Saturday, March 5, 2016

கால்பந்துப் போட்டிகளில் வீடியோ காட்சிகள் மூலம் முடிவுகள் மறுபரிசீலனை

கால்பந்து போட்டிகளில் முக்கியமான தீர்மானங்களை எடுப்பதற்கு அதிகாரிகளுக்கு உதவும் வகையில், வீடியோவை ஒப்பிட்டு மறுபரிசீலனை செய்வதற்கு, சர்வதேச கால்பந்து சம்மேளனம் ஒப்புதல் அளித்துள்ளது.
இரண்டு ஆண்டுகளுக்கு சில போட்டிகளில் மாத்திரமே இந்த தொழில்நுட்பம் பயன்படுத்தப்படும்.
கோல் போடப்பட்டுள்ளதா, தண்டனைகள் வழங்கப்பட வேண்டுமா, விளையாட்டு வீரர் ஆட்டத்திலிருந்து வெளியேற்றப்பட வேண்டுமா போன்றவற்றை நடுவர் தீர்மானிப்பதற்கு, இந்த தொழில்நுட்பம் பயன்படுத்தப்படவுள்ளது.
இது கால்பந்து வரலாற்றில் மேற்கொள்ளப்பட்ட சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த தீர்மானம் என, ஃபிஃபாவின் தலைவர் கியானி இன்ஃபான்டினோ தெரிவித்தார்.
கால்பந்து வீரர்கள், ரசிகர்கள் கருத்துகளையும் தாங்கள் கேட்கிறோம் என்பதையே இது காண்பிக்கிறது என அவர் மேலும் கூறினார்.