Tuesday, March 1, 2016

பிளாஸ்டிக் குப்பைகளை குறைக்கும் இந்தோனேஷிய முயற்சி பலன் தருமா?

பிளாஸ்டிக் கழிவால் இந்தோனேசியாவில் ஆறுகளும், கடல்களும் நிரம்பிவழிவது அந்நாட்டு சுற்றுலா மற்றும் மீன்பிடித் துறைகளை பெரிதும் பாதித்துள்ளது.
பிளாஸ்டிக் பயன்பாட்டை குறைக்க இந்தோனேஷிய அரசாங்கம் தற்போது முயற்சிக்கிறது.
இனிமேல் அங்கு பிளாஸ்டிக் பைகள் வாங்குவதற்கு இருபத்து மூன்று நகரங்களில் கட்டணம் வசூலிக்கப்படும்.
இந்த புதிய திட்டம் பின்னர் நாடெங்கும் அமல்படுத்தப்படவிருக்கிறது.
இதன் மூலம் கடலில் கலக்கும் பிளாஸ்டிக் குப்பைகளின் அளவைக் குறைக்க முடியும் என்று அரசு அதிகாரிகள் நம்பிக்கை வெளியிட்டுள்ளனர்.