Sunday, March 9, 2014

எச்.ஐ.வி. தொற்றிலிருந்து இரண்டாவது குழந்தை விடுதலை

எயிட்ஸ் நோயை ஏற்படுத்தக்கூடிய எச்.ஐ.வி. வைரஸ் தொற்றுக்குள்ளான நிலையில் பிறந்த இரண்டாவது குழந்தையொன்றை குணப்படுத்தியுள்ளதாக அமெரிக்க ஆராய்ச்சியாளர்கள் அறிவித்துள்ளனர். 


கலிபோர்னியா மாநிலத்தில் பிறந்த  மேற்படி குழந்தைக்கு பிறந்து 4 மணித்தியாலங்களில்  எயிட்ஸ் நோய்க்கு எதிரான மருந்துகள் வழங்கப்பட்டு வந்தன. 

தற்போது பெயர் வெளியிடப்படாத அந்த 9 மாதக் குழந்தை, எச்.ஐ.வி.  வைரஸ் தொற்றிலிருந்து  முழுமையாக விடுதலையடைந்து  குணமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. 
இதற்கு முன் அமெரிக்க மிஸிஸிப்பி மாநிலத்தில் எச்.ஐ.வி. வைரஸ் தொற்றுக்குள்ளான நிலையில் பிறந்த  பிறிதொரு குழந்தை மருத்துவ சிகிச்சை மூலம் நோயிலிருந்து பூரண விடுதலை பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.