Wednesday, November 9, 2011

பூமியை நோக்கி வரும் ராட்சத எரி கல்-ஒரு பெரிய விமானம் போன்றது.

அமெரிக்காவின் “நாசா-NASA” மையம் விண்வெளி குறித்து ஆய்வு மேற்கொண்டு வரு கிறது. இந்நிலையில் விண் வெளியில் இருந்து ராட்சத எரிகல் ஒன்று பூமியை நோக்கி வருவதை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.
அந்த எரி கல் 400 மீட்டர் அதாவது 1,300 அடி அகலமானது. ஒரு பெரிய விமானம் போன்றது.

 அதற்கு “2005 ஒய்.யூ.55” என பெயரிடப்பட்டுள்ளது.
அது 3 லட்சத்து 25 ஆயிரம் கி.மீட்டர் தூரத்தில் உள்ளது. மெல்ல பூமியை நோக்கி வரும் அந்த எரி கல் தற்போது சந்திரனை நெருங்கி உள்ளது.
 வருகிற வியாழக்கிழமை வானத்தில் உலா வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. அப்போது அதை வெறுங் கண்களால் பார்க்க முடியும்.
மேலும் இந்த எரி கல் பூமியை தாக்காது. அதனால் எந்த ஆபத்தும் ஏற்படாது என விஞ்ஞானிகள் தெரிவித்துள் ளனர்.
 கடந்த 1976-ம் ஆண்டு ஒரு பெரிய எரி கல் பூமியை நோக்கி வந்தது. அதன் பிறகு தற்போது ஒரு ராட்சத எரி கல் வந்து கொண்டிருக்கிறது. அடுத்த எரி கல் 2028-ம் ஆண்டில் பூமியை நோக்கி வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.