Sunday, March 27, 2011

உலகின் அதிவேக கணினி தயாரிப்பில் அமெரிக்கா சாதனை - Videos

உலகின் அதிவேக கணினியை தயாரிக்கும் முயற்சியில் அமெரிக்கா வெற்றிபெற்றுள்ளது. இந்த மடிக்கணினியை அமெரிக்க ஆயுதங்கள் பரிசோதனை மையம் தயாரித்துள்ளது. 1000 ட்ரில்லியன் நடவடிக்கைகளை இந்த சாதனைக் கணினி ஒரே வினாடியில் செய்து முடிக்கும் வல்லமை கொண்டது.

அமெரிக்க எரிசக்தி துறையும்     ஐபிஎம்-மும் இந்த சாதனை கணினியைப் அறிவிப்பை நேற்று வெளியிட்டது. ரோட் ரன்னர் என்று பெயரிடப்பட்ட இந்த கணினி அமெரிக்காவின் அணு ஆயுதங்கள் கையிருப்பை பராமரிக்கவும், உலக எரிசக்தி நெருக்கடிகளைத் தீர்க்க உதவவும், மேலும் பல அடிப்படை ஆராய்ச்சிகளுக்கு உதவவும் பயன்படுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.