என்கிற யோசனை ஒன்று பிரிட்டனில் முன்வைக்கப்பட்டிருக்கிறது.

பிரிட்டனில் இருக்கும் 18 வயது ஆண்கள் அனைவரின் விந்தணுக்களும் உறைநிலையில் பாதுகாக்கப்பட்டு, அந்த விந்தணுக்கணைப்பயன்படுத்தி அவர்கள் பிற்காலத்தில் குழந்தைகளை பெற்றுக்கொள்ளலாம் என்று டண்டீயில் அபெர்டி பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த மருத்துவர் கெவின் ஸ்மித் பரிந்துரை செய்திருக்கிறார்.

வயதான ஆண்களின் விந்தணுக்களில் இருந்து பிறக்கும் குழந்தைகளுக்கு குறிப்பிட்ட சில வகை நோய்கள் உருவாகும் சாத்தியங்கள் கூடுதலாக இருப்பதால், இளவயது விந்தணுக்களை சேமித்து வைத்து அதைப்பயன்படுத்தி பிள்ளைகளை பெற்றுக்கொள்வதன் மூலம், குழந்தைகளின் எதிர்கால நோய்களை தடுக்க முடியும் என்கிறார் அவர்.

"வயதான ஆண்களில் பெரும்பான்மையானவர்கள் நல்ல ஆரோக்கியமான குழந்தைகளை பெற்றுக்கொள்ளலாம். ஆனால் அதில் சில ஆபத்துக்கள் இருக்கவே செய்கின்றன. ஆண்களுக்கு வயதாக, ஆக, அவர்களின் விந்தணுக்களில் மரபணுமாற்றக்கோளாறுகள் அதிகரிக்கக்கூடிய வாய்ப்புகளும் அதிகரிப்பதாக ஆய்வுகள் கூறுகின்றன. மரபணு மாற்றங்களால் இத்தகைய பாதிப்புகள் ஏற்படுகின்றன. எனவே ஆண்களுக்கு வயதாக ஆக, அவர்களின் விந்தணுக்களின் மரபணு மாற்றத்தால் ஏற்படக்கூடிய குறிப்பிட்ட சில வகையான பாதிப்புகளும் அதிகரிக்கும். இத்தகைய மரபணு பாதிப்புகள் பலவகைப்பட்டன. குறிப்பாக நரம்பு மண்டலம் மற்றும் உளவியல் பாதிப்புகள் அதிகம் ஏற்படக்கூடும் என்று தெரிகிறது. ஆடிசம் என்கிற மனவளர்ச்சி குன்றிய நிலை, ஸ்கிட்சோப்ரீனியா என்கிற மனப்பிறழ்வு நோய் மற்றும் அறிவுத்திறன் குறைபாடு உள்ளிட்ட பல்வேறு வகையான நோய்கள் உருவாக்கும் வகையில் வயதான ஆண்களின் விந்தணுக்களில் மாற்றம் ஏற்படுகிறது," என்று பிபிசியிடம் விளக்கினார் அபெர்டி பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த மருத்துவர் கெவின் ஸ்மித்.

இந்த பிரச்சனையை தவிர்க்கும் வகையில் பிரிட்டனில் இருக்கும் 18 வயதான ஆண்கள் அனைவரின் விந்தணுக்களையும் தேசிய சுகாதாரச் சேவையின் மருத்துவமனைகளில் சேகரித்து உறைநிலையில் பாதுகாக்க வேண்டும் என்று யோசனை தெரிவித்திருக்கிறார் அவர்.

பிரிட்டன் உள்ளிட்ட பல வளர்ச்சியடைந்த மேற்குலக நாடுகளில் வயதான ஆண்கள் குழந்தைகளை பெற்றுக்கொள்ளும் போக்கு அதிகரித்தபடி இருக்கிறது. அதுமட்டுமல்லாமல், பொதுவாகவே ஆண்கள் தந்தையாகும் சராசரி வயதின் அளவும் தொடர்ந்து கூடிக்கொண்டே செல்கிறது. உதாரணமாக 1990களில் இங்கிலாந்திலும் வேல்ஸிலும் ஆண்கள் தந்தையாகும் சராசரி வயது 31 ஆக இருந்தது. அது தற்போது 33 வயதாக அதிகரித்திருக்கிறது.

அறுபது வயதுக்கு மேலும் ஆண்கள் எளிதில் தந்தையாகலாம் என்கிற சாத்தியம் இருந்தாலும் அதற்கான பலாபலன்களும் இருக்கவே செய்கின்றன.

மருத்துவ தார்மீக அற நெறிகளுக்கான ஆய்வு சஞ்சிகையில் தனது பரிந்துரையை முன்வைத்திருந்த மருத்துவர் ஸ்மித், வயதான ஆண்களின் விந்தணுக்களில் ஏற்படும் பாதிப்புக்களின் சதவீத அளவு தனிப்பட்ட ரீதியில் மிகவும் குறைவாகத் தோன்றினாலும், ஒட்டுமொத்த நாட்டின் மக்கள் தொகையை கணக்கிட்டுப் பார்த்தால் பாதிப்பின் அளவு மிகப்பெரிதாக இருக்கும் என்கிறார் அவர்.

எனவே இளவயது விந்தணுக்களை பாதுகாப்பது விதியாக்கப்பட வேண்டும் என்கிறார் அவர். சமூகத்தின் நன்மையை கணக்கில் எடுத்துக்கொண்டால், தற்போதைய தலைமுறையின் தந்தையாகும் ஆண்களின் வயது தான் அடுத்த தலைமுறையின் ஆரோக்கியத்தை நிர்ணயிக்கும் என்பது குறித்து நாம் கண்டிப்பாக கவனம் செலுத்த வேண்டியது அவசியம் என்றும் அவர் பிபிசியிடம் வலியுறுத்தினார்.

அப்படியானால் ஆண்கள் எந்த வயது வரை இயல்பாக தந்தையாகலாம்? எந்த வயதுக்குப் பிறகு ஏற்கனவே சேமித்து வைத்திருக்கும் தங்களின் இளவயது விந்தணுக்களை பயன்படுத்தி தந்தையாக வேண்டும்? என்கிற கேள்விகளுக்கு பதிலளித்த அவர், இதற்கு குறிப்பிட்ட வயது என்று ஒன்றை வரையறுப்பது கடினம் என்றாலும், நாற்பது வயது கடந்த ஆண்கள் தமது இளவயது விந்தணுக்களை பயன்படுத்தும்படி பரிந்துரைக்கப்படலாம் என்றும் தெரிவித்தார்.

பிரிட்டனில் தனியார் விந்தணு வங்கிகளில் விந்தணுக்களை சேமித்துவைக்க ஒரு ஆணுக்கு ஆண்டுக்கு 150 முதல் 200 பிரிட்டிஷ் ஸ்டெர்லிங் பவுண்ட்கள் கட்டணம் செலுத்தவேண்டும். ஆனால் தேசிய சுகாதார சேவை மையத்தில் இந்த விந்தணு சேமிப்பு செய்யும்போது இதற்கான கட்டணத்தை பெருமளவு குறைக்க முடியும் என்கிறார் அவர்.

ஆனால் இந்த ஒட்டுமொத்த யோசனையுமே முட்டாள்தனமானது என்கிறார் ஷெபீல்ட் பல்கலைக்கழகத்தின் ஆண் இனப்பெருக்கவியல் துறையின் பேராசிரியர் ஆலன் பேசி.

வயதான ஆண்களின் விந்தணுக்களில் இருந்து பிறக்கும் குழந்தைகளுக்கு நோய் உருவாகும் சாத்தியம் மிக மிகக் குறைவு என்கிறார் அவர்.

அதுவும் தவிர பல ஆண்களின் விந்தணுக்களை உறை நிலையில் பாதுகாப்பது கடினம் என்கிறார் அவர். ஏனென்றால் பல ஆண்களின் விந்தணுக்கள் சரியாக உறையாது என்று சுட்டிக்காட்டும் ஆலன் பேசி, அதனால் தான் பல ஆண்களால் விரும்பினாலும் தமது விந்தணுக்களை தானமாக வழங்க முடியாது என்றும் தெரிவித்தார்.

எனவே இளவயதில் விந்தணுக்களை சேமித்துவைத்து முதிய வயதில் பிள்ளை பெற்றுக்கொள்ளலாம் என்கிற வழிமுறையின் கீழ், அந்த ஆண்களின் மனைவிகள் ஒன்றுக்கும் மேற்பட்ட முறை செயற்கை கருத்தரிக்கும் சிகிச்சைக்கு உள்ளாக வேண்டி வரும் என்றும் அவர் கூறினார்.

இவரைப்போலவே, பிரிட்டிஷ் மகப்பேறு சங்கத்தின் பேராசிரியர் ஆடம் பேலனும் விந்தணுக்களை இளவயதில் சேமிக்கும் பழக்கத்தை விமர்சிக்கிறார்.

ஒட்டுமொத்த இனப்பெருக்க செயற்பாட்டையுமே செயற்கையானதாக மாற்றும் இந்த நடைமுறையில், உறுதியாக குழந்தை பிறக்கும் என்பதற்கோ, அப்படி பிறக்கும் குழந்தை கண்டிப்பாக எந்த நோயும் இல்லாமல் பிறக்கும் என்பதற்கோ எந்த உத்தரவாதமும் இல்லை என்கிறார் அவர். இது ஒருவித பொய்யான பாதுகாப்புணர்வைத் தருவதாக கூறுகிறார் ஆடம் பேலன்.

