ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும் குறுகிய காலத்தில் பல செயற்பாடுகளை முன்னெடுத்துள்ளனர். ஆனால் இலங்கை இன்னும் செய்யவேண்டிய பல கடின மான நடவடிக்கைகள் உள்ளன. மீண்டு வருவதற்கு பல கடினமான சவால்கள் இன்னும் காணப்படுகின்றன என்பதனை நாம் அறிந்துள்ளோம் என்று மத்திய மற்றும் ஆசிய விவகாரங்களுக்கான அமெரிக்காவின் இராஜாங்கச் செயலாளர் நிஷா பிஷ்வால் தெரிவித்தார்.
பொருளாதாரத்தை மீளக்கட்டியெழுப்புதல், ஊழலை தடுத்தல் மற்றும் நல்லாட்சியை முன்னிறுத்தல், அனைத்துப் பிரஜைகளினதும் மனித உரிமைகள் மற்றும் ஜனநாயக பங்கேற்பினை உறுதி செய்தல் என்பவற்றில் பங்காளராகவும் நண்பரா கவும் இருக்கும் அமெரிக்காவை நம்பலாம். இலங்கையுடன் அமெரிக்கா உள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார்.
இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றை மேற்கொண்டுள்ள மத்திய மற்றும் ஆசிய விவகாரங்களுக்கான அமெரிக்காவின் இராஜாங்கச் செயலாளர் நிஷா பிஷ்வால் வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீரவை சந்தித்து கலந்துரையாடிதன் பின்னர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
கொழும்பில் அமைந்துள்ள வெளிவிவகார அமைச்சு அலுவலகததில் நேற்றுக்காலை இந்த சந்திப்பு நடைபெற்றது. வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீரவும் நிஷா பிஷ்வாலும் இதன்போது சுமார் ஒரு மணிநேரம் இருதரப்பு கலந்துரையாடலை நடத்தினர்.
நேற்று முன்தினம் இலங்கை வந்தடைந்த நிஷா பிஷ்வால் பிரதமர் ரணில் விக்ரமசிங்க மற்றும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஆகியோரையும் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார்.
அத்துடன் இன்றுகாலை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பிரதிநிதிகளை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தவுள்ள நிஷா பிஷ்வால் இன்று யாழ்ப்பாணத்துக்கு விஜயம் செய்யவுள்ளதுடன் வட மாகாண முதல்வர் சி.வி. விக்னேஷ்வரனையும் சந்தித்துப் பேச்சு நடத்தவுள்ளார்.
அத்துடன் இன்றுகாலை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பிரதிநிதிகளை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தவுள்ள நிஷா பிஷ்வால் இன்று யாழ்ப்பாணத்துக்கு விஜயம் செய்யவுள்ளதுடன் வட மாகாண முதல்வர் சி.வி. விக்னேஷ்வரனையும் சந்தித்துப் பேச்சு நடத்தவுள்ளார்.
இந்நிலையில் வெளிவிவகார அமைச்சருடனான சந்திப்பின் பின்னர் அமெரிக்காவின் இராஜாங்க செயலாளர் நிஷா பிஷ்வால் ஊடகங்களுக்கு கருத்து வெளியிடுகையில்
இலங்கையின் ஜனநாயகம் தொடர்பில் உலகை பேச வைத்த சக்தியை கண்கூடாக காண்பதற்கு இலங்கைக்கு வருகை தந்திருப்பது மிகுந்த மகிழ்ச்சியாக உள்ளது.
இலங்கையின் ஜனநாயகம் தொடர்பில் உலகை பேச வைத்த சக்தியை கண்கூடாக காண்பதற்கு இலங்கைக்கு வருகை தந்திருப்பது மிகுந்த மகிழ்ச்சியாக உள்ளது.
