Sunday, July 8, 2012

9 திகதி ஏய் வைரஸிலிருந்து கணணி பாதுகாக்கும் முன்னெச்சரிக்கைகள்

ஏய் வைரஸ் இணையத்தை முடக்கி உங்களின் கணிணியை செயல் இழக்கச்செய்து விடும் என்ற தகவல் பயணாளர்கள் மத்தியில் பெரும் பரபரப்பாக பேசப்பட்டு வருகின்றது. 
இது புதிதாக தாக்குதலை தரப்போவதில்லை என்ற நிம்மதியான தகவல் வல்லுநர்கள் தெரிவித்தாலும் ஏற்கனவே உங்கள் கணணியில் இந்த வைரஸ் இருந்தால் வரும் 9 ம்திகதி பெரும் பாதிப்பை தரும் என்கின்றனர் கணணி வல்லுநர்கள்.

டி.என்.எஸ்.,( டொமைன் நேம் சிஸ்டம்) என்பது நாம் வைத்துள்ள தளத்தின் முகவரியை கணிணிக்கு புரியும் வகையில் ஐ.பி.எண்ணாக மாற்றி அந்த தளங்கள் திறக்க உதவுகிறது. தற்போது டி.என்.எஸ்.,சேஞ்சர் என்ற வைரஸ் உருவாக்கி இதன் மூலம் உங்கள் சிஸ்டத்தை செயல் இழக்கச்செய்யும் நாச வேலையில் அயல்நாட்டவர்கள் 7 பேர் இறங்கியுள்ளனர்.
இது கடந்த நவம்பரில் உளாவந்தது, இதன் மூலம் பல கணணிகள் பாதிக்கப்பட்டன. மேலும் பாதிப்பில் இருந்து தப்பிக்க இதனை அமெரிக்க உளவு பிரிவு எப்.பி.ஐ., மாற்று சர்வரை நிறுவி உதவியது.
இந்த சர்வரை நிறுத்திட முடிவு செய்திருப்பதால் இந்த வைரஸ் மீண்டும் வரும் 9 ம் திகதி செயல்பட துவங்கி விடுமாம். இதனால் உலகம் முழுவதும் பல லட்ச கணணிகள் செயல் இழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
வைரஸ் பாதிப்பு உள்ளதா என கண்டறியுங்கள்:
எனவே டி.என்.எஸ்., சேஞ்சர் என்ற வைரஸ் பாதிக்கப்பட்டிருக்கிறதா என்று அறிந்து முன்சோதனை செய்து கொள்ளவும். பெரும் கார்ப்ரேட் நிறுவனங்கள் ஆண்டி வைரஸ் வைத்திருப்பதால் பாதிப்பில் இருந்து தப்பிக்க முடியும்.
நடுத்தரமானவர்கள் இது போன்று ஆண்டிவைரஸ் வைக்காத பட்சத்தில் பாதிப்பு வர வாய்ப்புகள் அதிகம். எனவே தங்களின் கணணிளில் இது போன்று வைரஸ் பாதிப்பு உள்ளதா என கண்டறிய நீங்கள் www.dns-ok.us கிளிக் செய்தால் பாதிக்கப்டாமல் இருந்தால் பச்சைக்கலரில் வரும்.
பாதிக்கப்பட்டிருக்குமானால் சிவப்பு நிற இமேஜ் வரும். வரும் 9 ம் திகதி என்ன நடக்குமோ என்ற அச்சத்தில் உள்ளனர் இன்டர்நெட் உபயோகிப்பாளர்கள்.