Wednesday, November 9, 2011

இந்திய பெருங்கடலில் புதிய உயிரினங்கள் கண்டுபிடிப்பு.

உலகில் உள்ள கடல்களின் ஆழ்பகுதியில் அரிய வகை உயிரினங்கள் வாழ்கின்றன. அவை குறித்து விஞ்ஞானிகள் ஆராய்ச்சி செய்து வருகின்றனர். அதற்காக ஆழ்கடலில் அதி நவீன கருவிகள் மற்றும் கேமிராக்கள் மூலம் ஆராய்ச்சிகள் நடத்துகின்றனர்.
தற்போது முதன் முறையாக இந்திய பெருங்கடலில் ஆழமான பகுதிகளில் அத்தகைய ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.


தென் ஆப்பிரிக்காவில் இருந்து வந்த நிபுணர்கள் குழு ஆழ்கடலில் மூழ்கினர். அங்கு பல புதிய உயிரினங்களை கண்டுபிடித்தனர்.
 இதற்கு முன்பு கடந்த 2009-ம் ஆண்டு இந்திய பெருங்கடலில் ஆய்வு மேற்கொண்ட போது7 ஆயிரம் மாதிரிகள் எடுத்துச் செல்லப்பட்டன.
 அவற்றை பரிசோதனை செய்தபோது இன்னும் பல அரிய வகை உயிரினங்கள் மற்றும் தாவரங்கள் இருப்பது தெரிய வந்தது. எனவே,
ழ்கடலில் தற்போது ஆராய்ச்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது.