Showing posts with label Local News. Show all posts
Showing posts with label Local News. Show all posts

Wednesday, March 9, 2016

வெளிநாட்டு வாழ் இலங்கையர்களுக்கு இரட்டைக் குடியுரிமை!!

வெளிநாடுகளில் வாழ்ந்து வரும் 1500 இலங்கையர்களுக்கு 15ம் திகதி இரட்டைக் குடியுரிமை வழங்கப்பட உள்ளதாக உள்விவகார அமைச்சர் எஸ்.பி. நாவீன்ன கொழும்பு பத்திரிகையொன்றுக்குத் தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்…

 'ஜனாதிபதியிடம் கூறுங்கள்' சேவைக்கு 44,677 முறைப்பாடுகள் குவிந்தன

ஜனாதிபதியிடம் கூறுங்கள்' நிகழ்ச்சித்திட்டம் ஆரம்பிக்கப்பட்டு நேற்றுடன் இரண்டு மாதங்கள் நிறைவடைந்துள்ள நிலையில் 44,677 முறைப்பாடுகள்இதுவரை கிடைக்கப்பெற்றுள்ளதாக ஜனாதிபதியின் ஒருங்கிணைப்பாளர் சிரால் லக்திலக்க தெரிவித்துள்ளார்.

Monday, March 7, 2016

மகளிர் தினம் 2016 - ஓர் தொகுப்பு

மார்ச் 8ம் தேதி உலகம் முழுவதும் மகளிர் தினம் விமரிசையாக கொண்டாடப்படுகிறது. தாயாக, மனைவியாக, தங்கையாக, மகளாக என்று நம் உறவின் அனைத்து பகுதியிலும் நீக்கமற நிறைந்திருப்பவர்கள் பெண்கள். ஒவ்வொரு ஆணின் வெற்றிக்கு பின்னாலும் ஒரு பெண் இருப்பாள் என்று கூறப்படுவது இதனால்தான். ஒருவரின் சொந்த நாடு கூட, தாய் நாடு என்றுதான் அழைக்கப்படுகிறது.

இதேபோல் நதிகள், மலைகள் என்று முக்கியமானவை அனைத்துக்கும் பெண்கள் பெயர்கள்தான் வைக்கப்படுகிறது. அந்த அளவுக்கு பெண்மைக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. பெண்களை போற்றும் விதத்தில் ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 8ம் தேதி உலகம் முழுவதும் பெண்கள் தினவிழா கொண்டாடப்பட்டு வருகிறது.

இந்த நாள் எப்படி தேர்ந்தெடுக்கப்பட்டது என்று தெரியுமா?  

1789 ஆம் ஆண்டு ஜூன் 14ம் தேதி சுதந்திரத்துவம், சமத்துவம், பிரநிதிநித்துவம் என்ற கோரிக்கைகளை முன்வைத்து பிரெஞ்சுப் புரட்சியின்போது பாரீசில் பெண்கள் போர்க்கொடி உயர்த்தினர். ஆணுக்கு நிகராக பெண்கள் இந்த சமுதாயத்தில் உரிமைகள் பெற வேண்டும் என்றும், வேலைக்கேற்ற ஊதியம், எட்டு மணிநேர வேலை, பெண்களுக்கு வாக்குரிமை, பெண்ணடிமைகளாக நடத்தப்படுவதிலிருந்து விடுதலை ஆகியவற்றுக்காக அவர்கள்  போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கையில் கிடைத்த ஆயுதங்களுடன் அவர்கள் பாரீஸ் நகரத் தெருக்களில் அணி திரண்டனர். புயலாக கிளம்பிய பெண்களை துரும்பாக எண்ணிய அந்நாட்டு அரசன், அவர்களை தன் இரும்புக் கரம் கொண்டு அடக்குவேன் என்றும், ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுவோரை கைது செய்வேன் எனவும் அறிவித்தான். ஆயிரக்கணக்கான பெண்கள் கூட்டம். அவர்களுக்கு ஆதரவாக ஆண்களும் ஆயிரக்கணக்கில் கலந்து கொள்ள உற்சாகம் கரைபுரள கோஷங்கள் வானைப் பிளக்க அரண்மனை நோக்கி ஊர்வலம் கொட்டும் மழையில் ஊர்ந்து சென்றது.

அரண்மனை முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட அனைவரையும் கைது செய்வோம் என்று மிரட்டிய அரசனின் மெய்க்காப்பாளர் இருவரை திடீரென கூட்டத்தினர் பாய்ந்து தாக்கிக் கொன்றனர். இதை எதிர்பாராத அரசன் அதிர்ந்து போனான். கோரிக்கைகளை கண்டிப்பாக பரிசீலிப்பேன். உங்களுக்குச் சாதகமாக அறிவிப்பேன் என்று ஆர்ப்பாட்டத்தில் கொதித்தெழுந்தவர்களை சமாதானப்படுத்தினான். ஆனால், அவனால் வாக்குறுதிப்படி நடவடிக்கை எடுக்க முடியவில்லை. இதையடுத்து அரசன் லூயிஸ் பிலிப் முடிதுறந்தான்.

இந்தச் செய்தி ஐரோப்பிய நாடுகளில் வேகமாகப் பரவிட அங்கும் பெண்கள் போராட்டங்களில் ஈடுபட்டனர். தொடர்ந்து கிரீஸில் லிசிஸ்ட்ரடா தலைமையில் ஜெர்மனி, ஆஸ்திரியா, டென்மார்க் நாடுகளைச் சேர்ந்த பெண் பிரதிநிதிகள் கலந்துகொண்டு தொடர் போராட்டங்களில் ஈடுபட ஆளும் வர்க்கம் அசைந்து கொடுக்கத் தொடங்கியது. இத்தாலியிலும் பெண்கள் இதுதான் சமயம் என்று தங்களது நீண்டநாள் கோரிக்கையான வாக்குரிமையைக் கேட்டு ஆர்ப்பாட்டங்களில் இறங்கினர். பிரான்சில், புருஸ்ஸியனில் இரண்டாவது குடியரசை நிறுவிய லூயிஸ் பிளாங்க், பெண்களை அரசவை ஆலோசனைக் குழுக்களில் இடம்பெறச் செய்யவும் பெண்களுக்கு வாக்குரிமை அளிக்கவும் ஒப்புதல் தந்தான். அந்த நாள் 1848ம் ஆண்டு மார்ச் 8ம் நாளாகும். 

அந்த மார்ச் 8ம் தேதிதான் அனைத்துலக பெண்கள் நாள் உலகெங்கும் அமைய ஒரு வித்தாக  அமைந்தது. இதேபோல், அமெரிக்காவின் தொழிற்புரட்சி நகரான நியூயார்க்கில், நெசவுத் தொழிலில் பெருமளவு பெண்கள் ஈடுபட்டிருந்தனர். இவர்கள் பதினாறு மணிநேரம் வேலை செய்து மிகக் குறைவான ஊதியத்தைப் பெற்றனர். அந்த ஊதியத்தைப் பெறுவதற்குக் கூட நிர்வாகத்தில் உள்ளவர்களின் உடற்பசிக்கு இணங்கினால் தான் கிடைக்கும் என்ற நிலை இருந்தது. 1857ல் நியூயார்க் நகரில் உழைக்கும் பெண்கள் கூடி குரல் எழுப்பினர். தொடர்ந்து போராட்டங்கள், பெண்கள் அமைப்புகள் தோன்றின.

1908ல் வாக்குரிமை கேட்டுக் கொதித்து எழுந்தனர். ஜனாதிபதி தியோடர் ரூஸ்வெல்ட்டே போராட்டத்தின் தாக்கம் கண்டு குலைந்து போனார். போராடினால்தான் உரிமைகள் கிடைக்கும் என்ற சிந்தனை உலகெங்கும் கிளர்ந்தெழுந்தது. அதன் விளைவு 1910ல் ஹேகனில் அனைத்துலக பெண்கள் நாள் மாநாடு கிளாரா தலைமையில் கூடியது. அதன் தொடர்பாக சர்வதேச மகளிர் அமைப்பு தோற்றுவிக்கப்பட்டது. இந்த அமைப்பின் சார்பில் 1911ம் ஆண்டு மார்ச் 19ம் தேதி ஜெர்மனி, ஆஸ்திரியா, டென்மார்க் மற்றும் சில ஐரோப்பிய நாடுகளிலிருந்து வந்து கலந்து கொண்ட மகளிர் பிரதிநிதிகளின் முதல் சர்வதேச மகளிர் தினத்தைக் கொண்டாடினர்.