இலங்கையில் நடைபெற்ற வரலாற்றுச் சிறப்புடைய தேர்தல் மற்றும் அது திறந்துவிட்டுள்ள புதிய சந்தர்ப்பங்களுக்காக இலங்கை வாக்காளர்களுக்கு அமெரிக்க ஜனாதிபதி ஒபாமாவும் செயலாளர் கெர்ரியும் விடுத்த வாழ்த்துச் செய்திகளை மீண்டும் நினைவுப்படுத்துகின்றேன்.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோர் தமது 100 நாள் இலட்சிய நிகழ்ச்சி நிரல் ஒன்றை முன்வைத்துள்ளதுடன்இ மிகவும் குறுகிய காலப்பகுதியில் அவற்றில் பலவற்றை நிறைவேற்றியுமுள்ளனர்.
ஆனால்இ இன்னும் புரிய வேண்டிய விடயங்கள் நிறையவே உள்ளன. அத்துடன் எதிர்கொள்ள வேண்டிய சிக்கலான சவால்கள் பலதும் உள்ளதை நாம் அறிந்துள்ளோம்.
பொருளாதாரத்தை மீளக்கட்டியெழுப்புதல். ஊழலை தடுத்தல் மற்றும் நல்லாட்சியை முன்னிறுத்தல். அனைத்துப் பிரஜைகளினதும் மனித உரிமைகள் மற்றும் ஜனநாயக பங்கேற்பினை உறுதி செய்தல் என்பவற்றில் எம்மை பங்காளராகவும்இ நண்பராகவும் இலங்கையானது அமெரிக்காவை நம்பலாம். இலங்கையுடன் அமெரிக்கா உள்ளது.
பொருளாதாரத்தை மீளக்கட்டியெழுப்புதல். ஊழலை தடுத்தல் மற்றும் நல்லாட்சியை முன்னிறுத்தல். அனைத்துப் பிரஜைகளினதும் மனித உரிமைகள் மற்றும் ஜனநாயக பங்கேற்பினை உறுதி செய்தல் என்பவற்றில் எம்மை பங்காளராகவும்இ நண்பராகவும் இலங்கையானது அமெரிக்காவை நம்பலாம். இலங்கையுடன் அமெரிக்கா உள்ளது.
எமது நட்பு பல தலைமுறைகளைக் கொண்டது. இலங்கை சுதந்திரம் அடைந்தது முதல் அமெரிக்காவானது. 2 பில்லியன் டொலர்களுக்கும் மேற்பட்ட உதவிகளை இலங்கைக்கு வழங்கியுள்ளது.
அமெரிக்காவைப் போன்று வேறு எந்த நாடுகளும் அதிகளவில் இலங்கை உற்பத்திகளை கொள்வனவு செய்வதில்லை. வர்த்தகம் மற்றும் முதலீட்டினை மேம்படுத்துவதில் எமது பங்காளித்துவத்தை வளர்ப்பதற்கும். வலுப்படுத்துவதற்கும். எமது மக்கள். அரசாங்கங்கள் மற்றும் சிவில் சமூகங்கள் வர்த்தகங்கள் ஆகியவற்றுக்கு இடையில் உறவை வளர்ப்பதற்கும் நாம் எதிர்பார்த்துள்ளோம்.
வெளிநாட்டு விவகார அமைச்சருடனான சந்திப்பின் போது. எனது அரசாங்கத்தின் சார்பில் இரண்டு நாடுகளுக்கும் இடையில் ஆர்வம் சார்ந்த அனைத்துப் பிரிவுகளிலும் ஆக்கப்பூர்வமான வழிவகைகளை கண்டறிவதில் அவருடனும். அரசாங்கத்துடனும் பணியாற்றுவதற்கான எமது ஆர்வத்தை தெரிவித்தேன்.
அத்துடன், அடுத்த வாரம் இலங்கை வெளிவிவகார அமைச்சர் வாஷிங்டனுக்கு விஜயம் செய்யும் போது உங்களை சந்திப்பதிலும். எமது இரண்டு நாடுகளுக்கும் இடையில் தொடர்பை மேம்படுத்துவதிலும்இ ஆழமாக்குவதிலும் அமெரிக்க இராஜாங்க செயலாளர் ஜோன் கெர்ரி ஆர்வமாக உள்ளார் என்றார்.