அதுமட்டுமல்ல, உறைநிலையில் சேமித்துவைக்கப்பட்ட விந்தணுக்கள் முட்டையை கருவாக்கும் திறனில் இயல்பான விந்தணுக்களைவிட வீரியம் குறைவாக இருக்கும் என்றும் அவர் எச்சரித்தார்.

ஆண்களையும் பெண்களையும் தங்களின் விந்தணுக்களையும், கருமுட்டைகளையும் உறைநிலையில் சேமித்து வைக்கச் சொல்வதற்கு பதிலாக, இளவயது தம்பதிகள் குழந்தைகளை பெற்றுக்கொள்வதையும், வேலைக்குச்செல்வதையும் ஊக்குவிக்கும் வகையிலான கட்டமைப்புகளை ஏற்படுத்துவதே இந்த பிரச்சனைக்கு ஏற்கத்தக்க நிரந்தர தீர்வாக இருக்கும் என்கிறார் அவர். ஸ்கேண்டிநேவிய நாடுகளில் இத்தகைய அணுகுமுறையும், அதற்குத்தேவையான கட்டமைப்பும் சிறப்பாக செயற்படுவதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

அதேசமயம், ஆண்களும்கூட தங்களின் எதிர்கால குடும்ப அமைப்பு குறித்து இளவயதிலேயே சிந்தித்து முடிவெடுக்க வேண்டியது அவசியம் என்கிறார் பிரிட்டனின் ஆண் இனப்பெருக்கச் சங்கத்தின் தலைவி ஷீனா லுவிஸ்.

ஆண்களானாலும் சரி, பெண்களானாலும் சரி தங்களின் இருபது அல்லது முப்பது(வயது)களில் குழந்தைகளைப் பெற்றுக்கொள்வதே சிறந்தது என்கிற செய்தியை இளம் தலைமுறைக்கு வலுவாக புரியவைக்க வேண்டும் என்கிறார் ஷீனா லுவிஸ்.

Monday, July 6, 2015

கொதித்தாறிய நீரை மீண்டும் கொதிக்கவைக்க வேண்டாம்.

தேநீர் செய்ய ஒரு கெண்டி நீரை அடுப்பில் கொதிக்க வைக்கிறீர்கள். பின் அதனை அணைத்து விடுகிறீர்கள். மேலும் வேறு ஒரு விஷயத்தால் உங்கள் கவனம் திசை திருப்பப்படுகிறது. தேநீர் வேண்டும் என்று நீங்கள் மீண்டும் நினைக்கும் போது அந்த நீர் ஆறிப் போயிருக்கும். எனவே நீங்கள் மீண்டும் அந்த நீரை கொதிக்க வைப்பீர்கள். மீண்டும் இது நடக்கும். நிறுத்துங்கள்! அதே நீரை மீண்டும் கொதிக்க வைக்க வேண்டாம். இதை நீங்கள் ஏற்கனவே செய்திருந்தால், அதனை மாற்ற கால தாமதம் ஆகிவிட்டது. ஆனால் எதிர்காலத்தில் இதை எப்போதும் செய்யாதீர்கள். மீண்டும் கொதிக்க வைக்கும் நீர் மிகவும் ஆபத்தானதாகும். ஏன்? ஏனெனில் நீரின் இரசாயன கூட்டமைப்பு கொதிக்க வைக்கும் போது மாறிவிடும். நீரைக் கொதிக்க வைக்கும் போது அதிலிருந்து வரும் நீராவியை நீங்கள் எப்படி உங்கள் கண்களால் பார்க்க முடிகிறது என்று தெரியுமா? நீரில் உள்ள ஆவியாகும் சேர்மங்கள் நீரை கொதிக்க வைக்கும் போது ஆவியாக மாறி நீராவியாக அதனை விட்டு வெளியேறுகின்றன. நீங்கள் நீரை ஆற வைக்கும் போது அதிலுள்ள கலைக்கப்பட்ட ஆவியான வாயுக்கள் மற்றும் கனிமங்கள் மீண்டும் அதிலேயே படிகின்றன. வெந்நீர் குடிப்பதால் கிடைக்கும் 9 நன்மைகள்!!! நீங்கள் நீரை மறுபடியும் கொதிக்க வைக்கும் போது அதிலுள்ள இரசாயன சேர்மங்கள் மீண்டும் மாற்றம் அடையும். அது தீங்கு விளைவிக்கக்கூடியதாகும். நீரை மீண்டும் கொதிக்க வைக்கும் போது, நீரில் உள்ள ஆபத்தான கூறுகள் அதனை விட்டு வெளியேறுவதற்கு பதிலாக நீரிலேயே சேமிக்கப்பட்டு விடும்.