Wednesday, March 2, 2016

இந்தோனேசியாவில் நிலநடுக்கம் - 7.9 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் சுனாமி அபாயம் இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது

ஒரு பெரிய நிலநடுக்கம்  8.1 ரிக்டர் அளவில்  கடற்பகுதியில் தாக்கிய பின்னர் இந்தோனேஷியா ஒரு சுனாமி எச்சரிக்கை விடுத்துள்ளது.

 இந்தோனேஷியாவில் ஏற்பட்டுள்ள சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தால், சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இருப்பினும், தற்போது இந்தியாவுக்கு ஆபத்தில்லை எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தோனேஷியாவின் சுமத்ராவுக்கு தென்மேற்கே உள்ள படாங்கில் இருந்து 808 கி.மீ. தூரமுள்ள பகுதியை மையமாகக் கொண்டு, இந்திய நேரப்படி மால 6.20 மணிக்கு சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. கடலுக்கு அடியில் சுமார் 10 கி.மீ. ஆழத்தில் ஏற்பட்டுள்ள இந்த நிலநடுக்கம், ரிக்டர் அளவுகோலில் 7.9 ஆக பதிவாகியுள்ளது. இருப்பினும், இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்டுள்ள பாதிப்பு குறித்து தகவல் ஏதும் இதுவரை வெளியாகவில்லை.


சுனாமி எச்சரிக்கை

இந்தோனேஷியாவில் ஏற்பட்டுள்ள சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தை அடுத்து சுமத்ராவை ஒட்டிய மேற்கு, வடக்கு பகுதிகள் மற்றும் அசெக் ஆகிய பகுதிகளுக்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.