இந்தக் கூட்டத்தில் தான், அரசன் லூயிஸ் பிளாங்க் பெண்களுக்கு வாக்குரிமை அளிக்க ஒப்புதல் அளித்த நாளான மார்ச் 8ம் தேதியை நினைவு கூரும்  வகையில், ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 8ம் தேதியை சர்வதேச மகளிர் தினமாகக் கொண்டாட முடிவு செய்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.பின்வந்த நாட்களில் ஐ.நா. பெண்கள் அமைப்பு சார்பில் அனைத்துலக பெண்கள் நாள் கடைப்பிடிப்பது என முடிவெடுக்கப்பட்டதன் அடிப்படையிலேயே  ஆண்டுதோறும் மார்ச் 8ம் தேதி கொண்டாடப்படுகிறது.

மேலும் 

பெண்ணின் பெருமையை உயர்த்தும் நாடே இந்த மண்ணுலகில் உயர்ந்துள்ளது. தகவல் தொழில் நுட்பம் வளர்ச்சியடைந்துள்ள இன்றைய கால கட்டத்தில் பெண்கள் பல்வேறு துறைகளில் ஆணுக்கு சமமாகவும், ஆண்களை விட அதிகமாகவும் முன்னேறி வருகின்றனர். சர்வதேச மகளிர் தினம் கொண்டாடப்படும் இந்தநேரத்தில் பெண்களின் பெருமையையும், அவர்களின் முன்னேற்றத்திற்கு பலரும் ஆற்றிய பங்கினையும் அறிந்து கொள்வோம்.
பெண்களின் பெருமையை பல நூற்றாண்டுகளுக்கு முன்பிருந்தே அறிந்து கொள்ளலாம். புராண காலத்துக் காரைக்காலம்மையார் போன்றவர்களையும் நளாயினி, சாவித்திரி, சந்திரமதி, தாரா, மண்டோதரி, சீதா போன்ற பெண்ணரசிகளை இன்றும் கற்றோரும் மற்றோரும் போற்றுகின்றனர்.
காப்பிய நாயகிகள்
சங்க காலம் தழுவிய காப்பியங்களான சிலப்பதிகாரம், மணிமேகலை, சீவக சிந்தாமணி, குண்டல கேசி, வளையாபதி ஆகியவற்றில் உள்ள பெண் பாத்திரங்களின் வரலாறுகள் பெண்ணியத்திற்கு பெருமைத் தேடி தந்துள்ளன. சிலம்பில் கண்ணகி, மாதவி, கவுந்தியடிகள், தேவந்தி, போன்றவர்களின் வரலாறுகள் பல பண்புகளை உயர்த்தி நிற்கின்றன. கண்ணகி தெய்வமாகியது பெண்மைக்கே உய்வு தருவது மாதவி, மணிமேகலையின் துறவு மேன்மை போன்றவற்றை மறக்க முடியாது.
பெண்பாற் புலவர்கள்
சங்க காலத்திலேயே பெண்கள் கல்வியில் சிறந்தவர்களாக இருந்துள்ளனர். தலைமைப் பண்பு மிக்கவர்களாக சரித்திர சாதனை புரிந்துள்ளனர். ஒளவையார், காவற்பெண்டு, பாரிமகளிர், குறமகள் இளவெயினி, வெண்ணிக்குயத்தியார், நன்முல்லையார், வெண்பூதியார், காக்கைபாடினியார், நச்செள்ளையார் போன்றவர்களும் இன்னும் பலரும் காட்டப்படுகிறார்கள். மன்னர்களுடன் இப்புலவர்களின் தொடர்பு, அதியமான் ஒளவைக்கு நெல்லிக் கனி கொடுத்தது, தூது போன காட்சிகளும் உண்டு. ஆதி சங்கரருடன் வாதம் செய்த பெண் பற்றியும் வரலாறு உண்டு.
இலக்கியத்தில் பெண்ணின் பெருமை
பக்தியை பேசும் இலக்கியத்தில் பெரிய புராணம் முதன்மையானது. 28 பெண்களைப் பற்றி குறிப்பிடுகின்றது. இருபத்தியொருவர் நாயன்மாரது மனைவியர், தாயார் நால்வர், மகள்மார் இருவர், உடன் பிறப்பு ஒருவர், காரைக்காலம்மை, இசைஞானியார், மங்கயர்க்கரசியார் ஆகிய மூவரும் நாயன்மார்களுக்கு இணையான பேறு பெற்றனர். சிவனுக்காக பிள்ளைக்கறி சமைத்த, சிறுத் தொண்டர் மனைவியை "மனையறத்தின் வேராகி" என்று சேக்கிழார் புகழ்ந்துள்ளார்.. புராணக் கதைகள் கற்பனை என்று சாதித்து வாதிப்பவரும் உண்டு.
வீர மங்கைகள்
சங்க காலத்தில் வீரத்தின் விளை நிலமாகவும் பெண்கள் விளங்கினர். போர்க்களத்தில் தீரமுடன் போராடிய வீர மங்கையர்களையும் படித்திருக்கிறோம். ஆங்கிலேய ஆட்சியில் ஜான்சிராணியை மறக்க முடியுமா? இவையே ஆணின் வெற்றிக்குப் பின் பெண் இருக்கிறாள் என்பதை நிரூபித்துள்ளது.
பாரதியும் பெண்ணியமும்
பெண்ணின் பெருமையை உலகிற்கு பறைசாற்றியதில் பாரதிக்கு பெரும் பங்குண்டு. பாண்டிச்சேரியில் தனித்திருந்த பாரதியார், தேநீர் தயாரித்து அருந்த தடுமாறிய நிலையில் செல்லம்மாளை உணர்ந்தார், பெண்ணின் விடுதலைக்காக பாடினார். வேதநாயகம் பிள்ளை சுகுண சுந்தரியில் குழந்தை மணத்தை கண்டித்தார். பெண் கல்வி வளர்ந்தது. சமுதாயம் உயர்ந்தது. தொழில் பகுதி உயர்ந்தது, மகளிரும் தொழில் வாய்ப்பை பெற்றனர். மாதவையா, கல்கி போன்றவர்களைத் தொடர்ந்து பின் வந்தவர்களும் பெண்ணின் பெருமை பேசினர். மகளிருக்கென சிறந்த ஊடகங்கள் பறைசாற்றின.

எழுத்தாளர்கள், இசையரசிகள், சொற்பொழிவாளர்கள், அரசியல் தலைவர்கள், ஆராய்ச்சியாளர்கள் எனப் பல்வேறு துறைகளிலும் கொடிகட்டிப் பறப்பது நாட்டிற்கும் வீட்டிற்கும் பெருமையே பெண்களால் எதையும் சாதிக்க முடியும் என்று நினைத்து சாதிப்பதோடு அன்றாடம் கிடைத்த ஊடகங்கள் அனைத்தின் மூலமும் போதித்து பெண்ணுரிமையை பேணிக்காக்க அயராது முயல வேண்டும். நாட்டை ஆட்சி செய்ய மன்னன் இருந்தாலும் ஒரு வீட்டை ஆட்சி செய்ய ஒரு பெண்தான் வேண்டும் என்பது எவராலும் மறுக்க முடியாத உண்மை.

Saturday, March 5, 2016

மட்டக்களப்பின் சில உணவகங்களில்..

மட்டக்களப்பின் சில உணவகங்களில் இன்றைய நிலையை எடுத்துக்கட்டும் சில படங்கள் கிடைக்கப்பட்டுள்ளன.







