Tuesday, June 21, 2011

விண்வெளியை சுத்தப்படுத்தும் செயற்கைகோள்

உலகின் 50ற்கும் மேற்பட்ட நாடுகள் செயற்கைக் கோள்களை விண்வெளிக்கு அனுப்பியுள்ளன. 6000ற்கும் மேற்பட்ட செயற்கைக் கோள்கள் இதுவரை அனுப்பப்பட்டுள்ளன. தங்களது ஆயுட் காலம் முடிந்ததும் இந்த செயற்கைக் கோள்கள் செயல் இழந்து குப்பையாகி விடுகின்றன. சில செயற்கைகோள்கள் உடைந்து சிதறி துண்டு துண்டாகவும் ஆகின்றன. இவை விண்வெளி குப்பைகள் ஆக சுற்றி வருகின்றன.

ஆண்டுகளில் மட்டும் அனுப்பப்பட்ட செயற்கை கோள்கள் மூலம் சுமார் 5 ஆயிரத்து 500 தொன் குப்பைகள் விண்வெளியில் சேர்ந்துள்ளன. இந்தக் குப்பைகளால் ஏற்கனவே விண்வெளியில் சுற்றிக்கொண்டு இருக்கும் மற்றும் இனி அனுப்ப இருக்கும் செயற்கைக்கோள்கள் போன்றவற்றுக்கும் ஆபத்து ஏற்படும் நிலை உள்ளது. இந்த பிரச்சினையை தீர்க்க பிரித்தானிய விஞ்ஞானிகள் புதிய திட்டம் ஒன்றை உருவாக்கினர்.

இதன்படி மிகச்சிறிய நானோ செயற்கைக்கோள்களை தயாரித்து அவற்றை விண்வெளிக்கு அனுப்பி அதன் மூலம் விண்வெளிக் குப்பைகளை சேகரித்து அழிக்கப் போகிறார்கள். இந்தக்குப்பைகளை சேகரிக்கும் வகையில் இந்த நானோ செயற்கைக் கோளில் காந்த வலை ஒன்றும் இணைக்கப்படும். இது விண்வெளியில் சுற்றிக்கொண்டு இருக்கும் குப்பைகளை கவர்ந்து இழுக்கும். பின்னர் இவற்றை பூமியின் மேற்பரப்புக்கு இழுத்து வரும். அப்போது இந்த குப்பைகளுடன் சேர்ந்து நானோ செயற்கைகோளும் எரிந்து சாம்பலாகி விடும்.