Thursday, December 15, 2011

தென்கொரியாவில்(SouthKorea) கட்டப்பட உள்ள அழகிய இரட்டைக் கோபுரம்

அமெரிக்காவில் நியூயார்க் நகரில் உள்ள இரட்டை கோபுரத்தை தீவிரவாதிகள் விமானத்தை மோதவிட்டு தகர்த்தனர்.
விமானம் மோதும் முன்பு காணப்பட்ட கட்டிடத்தின் தோற்றத்தைப் போலவே தென் கொரியாவில் உள்ள சியோல் நகரில் கட்டிடம் ஒன்றை கட்ட உள்ளனர்.

இந்த கட்டிடத்தை நெதர்லாந்து நாட்டை சேர்ந்த எம்.வி. ஆர்.டி.வி என்ற கட்டிட நிறுவனம் வடிவமைத்து உள்ளது.
கட்டித்தில் புகை தெரிவது போன்ற இடத்தில் இரு கட்டிடத்தையும் இணைத்து உள்ளனர். அதில் உணவு விடுதி, பூங்கா , நீச்சல் குளம் போன்றவை அமைக்கப்படுகிறது.
அடுத்தமாதம் (ஜனவரி 2012) கட்டிட பணி தொடங்கும் என்றும் இன்னும் 3 ஆண்டில் கட்டிடத்தை கட்டி முடிக்கவும் திட்டமிட்டுள்ளனர் கட்டிட வடிமைப்பாளர்.