மலேசியாவின் பாதுகாப்பு பணியாளராக இலங்கையர்களுக்கும் வாய்ப்பு

மலேசியாவில் பாதுகாப்பு பணியாளர்களாக கடமையாற்ற இலங்கையர்களுக்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது. இத்தகவலை, மலேசியாவின் உள்துறை பிரதியமைச்சர் டட்டுக் நூர் ஜஸ்லான் வெளியிட்டுள்ளார். மலேசியாவில், இதுவரை காலமும் 'கூர்க்காக்கள்' என்ற பெயருக்காக நேபாளிகள் மட்டுமே பாதுகாப்புப் பணியாளர்களாக நியமிக்கப்பட்டிருந்தனர். எனினும், நேபாளத்திலிருந்து இந்தப் பணிகளுக்கு வருவோரின் தொகை வரையறைக்கு உட்பட்டிருப்பதால், வேறு நாட்டவர்களுக்கும் இதனை விஸ்தரிக்க தற்போது முடிவெடுக்கப்பட்டுள்ளதாக உள்துறை பிரதியமைச்சர் தெரிவித்துள்ளார். குறித்த பாதுகாப்பு பணியாளர்கள், இலங்கையில் இருப்பதைப்போன்று இராணுவ அடிப்படையை கொண்டவர்களாக இருப்பதை தாம் விரும்புவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். 

ஸ்ரீ விக்ரம ராஜசிங்கன் மன்னனின் மனைவியான ராணி வெங்கட ரெங்கம்மாள் தேவி வசித்து வந்த இல்லம் இன்று திறந்து வைக்கப்பட்டுள்ளது.


கண்டி ராஜ்ஜியத்தை ஆண்ட இலங்கையின் இறுதி மன்னனான ஸ்ரீ விக்ரம ராஜசிங்கன் மன்னனின் மனைவியான ராணி வெங்கட ரெங்கம்மாள் தேவி வசித்து வந்த கண்டி மெதவாசல இல்லம் வெளிநாட்டவர்களின் புகைப்பட கண்காட்சிக்காக இன்று திறந்து வைக்கப்பட்டுள்ளது.
உயர்கல்வி அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்ல, கல்வியமைச்சர் அகில விராஜ் காரியவசம் ஆகியோர் இதனை திறந்து வைத்தனர்.
மத்திய கலாசார நிதியம் ராணி ரெங்கம்மாள் தேவி வசித்த இல்லத்தை புனரமைப்புச் செய்திருந்தது.
இல்லத்தை பார்வையிட வரும் வெளிநாட்டவர்களிடம் ஒரு டொலர் கட்டணமாக அறவிடப்படவுள்ளதுடன் தேசிய சுற்றுலாப் பயணிகளிடம் 20 ரூபா கட்டணமாக அறவிடப்படவுள்ளது.
அத்துடன் 12 வயதுக்கும் குறைந்த சிறுவர்களுக்கு 10 ரூபாவும் பாடசாலை மாணவர்களுக்கு இலவசமாகவும் இல்லத்தை பார்வையிட முடியும் என மத்திய கலாசார நிதியம் அறிவித்துள்ளது.
மதுரை நாயக்கர் வம்சத்தை சேர்ந்த ஸ்ரீ விக்ரம ராஜசிங்கன் (1798 ஆம் ஆண்டு முதல் 1815 ஆம் ஆண்டு வரை கண்டி ராஜ்ஜியத்தை ஆட்சி செய்தார்.
இலங்கையின் கண்டி அரசை ஆண்ட கடைசி மன்னன், முன்னைய அரசன் ஸ்ரீ ராஜாதி ராஜசிங்கன் பிள்ளைகள் இன்றி இறந்தபோது இவர் சிம்மாசனம் ஏறினான்.
இறுதியாகக் கண்டிப் போரில் 1815ல் பிரித்தானியரால் தோற்கடிக்கப்பட்ட மன்னர் சிறை பிடிக்கப்பட்டு, தமிழ் நாட்டின் வேலூருக்கு கொண்டு செல்லப்பட்டார்.
ஸ்ரீ விக்ரம ராஜசிங்கன் மன்னனின் இயற்பெயர் கண்ணுசாமி என்பது குறிப்பிடத்தக்கது.


