Sunday, May 22, 2011

ஸ்டெம் செல் சேமிப்பு!

என்னம்மா, கல்யாணமும் பண்ணிட்டு ஒன் புள்ளை ஃபாரினுக்கு போய் செட்டிலாயிட்டான். ஒரு வருஷமாச்சு, ஒன் மருமக வயற்றுலே ஒரு புழுபூச்சி கூட இன்னும் வளரலையா? புள்ள கிட்ட என்ன ஏதுனு கேட்டியா?’‘அதெல்லாம் கேட்டாச்சு. அதுக்கு அவன் சொல்றான், ‘மம்மி, ஒன் காலத்தோட இந்த, வயிற்றுல புழுபூச்சி டயலாக்கு முடிஞ்சு போச்சு. இப்ப
விஞ்ஞானம் ரொம்ப அட்வான்ஸா இருக்கு. ஒனக்கு பேரனோ, பேத்தியோ தயாராகத்தான் இருக்காங்க. நாங்கதான் தள்ளிப்போடறோம்’னு சிரிச்சுகிட்டே
சொல்றான். எனக்குத்தான் ஒண்ணும் புரியலை...’

இப்படி டயலாக்குகள், முதல், இரண்டாவது தலைமுறை பெண்களிடையே இருக்கத்தான் செய்கிறது. ஆனால், இன்றைய மூன்றாவது தலைமுறை

தம்பதிகள் ரொம்பவும் உஷாராகி விட்டனர். கல்யாணம் முடிந்த பத்தாவது மாதத்திலேயே கருத்தரிக்காவிட்டால், உறவினர் பேச்சுக்கும், ஏச்சுக்கும்

ஆளாக வேண்டும் என்றெல்லாம் அவர்கள் கவலைப்படுவதில்லை.

எப்போது, எப்படிப்பட்ட ஆரோக்கியமான, அறிவுள்ள குழந்தை பெற வேண்டும் என்று மட்டுமல்ல, எத்தனை குழந்தைகளை பெற்றுக்கொள்ள வேண்டும்

என்று கூட பிளான் போட்டு விடுகின்றனர். அதற்காகவே, வெளிநாடுகளில் ஏகப்பட்ட மருத்துவ சேமிப்பு வசதிகள் உள்ளன. அதில் ஒன்றுதான் விந்து,

கருமுட்டை சேமிப்பு வங்கி. தேவைப்படும் போது, அவற்றை உயிர்ப்பித்து, பெண்ணின் கருப்பையில் வைத்து தைத்தால் முடிந்தது விஷயம். இந்த

முறை, அமெரிக்க, ஐரோப்பிய நாடுகளில் மட்டுமல்ல, இப்போது இந்தியாவிலும் வந்து விட்டது.

ஸ்டெம் செல் வங்கி

அந்தவகையில் இப்போது லேட்டஸ்ட், ஸ்டெம் செல் வங்கி. நம் உடலில் மொத்தம் 200 வகையான செல்கள் உள்ளன. இவைதான் எதற்கும் மூலமாக

இருக்கின்றன. ரத்தம் முதல் உடல் உறுப்புகள் வரை சரியாக இருந்தால் எந்த நோயும் அண்டாது; அவை சுத்தமாக இருந்து, சீராக இயங்க செல்கள்

ஆரோக்கியமாக இருக்க வேண்டியது அவசியம்.

அதைச் செய்வதும், கோளாறு பிடித்த செல்களை மாற்றுவதும், தேவைப்படும் உறுப்புகளுக்கு மாற்று உறுப்பை உருவாக்குவதும்தான் ஸ்டெம் செல்லின்

வேலை. உதாரணமாக, ரத்தம் போதவில்லை அல்லது ஆரோக்கியமாக இல்லை என்றால், அதை சுத்தப்படுத்தி, புதிதாக ரத்தத்தை உருவாக்கவும் இந்த

ஸ்டெம் செல்லால் முடியும்.

மாதவன் முதல் சஞ்சய் தத் வரை

மூன்றாவது முறை திருமணம் செய்த சஞ்சய் தத் &  மான்யதா, ஹ்ருத்திக் ரோஷன் & சூசன், மாதவன் & சரிதா உட்பட நட்சத்திர தம்பதிகள்

சிலரிடம் ஒரு ஒற்றுமை உள்ளது. என்ன தெரியுமா? இவர்கள் எல்லாரும் ‘ஸ்டெம் செல்’ சேமிப்பை, அதன் வங்கியில் ஆரம்பிக்க முன்வந்துள்ளனர்.
எதற்காக தெரியுமா? தங்கள் வாரிசுகளாவது, எந்த ஆரோக்கிய குறைவும் இல்லாமல், திடகாத்திரமாக வாழ வழி செய்யத்தான். அதெப்படி முடியும்

என்று நீங்கள் கேட்கலாம். வேறொன்றுமில்லை. ஒருவேளை பரம்பரை கோளாறு ஏதாவது இருந்து அது சிக்கலை உருவாக்கி விடக்கூடாதல்லவா?

அதை தடுக்கவே, ஸ்டெம் செல் சேமிப்பு ஊக்குவிக்கப்பட்டு வருகிறது.

எங்கு இருக்கிறது ஸ்டெம் செல்?

உடலில் எங்கு வேண்டுமானாலும் இந்த ஸ்டெம் செல் இருக்கலாம் என்றாலும், முதுகெலும்பிலுள்ள எலும்பு மஜ்ஜையில்தான் அதிகம் இருக்கிறது.

அதை விட, குழந்தை பிறக்கும் போது, தொப்புள் கொடி அறுக்கப்படுகிறதல்லவா? அப்போது வெளியேறும் முதல் ரத்தத்தில் எல்லா வகையான

செல்களும் உள்ளன.

இதை சேமித்தால், அந்த குழந்தையின் வாழ்நாள் முழுக்க எந்த உறுப்பு குறைபாடு ஏற்பட்டாலும், அவற்றை சரி செய்ய முடியும். அதற்கு இந்த ஸ்டெம்

செல் போதும். அதனாலேயே, வெளிநாடுகளில் இந்த ஸ்டெம் செல் மட்டுமல்ல, தொப்புள் கொடியையே சேமிக்கும் வங்கிகள் உள்ளன.
இந்த வங்கிகளில் நம் இளம் இந்திய தம்பதிகள் பலரும் விந்து, கருமுட்டை முதல் ஸ்டெம் செல்கள் வரை சேமித்து வருகின்றனர். இதற்காகவே

ஆண்டுதோறும் கணிசமான கட்டணத்தையும் செலுத்தி வருகின்றனர்.

நோயில்லா எதிர்காலம்

சாதாரண இருமல் முதல் கேன்சர் வரை வருவதற்கு பரம்பரையும் ஒரு காரணம் என்கின்றனர் மருத்துவர்கள். எனவே நம் மரபியல் கூறுகளை சரி

செய்து விட்டால், கண்டிப்பாக எந்த பெரிய வியாதியும் வராது. அதற்கு கைகொடுப்பது செல்கள்தான். எனவேதான் இன்றைய இளைய
தலைமுறையினர், வங்கியில் பணத்தையும், மருத்துவ வங்கியில் ஸ்டெம் செல்களையும் சேமிக்கின்றனர்.
இப்போது சொல்லுங்கள், யூத் லெவலே தனி தானே