பயங்கரவாத தடைச்சட்டம் விரைவில் ரத்து செய்யப்படும் - மங்கள சமரவீர

நாங்கள் நல்லிணக்கத்தை மேற்கொள்ளவும், உண்மையை கண்டறியவும் பொறிமுறையொன்றை உருவாக்கவுள்ளோம். அந்த வடிவத்தை தயாரிப்பதற்காக தற்போது கலந்துரையாடல்களும், ஆலோசனைகளும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. அந்தவகையில் பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்கிவிட்டு சர்வதேச கோட்பாடுகளுக்குட்பட்ட   சட்டமொன்றை கொண்டுவருவதற்கு முயற்சிக்கின்றோம் என்று வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்தார்.
ஜெனிவாவில் நடைபெற்ற ஜனநாயக சமூகம் தொடர்பான நிகழ்வொன்றில் நேற்றுமுன்தினம் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர மேற்கண்டவாறு கூறினார். 
அவர் அங்கு மேலும் உரையாற்றுகையில், 
இலங்கையில் ஜனநாயகம் என்பது நீண்டகாலமாக பயங்கரவாதிகளின் தனிநாட்டு கிளர்ச்சிகள் காரணமாக அச்சுறுத்தலுக்குட்பட்டு காணப்பட்டது. அந்த பயங்கரவாதக் குழுவினர் சிறுவர்களை தமது படையில் இணைத்ததுடன், ஜனநாயகத் தலைவர்களையும் கொலை  செய்தனர். ஜனநாயகத்தை சீர்குலைத்தனர். அதனால் தான் ஜனநாயகத்தில் அங்கத்துவம் வகிக்காத பயங்கரவாத தடைச் சட்டத்தைக்கூட நாங்கள் கொண்டுவர நேர்ந்தது. 
பயங்கரவாதம் முடிவுக்கு வந்ததும் மக்கள் சுதந்திரமாக வாக்களிக்க ஆரம்பித்தனர். 30 வருடங்களாக இலங்கையை பயங்கரவாதம் ஆட்கொண்டது. இக் காலத்தில் பல்வேறு அரசாங்கங்களின் தலைவர்கள் சர்வதேச உதவியுடன் பேச்சுவார்த்தைகளினூடாக தீர்வுக்கு செல்ல முயற்சித்தபோதும் அந்த முயற்சிகள் வெற்றிபெறவில்லை.
2009 ஆம் ஆண்டு யுத்தம் முடிவுக்கு வந்ததும் ஜனநாயகம் மீண்டும் வலுவடையும் என மக்கள் எதிர்பார்த்தனர். யுத்தம் முடிந்ததும்  நல்லிணக்கம் முன்னெடுக்கப்பட்டு யுத்தத்தினால்  ஏற்பட்ட காயங்களை ஆற்றும் செயற்பாடுகள் ஆரம்பிக்கப்படுமென எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அப்போது இருந்த அரசாங்கம் யுத்த வெற்றியைக் மிகப் பாரியளவில்  கொண்டாடியது. 
ஜனாதிபதியாக இரண்டு தடவைகளே  பதவிவகிக்க முடியும் என்பதற்கான  வரையறைகளை அரசியலமைப்பு திருத்தம் மூலம் அப்போதைய அரசாங்கம் நீக்கியது. சுயாதீன ஆணைக்குழுக்கள் செயலிழக்க செய்யப்பட்டன, கருத்து சுதந்திரம் பறிக்கப்பட்டது, செய்தி இணையத்தளங்கள் முடக்கப்பட்டன. ஊடகவியளாலர்கள் அச்சுறுத்தப்பட்டனர், சுயாதீன நீதித்துறை செயலிழந்தது, நடமாடும் சுதந்திரம் கட்டுப்பாட்டுக்கு உட்பட்டது, மனித உரிமைகள் மதிக்கப்படவில்லை, குற்றங்களுக்கு தண்டனை விதிக்கப்படாத நிலைமை நாட்டை ஆட்கொண்டது. 
எவ்வாறெனினும் 2015 ஆம் ஆண்டு ஜனவரி 8 ஆம் திகதி நிலைமை மாற்றமடைந்தது. முழு உலகத்திற்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தும்  வகையில் ஆசியாவில் மிக பழைய நாடான இலங்கையில் வன்முறையற்ற ரீதியில் சர்வாதிகாரம் நீக்கப்பட்டது. கற்கள், துப்பாக்கி குண்டுகளுக்குப் பதிலாக மக்கள் வாக்குச்சீட்டுக்களை பயன்படுத்தி மாற்றத்தை கொண்டு வந்தனர். 
இந்த வெற்றிக்குப் பக்கபலமாக தேர்தல் ஆணையாளரும் முப்படையினரும் பொலிஸாரும் இருந்தனர். ஜனவரி 8 ஆம் திகதி மட்டுமல்லாது  ஆகஸ்ட் 17 ஆம் திகதியும் அந்த வெற்றி மீள் உறுதிப்படுத்தப்பட்டது. அதுமட்டுமன்றி நிறைவேற்றதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையின் அதிகாரங்கள் குறைக்கப்படும் வகையிலும் சுயாதீன ஆணைக்குழுக்கள் நிறுவப்படும் வகையிலும் அரசியலமைப்பில் 19 ஆவது திருத்த சட்டம் நிறைவேற்றப்பட்டது.
ஆகஸ்ட் 17 ஆம் திகதி பாராளுமன்றத் தேர்தலின் பின்னர்  இரண்டு பிரதான கட்சிகளான ஐக்கிய தேசியக் கட்சியும், ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியும் இணைந்து  கருத்தொருமைவாத தேசிய அரசாங்கத்தை அமைத்தன. இது இலங்கையில் புதிய அரசியல் கலாசாரத்தை ஏற்படுத்தியது. மிகவும் மதிக்கத்தக்க மூத்த அரசியல்வாதியான இரா.சம்பந்தன் எதிர்கட்சித் தலைவராக நியமிக்கப்பட்டிருக்கிறார்.
அதிஷ்டவசமாக புலிகள் இன்று இல்லாமையின் காரணமாக பிரச்சினைகளை தீர்ப்பதற்கு வன்முறை  ஒரு காரணமாக இருக்கப்போவதில்லை. சமாதானத்திற்கான விருப்பம் மிகவும் தெ ளிவாக காணப்படுகிறது. இவ்வாறான பிரச்சினைகள் மீண்டும் ஏற்படக்கூடாது என்பதில் தேசிய அரசாங்கம் மிகவும் கவனமாக இருக்கின்றது. 
தற்போதைய இந்த சந்தர்ப்பத்தை  உரிய முறையில் பயன்படுத்தி நல்லிணக்கத்தையும் அபிவிருத்தியையும் முன்னெடுத்துச்  செல்ல முயற்சி செய்கிறோம்.  ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் போரவையில் கடந்த ஒக்டோபர் மாதம் நிறைவேற்றப்பட்ட இலங்கை தொடர்பான பிரேரணைக்கு இலங்கை இணை அனுசரணை வழங்கியிருந்தது. 
அந்தவகையில் நாங்கள் நல்லிணக்கத்தை மேற்கொள்ளவும், உண்மையை கண்டறியவும் பொறிமுறையொன்றை உருவாக்கவுள்ளோம். அந்த வடிவத்தை தயாரிப்பதற்காக தற்போது கலந்துரையாடல்களும், ஆலோசனைகளும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
முக்கியமாக புதிய அரசியலமைப்பு ஒன்றை உருவாக்குவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. அந்தவகையில் பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்கிவிட்டு சர்வதேச கோட்பாடுகளுக்குட்பட்ட   சட்டமொன்றை கொண்டுவருவதற்கு முயற்சிக்கின்றோம். 
இலங்கை தற்போது ஜனநாயகமயப்படுத்தலை முன்னெடுத்து வருகின்ற நிலையில் அபிவிருத்தியையும் நல்லிணக்கத்தையும் செயற்படுத்துகின்றது. அந்த வகையில் இலங்கையின்  யுத்தத்திற்கு பின்னரான வெற்றிகரமான பயணத்துக்கு சர்வதேச சமூகம் ஆதரவை வழங்க வேண்டுமென கோரிக்கை விடுக்கின்றேன் என்றார். 

Friday, March 4, 2016

இணையத்தளங்களை தடை செய்வது தொடர்பாக தீர்மானம் எடுக்கவில்லை - ஜனாதிபதி

இணையத்தளங்களை தடை செய்வது தொடர்பாக தீர்மானம் எடுக்கவில்லை எனவும் அவ்வாறு இணையத்தளங்களை தடை செய்ய போவதில்லை எனவும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
இணைய தளங்கள் தடை செய்யப்பட உள்ளதாக வெளியாகும் தகவல்கள் தொடர்பில் சிங்கள இணைய தளமொன்று எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த போது ஜனாதிபதி இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
இணைய தளங்களை தடை செய்யும் திட்டங்கள் கிடையாது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
மக்களுக்கு விரைவில் தகவல்களை தெரிந்து கொள்ளக்கூடிய ஊடமாக இணைய ஊடகங்கள் பிரபல்யம் அடைந்து வருவதாகக் குறிப்பிட்டுள்ளார்.
இவ்வாறான ஓர் நிலையில் இணைய தளங்களை முடக்குவதற்கோ அல்லது தடை செய்யவோ நடவடிக்கை எடுக்கப்படாது என அவர் தெரிவித்துள்ளார்.
நல்லாட்சி அரசாங்கம் இணைய தளங்களை கட்டுப்படுத்த முயற்சிப்பதாகவும் அதன் ஓர் கட்டமாகவே இணைய தளங்கள் பதிவு செய்யப்பட உள்ளதாகவும் ஊடகங்களில் செய்தி வெளியிடப்பட்டு வந்தமை குறிப்பிடத்தக்கது.

இணையத்தளங்களை தடை செய்வது தொடர்பாக தீர்மானம் எடுக்கவில்லை எனவும் அவ்வாறு இணையத்தளங்களை தடை செய்ய போவதில்லை எனவும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி இணையத்தளங்களை தடை செய்ய தீர்மானித்துள்ளதாக வதந்தி பரவி வருகிறது.
மக்களுக்கு விரைவாக தகவல்களை அறிந்து கொள்ளும் ஊடகமாக இணையத்தளங்கள் இலங்கையில் பிரபலமாகி வருகின்றன எனவும் அவற்றை எந்த காலத்திலும் தடை செய்ய போவதில்லை எனவும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.

Thursday, March 3, 2016

இலங்கை: செய்தி இணையதளங்களை பதிவு செய்யக் கோருவது ஏன்?

இலங்கையில் இயங்கும் சகல செய்தி இணையதளங்களும் இம்மாதம் 31-ம் திகதிக்கு முன்னதாக ஊடக அமைச்சில் பதிவுசெய்துகொள்ளப்பட வேண்டும் என்று அரசாங்கம் அறிவித்துள்ளது.
அங்கீகரிக்கப்பட்ட ஊடக தர்மங்களுக்கும் தராதரங்களுக்கும் உட்பட்டவகையில் செய்தி இணையதளங்கள் தடையின்றி இயங்குவதற்கு இந்த பதிவு அவசியம் என்று நாடாளுமன்ற விவகார மற்றும் ஊடகத்துறை அமைச்சு விடுத்துள்ள அறிவித்தலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
புதிய திட்டத்தின் கீழ் ஏற்கனவே பல இணையதளங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் பதிவு செய்துகொள்ளாத இணையதளங்கள் உரிய திகதிக்குள் பதிவுசெய்யப்பட வேண்டும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
மார்ச் 31-ம் திகதிக்கு பின்னர், பதிவுசெய்யப்படாத இணையதளங்கள் சட்டத்துக்கு முரணானவையாக கருதப்படும் என்றும் அரசாங்கம் கூறியுள்ளது.
இவ்வாறான அறிவித்த முந்தைய அரசாங்கக் காலத்திலும் விடுக்கப்பட்டதாகவும் சில இணையதளங்கள் அப்போதைய அரசாங்கத்தால் தடைசெய்யப்பட்டதாகவும் இலங்கையிலிருந்து இயங்கும் தமிழ்மிரர் பத்திரிகை மற்றும் இணையதளத்தின் ஆசிரியர் ஏ.பி. மதன் பிபிசி தமிழோசையிடம் தெரிவித்தார்.
முன்னைய அரசாங்கத்தினால் சில இணையதளங்கள் மீது விதிக்கப்பட்ட தடையை புதிய அரசாங்கம் தளர்த்தியதாகவும், ஆனால் இப்போது ஊடக நெறிமுறைகளுக்கு புறம்பாக பல இணையதளங்கள் இயங்குவதாக அரசாங்கம் கருதுவதாகவும் அவர் கூறினார்.
புதிய அரசாங்கத்தின் நடவடிக்கைகள் தொடர்பில் சில இணையதளங்கள் கடுமையான விமர்சனங்களை வெளியிட்டுவருகின்ற நிலையில், இவ்வாறான அறிவித்தல் அரசாங்கத்திடமிருந்து வந்திருப்பதையும் மதன் சுட்டிக்காட்டினார்.
இணையதளங்களை பதிவு செய்வதன் மூலம், அவற்றில் வெளியாகும் தகவல்கள் தொடர்பில் அவற்றுக்கு பொறுப்பானவர்களை கேள்விக்குட்படுத்துவதற்கு வாய்ப்பு கிடைக்கும் என்ற ரீதியில் இந்த அறிவித்தலை அரசாங்கம் விடுத்திருப்பதாகவும் இலங்கை பத்திரிகை ஆசிரியர்கள் சங்கத்தின் உறுப்பினர் ஏ.பி. மதன் தமிழோசையிடம் கூறினார்.

நன்றி பிபிசி தமிழ் 

Wednesday, March 2, 2016

இந்தோனேசியாவில் நிலநடுக்கம் - 7.9 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் சுனாமி அபாயம் இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது

ஒரு பெரிய நிலநடுக்கம்  8.1 ரிக்டர் அளவில்  கடற்பகுதியில் தாக்கிய பின்னர் இந்தோனேஷியா ஒரு சுனாமி எச்சரிக்கை விடுத்துள்ளது.

 இந்தோனேஷியாவில் ஏற்பட்டுள்ள சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தால், சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இருப்பினும், தற்போது இந்தியாவுக்கு ஆபத்தில்லை எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தோனேஷியாவின் சுமத்ராவுக்கு தென்மேற்கே உள்ள படாங்கில் இருந்து 808 கி.மீ. தூரமுள்ள பகுதியை மையமாகக் கொண்டு, இந்திய நேரப்படி மால 6.20 மணிக்கு சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. கடலுக்கு அடியில் சுமார் 10 கி.மீ. ஆழத்தில் ஏற்பட்டுள்ள இந்த நிலநடுக்கம், ரிக்டர் அளவுகோலில் 7.9 ஆக பதிவாகியுள்ளது. இருப்பினும், இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்டுள்ள பாதிப்பு குறித்து தகவல் ஏதும் இதுவரை வெளியாகவில்லை.


சுனாமி எச்சரிக்கை

இந்தோனேஷியாவில் ஏற்பட்டுள்ள சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தை அடுத்து சுமத்ராவை ஒட்டிய மேற்கு, வடக்கு பகுதிகள் மற்றும் அசெக் ஆகிய பகுதிகளுக்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.





படையினர் வசமுள்ள காணிகள் விரைவில் விடுவிக்கப்பட வேண்டும் : அமெரிக்கா

வடக்கில் படையினர் வசமுள்ள பொதுமக்களின் காணிகள் விரைவாக விடுவிக்கப்பட்டு காணி உரிமையாளர்களினடம் வழங்கப்பட வேண்டுமென, அமெரிக்கா வலியுறுத்தியுள்ளது.

வொஷிங்டனில் கடந்த சில தினங்களாக இடம்பெற்ற இலங்கைக்கும் அமெரிக்காவுக்கும் இடையிலான பங்குடைமை கலந்துரையாடலின் பின்னர் விடுக்கப்பட்ட கூட்டறிக்கையிலேயே இவ்விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், பயங்கரவாத தடைச் சட்டத்தை நீக்கி அதற்கு பதிலாக சர்வதேச மனிதாபிமான சட்டத்திற்கு அமைவாக இலங்கை அரசாங்கம் மேற்கொள்ளவுள்ள மாற்றீடுக்கு அமெரிக்கா ஆதரவு வழங்குமென்றும் தெரவித்துள்ளது.
எதிர்காலத்தில் இலங்கையில் அதிக முதலீடுகளை மேற்கொள்ளவுள்ளதாக குறிப்பிட்டுள்ள அமெரிக்கா, ஐ.நா மனித உரிமை பேரவையில் நிறைவேற்றப்பட்ட பிரேரணையை முழுமையாக அமுல்படுத்த ஆதரவு வழங்குமென்றும் தெரிவித்துள்ளது.
இதேவேளை, இலங்கையில் ஜனநாயகத்தை பலப்படுத்தி நல்லிணக்கத்தை எற்படுத்துதல், நீதி மற்றும் நாடாளுமன்ற செயற்பாடுகளை வலுப்படுத்தல் போன்றவற்றில் இலங்கை முன்னேற்றத்தை கண்டுள்ளதாகவும் அமெரிக்கா தெரிவித்துள்ளது.

புற்றுநோயை கண்டுபிடிப்பதற்கான செயலி அறிமுகம்.



புற்றுநோய்க்கான அறிகுறிகளைக் கண்டறிய, மருத்துவர்களுக்கு உதவும் செயலி ஒன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
புற்றுநோய் உள்ளதாக சந்தேகிக்கப்படும் நோயாளிகளிடமிருந்து குறிப்புக்களை பெற்றுக் கொள்வதற்கும், அறிகுறிகள் மற்றும் தடயங்களை சுகாதார அதிகாரிகள் இனம் கண்டு கொள்ளவும், இந்த செயலி வழி ஏற்படுத்திக் கொடுப்பதாக உள்ளது.
இந்த செயலியை, ஆப்பிள் மற்றும் கூகுள் ஸ்டோர்களில் இலவசமாக தரவிறக்கம் செய்து கொள்ள முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
யுனிவர்சிட்டி ஆஃப் வெஸ்ட் ஸ்காட்லாந்தில் அமைந்துள்ள தொழில்நுட்பத்திற்கான ஸ்காட்டிஷ் மையத்தினால் உருவாக்கப்பட்டுள்ள இந்த செயலி, ஸ்கொட்லாந்து அரசாங்கத்தின் முயற்சியினால் உருவாக்கப்பட்டுள்ளது.
புற்றுநோய் எவ்வளவு விரைவாக கண்டுபிடிக்கப்பட்டு, அதற்கான சிகிச்சை வழங்கப்படுகிறதோ, அவ்வளவு விரைவாக நோயாளியை காப்பாற்ற முடியும் என தெரிவிக்கும் சுகாதார அதிகாரிகள், புற்றுநோயினால் ஏற்படும் அகால மரணங்களை குறைக்கவும் முடியும் எனத் தெரிவித்துள்ளனர்.
இவற்றை கருத்தில் கொண்டு, இந்த செயலியை அனைத்து சுகாதார அதிகாரிகளும் தரவிறக்கம் செய்து பாவிக்குமாறு, ஸ்காட்லாந்தின் சுகாதார அமைசசர் ஷோனா ராபின்சான் கேட்டுக் கொண்டுள்ளார்.

Tuesday, March 1, 2016

உர மானியம் கோரி விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

இலங்கையில் விவசாயத்திற்கான உர மானியத்தை முன்னர் கொடுத்தது போன்றே வழங்கக்கோரி, ஆயிரக்கணக்கான விவசாயிகள் நாட்டின் தென்பகுதியிலுள்ள அம்பலாந்தோட்டையில் இன்று ஆர்ப்பாட்டமொன்றை நடத்தியுள்ளனர்.

இந்த ஆர்ப்பாட்டத்தில், பதுளை, அம்பாறை, அநுராதபுரம் உட்பட பல பகுதிகளையும் சேர்ந்த விவசாயிகள் கலந்துக்கொண்டனர்.

பதாகைகளை ஏந்தியபடி ஊர்வலமாக சென்ற விவசாயிகள், தங்களுக்கான உர மானியத்தை முன்னர் கொடுத்தது போன்று வழங்கக்கோரியும், விவசாயிகள் வங்கிக்கு கணக்கு வைத்திருக்க வேண்டும் என்று கொண்டுரப்பட்டுள்ள விதியை ரத்துச் செய்யுக்கோரியும் கோஷமெழுப்பினர்.
இலங்கையிலுள்ள விவசாயிகளுக்கு உர மானியம் முன்னர் நேரடியாக வழங்கப்பட்டு வந்தது. ஆனால், தற்போது விவசாயிகளே உரத்தை வாங்குவதற்கு பணத்தை நேரடியாக வழங்கும் ஒரு திட்டத்தை அரசு அண்மையில் அறிமுகப்படுத்தியது.
இந்த பணத்தை பெறுவதற்காக விவசாயிகள் வங்கிக்கணக்குகளை வைத்திருக்க வேண்டும் என்ற நிபந்தனையும் அரசினால் அறிமுகப்படுத்தப்பட்டது.
இலங்கையின் புதிய அரசு, நாட்டில் விவசாயத்தை இல்லாதொழிக்கும் ஒரு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாக, அகில இலங்கை விவசாய சங்கத்தைச் சேர்ந்த சிசிரகுமார வஹலதந்திரி கூறினார்.
இதனிடையே விவசாயிகளுக்கு அரசு நல்லதையே செய்துள்ளது என தெரிவித்துள்ள விவசாயத்துறை அமைச்சர் துமிந்த திசாநாயக்க, அரசுக்கு வேண்டாதவர்கள் விவசாயிகளை தவறாக வழிநடத்துகின்றனர் எனக் கூறியிருக்கிறார்.
நன்றி பிபிசி 

எச் ஐ வி வதந்தியால் பள்ளிக்கு பிள்ளைகளை அனுப்பாத பெற்றோர்

இலங்கையின் உள்ள ஒரு பாடசாலை ஒன்றில் படிக்கும் மாணவருக்கு எச் ஐ வி தொற்று உள்ளது எனும் வதந்தியால், அங்கு பிள்ளைகளை அனுப்ப பெற்றோர் தயக்கம் காட்டுவது குறித்து கவலைகள் எழுந்துள்ளன.

குருநாகல் மாவட்டம் குளியாபிட்டியிலுள்ள அந்தப் பள்ளிக்கூடத்திலேயே இப்பிரச்சினை ஏற்பட்டுள்ளது.
இந்தப் பள்ளிக்கூடத்தில் புதிதாக சேர்க்கப்பட்ட ஆறு வயது சிறுவன், எச்.ஐ.வி தொற்றினால் பாதிககப்பட்டுள்ளார் என பரவிய வதந்திகளையடுத்தே, பெற்றோர் தமது பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்பி வைப்பதை தவிர்த்து வருகின்றனர் என அங்கு சென்றிருந்த பிபிசியின் பிரசாத் பூர்னிமால் ஜெயமான்ன கூறுகிறார்.
இந்த சிறுவனின் தந்தை நோய் காரணமான மரணமான நிலையில், அவர் எச்.ஐ.வி. தொற்றுக் காரணமானவே உயிரிழந்தார் என அந்த பிரதேசம் முழுவதிலும் வதந்தி பரவியது.
இதனால் அச்சிறுவனுக்கு பள்ளியில் அனுமதி மறுக்கப்பட்டதை எதிர்த்து அவரது தயார் போராடினார்.


இறுதியாக இந்த சிறுவனுக்கு எச்.ஐ.வி. தொற்று இல்லை என உறுதிப்படுத்தப்பட்டதன் பின்னர், கல்வி அமைச்சின் உயர் அதிகாரிகளால் சிறுவனை பள்ளியில் சேர்க்க அனுமதி வழங்கப்பட்டது.
ஆனால் இந்தச் சிறுவன் தமது பிள்ளைகளுடன் இருப்பதை விரும்பாத பெற்றோர் தமது பிள்ளைகளை அந்தப் பாடசாலைக்கு அனுப்ப மறுக்கின்றனர் எனவும் எமது செய்தியாளர் கூறுகிறார்.
இதனால் மாணவர்கள் அற்ற நிலையில், அந்தப் பள்ளிக்கூடம் வெறிச்சோடி காணப்படுகிறது.
எதிர்வரும் புதன்கிழமை வரையில் தனது மகனை பள்ளிக்கு அனுப்ப வேண்டாம் என பள்ளியின் அதிபர் தன்னிடம் தெரிவித்ததாக அந்த சிறுவனின் தாயார் பிபிசியிடம் தெரிவித்தார்.
இதனிடையே சிறுவனுக்கு பள்ளியில் கிடைத்துள்ள அனுமதியை இரத்துச் செய்ய முடியாது என தெரிவித்த பள்ளிக்கூட நிர்வாகம் பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்காகவே புதன்கிழமை வரை மாணவனை பள்ளிக்கு அனுப்ப வேண்டாம் எனக் கோரியதாக தெரிவித்தது.
பரபரப்பை ஏற்படுத்தியுள்ள இச்சம்பவம் குறித்து இலங்கை மனித உரிமை ஆணைக்குழுவின் அதிகாரிகள் பள்ளிக் கூடத்திற்கும், சிறுவனின் வீட்டுக்கும் சென்று விசாரணைகளை மேற்கொண்டனர்.
தமது பிள்ளைகளை பள்ளிக்கூடத்திற்கு அனுப்ப மறுக்கும் பெற்றோரை சந்தித்த அதிகாரிகள், சிறுவனுக்கு எச்.ஐ.வி. தொற்று இல்லை என விளக்கமும் அளித்தனர்.
நன்றி பிபிசி 

Monday, February 29, 2016

பதவி வெற்றிடம்-தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை முகாமைத்துவ உதவியாளர் ( ஒப்பந்தம்)




பெண்களே எச்சரிக்கை - ROHYPNOL” மாத்திரை என்பது காம வெறியர்களின்புதிய ஆயுதம்…!


Rohypnol என்ற எளிதில் கரையக் கூடிய சுவையற்ற இம்மருந்தை ஒரு பெண்ணுக்கு குடுத்தால்சிறிது நேரத்தில்போதை ஏறி சொல்வதையெல்லாம் கேட்கும் நிலைக்கு வந்து விடுவார்.
இந்த மயக்கம் 11லிருந்து 12 மணி நேரம் வரை நீடிக்கும்…!
பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டாலும் விந்தணு சோதனையில் எதுவும்கண்டு புடிக்க முடியாது.
மேலும் இம்மருந்தை தொடர்ந்து அளித்து வந்தால்அடிமை ஆகி விடுவார்களாம்.
அதை விடகொடுமை இம்மருந்து அளிக்கப்பட்ட பெண் தன்வாழ்க்கையில் தாய்மை அடையவே முடியாது.
மேலும் நிறைய பக்க விளைவுகள் ஏற்படும்என்கின்றனர் மருத்துவர்கள்.
இதைப் போன்றநிறைய மருந்துகள் உள்ளன. ஆனால் மிக மிக எளிதாக கிடைக்க கூடிய மாத்திரை தான் இந்த ரோஹைப்னால்..!
மயக்கம் தெளிந்த பின்னர் நடந்த எதுவுமே ஞாபகம்இருக்காது. எனவே பெண்கள் வெளியிடங்களுக்கு செல்லும்போது முடிந்தவரை தனியே செல்லாதீர்கள்.
மேலும் மிகவும் எச்சரிக்கையாக இருங்கள். முடிந்த வரை வெளியிடங்களில் எதுவும்குடிக்காதீர்கள்…!
ஃசீல் செய்து அடைக்கப்பட்ட குளிர்பானங்களில் கூட ஊசிகள் மூலம்இவை ஏற்றப்படலாம்….!
குறிப்பாக இலங்கையில் போதைவஸ்து பாவனை அதிகரித்துள்ள நிலையில் பல தென்னிலங்கை முகவர்களால் இம் மாத்திரை பல இடங்களில் வினியோகிக்கப் பட்டுள்ளதுடன் கொழும்பின் அதிகமான இடங்களில் இம் மாத்திரையின் பயன் பாடு அதிகரித்துள்ளது.
அத்துடன் வடகிழக்கின் பகுதிகளுக்கும் விஸ்தரிக்கப் பட்டுள்ள இம் மாத்திரை வடக்கின் அதிகமான முகவர்களிடம் வழங்கப்பட்டுள்ளதுடன் இளம் சமூகத்தை சீரழிப்பதுடன் குழந்தை பிறக்கும் விகிதத்தை கட்டுப்படுத்த வேண்டும் என்பதே இதன் பிரதான நோக்கமாக உள்ளது.
வடக்கில் உள்ள சிலர் தென்னிலங்கை போதைக் கும்பலுடன் தொடர்புடைய பலர் மூலம் இவற்றை விற்பனை செய்வதும் குறிப்பிடத் தக்கது விரைவில் முழுமை விபரம்…..
இந்த பதிவை உங்கள் நண்பர்கள் உறவினகள் அனைவரிடமும்
பகிர்ந்து கொள்ளுங்கள் !! விழிப்புணர்வு செய்யுங்கள் !!! நன்றி…
பொது நலம் கருதி வெளியிடுவோர்…


இன்று ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 31ஆவது கூட்டத்தொடர்,

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 31ஆவது கூட்டத்தொடர், இன்று (திங்கட்கிழமை) ஜெனீவாவில் ஆரம்பமாகவுள்ளது.
இன்றையை முதலாவது அமர்வில் ஐ.நா மனித உரிமை பேரவையின் ஆணையாளர் செயிட் அல் ஹூசைன் மற்றும் பேரவையின் தலைவர் சொய் கியோம்லிங் ஆகியோர் சிறப்புரையாற்றவுள்ளனர். இதன்போது ஐ.நா ஆணையாளர், இலங்கை தொடர்பான விரிவான விளக்கமொன்றை அவையில் முன்வைக்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
ஐ.நா ஆணையாளர் அண்மையில் இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டிருந்த நிலையில், இங்கு தாம் அறிந்த விடயங்கள், இலங்கையின் நல்லிணக்க செயற்பாடுகள் மற்றும் பொறுப்புக்கூறல் தொடர்பில் முன்னெடுக்கப்பட்ட விடயங்கள் குறித்து சபையில் விளக்கமளிக்கவுள்ளார். அத்துடன், இதற்கு ஐ.நாவின் உறுப்பு நாடுகள் தமது கருத்துக்களையும் முன்வைக்கவுள்ளன.
ஐ.நா கூட்டத்தொடரில் பங்கேற்பதற்காக, இலங்கை சார்பில் அமைச்சர் மங்கள சமரவீர தலைமையிலான குழுவினர் அங்கு சென்றுள்ளனர்.
கடந்த வருடம் செப்டெம்பர் மாதம் இடம்பெற்ற ஐ.நா மனித உரிமை பேரவையின் 30ஆவது கூட்டத்தொடரில், இலங்கையில் சர்வதேசத்தின் பங்களிப்புடனான விசாரணை முன்னெடுக்கப்பட்ட வேண்டுமென பிரேரணை நிறைவேற்றப்பட்டது. அதற்கு முன்னரான அமர்வுகளில், இலங்கைக்கு எதிராக செயற்பட்டு பிரேரணைகளை முன்வைத்த அமெரிக்கா, கடந்த கூட்டத்தொடரில் இலங்கைக்கு சார்பான வகையில் பிரேரணை முன்வைத்ததோடு, அதற்கு இலங்கை உள்ளிட்ட பல நாடுகள் இணை அனுசரணையும் வழங்கியிருந்தன.
இதேவேளை, இலங்கையின் பொறுப்புக்கூறல் உள்ளிட்ட செயற்பாடுகளின் முன்னேற்றம் குறித்த அறிக்கையை, 31ஆவது அமர்வில் சமர்ப்பிக்க வேண்டுமென கடந்த அமர்வில் தெரிவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

உருளைக்கிழங்கு, வெங்காயத்தின் இறக்குமதி வரி அதிகரிப்பு

இன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் உருளைக்கிழங்கு மற்றும் பெரிய வெங்காயத்தின் இறக்குமதி வரி அதிகரிக்கப்படவுள்ளது. 

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவால் இது தொடர்பில் சம்பந்தப்பட்ட பிரிவினருக்கு பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

விவசாயிகள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பில் இன்று இடம்பெற்ற கலந்துரையாடலை அடுத்தே ஜனாதிபதி இந்த நடவடிக்கையினை மேற்கொண்டுள்ளார். 

ஹெலிகாப்டர் விபத்து.

இலங்கை விமானப்படைக்கு சொந்தமான, ஹெலிகெப்டர், பல்கேபெத்த பகுதியில் உள்ள மலையில் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. எனினும், ஹெலியொன்று விபத்துக்குள்ளாகவில்லை என்று இலங்கை விமானப்படை அறிவித்துள்ளது. இதேவேளை, தெனகல பகுதியில் உள்ள காட்டில் தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக பிரதேசவாசிகள் தெரிவித்தனர்.

கல்முனை பெண் முகாமையாளர் கொலை சந்தேகநபர் பிடிபட்டார்.

கல்முனை சர்வோதய அபிவிருத்தி நிதி நிறுவனத்தின் பெண் முகாமையாளர் வெட்டிக்கொலை செய்யப்பட்டது தொடர்பில் சந்தேக நபர் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
இந்த நிறுவனத்தில் முன்னர் முகாமையாளராகப் பணிபுரிந்த பொன்னம்பலம் உதயகுமார் என்பவரே இக்கொலை தொடர்பான சந்தேகத்தில் கைது செய்யப்பட்டதாக, கல்முனை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி ஏ. டபிள்யூ. அப்துல் கபார் தெரிவித்தார்.
வெட்டிக் கொலை செய்யப்பட்ட பெண்ணும், கொலைச் சந்தேக நபரான முன்னாள் முகாமையாளரும் உடன்பிறவாச் சகோதரர்கள் எனத் தெரியவந்துள்ளது. இருவரும் நற்பிட்டிமுனையைச் சேர்ந்தவர்கள்.
முன்னாள் முகாமையாளரின் நிதி தொடர்பான பிரச்சினையே இக்கொலைக்கு காரணமாக இருக்கலாமெனவும் சந்தேகிக்கப்படுகிறது.
கல்முனை, மட்டக்களப்பு பிரதான வீதியில் மிகவும் சனசந்தடிமிக்க வைத்தியசாலைக்கு அருகாமையிலுள்ள இந்நிதிநிறுவன அலுவலகத்தில் இச்சம்பவம் பட்டப்பகலில் இடம்பெற்றமை பலரையும் வியப்புக்குள்ளாக்கியுள்ளது.
அதனால், செய்தி அ றிந்ததும் ஆயிரக் கணக்கான பொதுமக்கள் அவ்விடத்திற்குச் சென்று பல மணி நேரம் காத்திருந்தனர். நற்பிட்டிமுனை குளோரி வீதியைச் சேர்ந்த ராஜேஸ்வரன் சுலக்ஷனா (வயது 33) என்ற இளம் பெண் முகாமையாளரே இவ்வாறு வெட்டிக் கொல்லப்பட்டுள்ளார். இவர் ஒரு பிள்ளையின் தாய் என்பதும் கணவர் தையல் வேலை செய்பவர் என்றும் தெரியவந்துள்ளது.
இச்சம்பவம் குறித்து மேலும் தெரிய வருவதாவது:-
வழமை போன்று சனிக்கிழமையன்று காரியாலயத்துக்கு சென்று கடமையாற்றிக் கொண்டிருக்கும் போதே இந்தக் கொலை நிகழ்ந்துள்ளது. அவர் கழுத்தில் அணிந்திருந்த தாலிக்கொடி மற்றும் காப்புகள் அபகரிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர். இவருடன் கடமையிலிருந்த மற்றொரு வெளிக்கள உத்தியோகத்தர் பகல் உணவுக்காக வெளியில் சென்று மீண்டும் அலுவலகத்திற்கு வந்து பார்த்தபோது இந்த உதவி முகாமையாளர் கழுத்து வெட்டப்பட்ட நிலையில் கிடப்பதைக் கண்டு பொலிஸாருக்கு தகவல் தெரிவித்துள்ளார்.
கல்முனைப் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி அப்துல் கபார் தலைமையிலான பொலிஸ் குழுவினர், உதவிப் பொலிஸ் அத்தியட்சகர், அம்பாறையிலிருந்து விசேடமாக வரவழைக்கப்பட்ட ‘சோக்கோ் பொலிஸ் அணியினர் விசாரணையிலீடுபட்டனர்.
கல்முனை மாவட்ட நீதிவானும், பதில் நீதிபதியுமான ராமகமலன் ஸ்தலத்துக்கு விஜயம் செய்து விசாரணைகளை நடாத்தினார். மூடிய அலுவலகத்துள் பிற்பகல் 3 மணி தொடக்கம் மாலை 7 மணி வரை விசாரணை தொடர்ந்தது.
அலுவலக ஊழியர்கள் அறுவர், சந்தேக நபரான முன்னாள் முகாமையாளர் பொன்னம்பலம் உதயகுமார் ஆகியோரை பொலிசார் 4 மணி நேரம் பூரண விசாரணை செய்துள்ளதோடு கொலையாளியை கையும் மெய்யுமாக அடையாளம் கண்டனர்.
கொலையாளியை அடையாளம் கண்டது எப்படி?
நிறுவனத்துக்குள் வைக்கப்பட்டிருந்த தலைக் கவசத்தை பற்றி சந்தேக நபரிடம் கல்முனை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி விசாரணை செய்துகொண்டிருந்த போது சந்தேக நபரின் கை விரலில் புதிய காயம் ஒன்று இருந்துள்ளது. அதனை விசாரித்த போது வீட்டில் வேலை செய்துகொண்டிருந்த போது ஏற்பட்ட காயம் என அவரால் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதனை உறுதிப்படுத்த சந்தேக நபரின் வீட்டுக்குச் சென்று விசாரித்த பொலிசார், “அப்படியொன்றும் நடக்கவில்லையென ஊர்ஜிதம் செய்தனர். சந்தேக நபரின் காயப்பட்டிருந்த விரல் நகம் துண்டிக்கப்பட்டிருந்ததை அவதானித்த பொலிஸ் பொறுப்பதிகாரி கபார் கொலை செய்யப்பட்ட சடலத்தின் வாய்ப் பகுதியை பார்வையிட்டபோது சந்தேக நபரின் கை விரல் நகம் சடலத்தின் வாய்ப் பகுதியில் இருந்துள்ளது.
கொலைச் சம்பவம் நடைபெற்ற போது அப்பெண் கொலையாளியின் பிடியிலிருந்து தப்பித்துக் கொள்ள முயற்சிசெய்த போது விரல் கடிக்கப்பட்டு நகம் வாயினுள் சென்றிருக்கலாமென பொலிசார் சந்தேகிக்கின்றனர்.
இந்த கொலை நடைபெற்ற நேரமும், இடமும் கொலையாளிக்கு ஒரு கொலை செய்யக்கூடிய வாய்ப்பு குறைவாக இருந்த போதும் நன்கு திட்டமிடப்பட்டு செய்யப்பட்ட கொலையாகவே பார்க்க முடிகின்றது.
நிறுவனத்தில் யாரும் இருக்கவில்லை. காவலாளி இல்லை, சீசீரிவீ கமரா இல்லை. இத்தனை விடயங்களும் ஒரே நேரத்தில் அறிந்திருக்கக் கூடியமையானது அந்த நிறுவனத்தில் பணிபுரிந்த அல்லது அந்த நிறுவனத்தைப் பற்றி நன்கு அறிந்தவரால் மட்டுமே தீர்மானித்திருக்க முடியும்.
இந்த நிறுவனத்தில் இடம்பெற்றுள்ள நிதி மோசடிகள் அம்பலப்படுத்தப்பட்டிருப்பதால் ஏற்பட்ட முரண்பாடே இந்தக் கொலைக்கான காரணமென தெரியவருகிறது. இது குடும்ப தகராறாக இருக்கலாம் என்று பலரால் ஊகம் தெரிவிக்கப்பட்டாலும் கொல்லப்பட்ட புதிய முகாமையாளரின் வருகையின் பின்னர் நிறுவனத்தில் இடம்பெற்றுள்ள பல மோசடி சம்பவங்கள் அம்பலத்துக்கு வந்துள்ளன.
இதனைத் தாங்க முடியாத நிலையில் இக் கொலைக்கான திட்டம் வகுக்கப்பட்டிருக்கலாமென பொலிசார் சந்தேகிக்கின்றனர்.
நேற்று முன்தினம் கொலைச் சம்பவம் நடைபெற்ற இடத்தில் திரண்ட மக்களினால் பதற்ற நிலை ஏற்பட்டதுடன் வீதிப் போக்குவரத்தும் தடைப்பட்டன. குறித்த பிரதேசம் எங்கும் பொலிசார் குவிக்கப்பட்டு அமைதி நிலை ஏற்படுத்தப்பட்டது.
நாட்டில் பல வருடங்கள் கடந்தும் கண்டு பிடிக்க முடியாமல் உள்ள சூழலில் இந்தக் கொலைச் சம்பவம் இடம்பெற்று 5.00 மணித்தியாலத்தில் சம்பந்தப்பட்டவர் கைது செய்யப்பட்டமையானது கல்முனை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி ஏ. டபிள்யூ. ஏ. கப்பாரின் திறமையை வெளிப்படுத்தியுள்ளது.
பாரிய வன்முறை சம்பவம் ஒன்று அப்பிரதேசத்தில் நடப்பதற்கான சூழல் அமைந்திருந்த போதும், எந்தவொரு அசம்பாவிதமும் நடைபெறாமல் மிக சூட்சுமமாக கொலையாளி கைது செய்யப்பட்டமைக்கு கல்முனை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரியின் சாமர்த்தியமான நடவடிக்கையே காரணமாகும்.
சாப்பாட்டுக்கு வருவேன் என்றவர் வரவில்லை
கொலை செய்யப்பட்ட பெண் முகாமையாளர் கர்ப்பிணி என தகவல்கள் வெளியாகிய போதிலும் அது ஊர்ஜிதம் செய்யப்படவில்லை.
இவர் கடமைக்குச் சென்றதும் வீட்டிலிருந்து பகல் உணவு அனுப்பப்படுவதே வழக்கமாக இருந்து வந்துள்ளது. சம்பவ தினம், மதியச் சாப்பாட்டுக்கு வீட்டுக்கு வருவதாக தனது தாயாரிடம் கூறிவிட்டே சுலக்ஷனா சென்றுள்ளார்.
வீட்டிலிருந்து அன்றைய தினம் அலுவலகம் புறப்படுவதற்கு சற்றுமுன்னர் தாயாரை அழைத்த சுலக்ஷனா, “பிள்ளைக்குச் சாப்பாடு கொடுங்கள். நான் சாப்பாட்டுக்கு வருகிறேன்” என கூறிவிட்டே அலுவலகம் புறப்பட்டுள்ளாரென குடும்ப உறவிகனர்கள் தெரிவித்தனர்.